Category: Tamil Worship Songs Lyrics

  • Enil Varum En Yesuvae எனில் வாரும் என் இயேசுவே

    எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே

    நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே

    என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே

    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே

    என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே

    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே

    தேவா எழுந்து வா தேடும் அமைதி தா – 2

    உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

    பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே

    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே

    சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே

    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா


    Enil Varum En Yesuvae Lyrics in English

    enil vaarum en Yesuvae entum ennodu uravaadavae

    neer inti ontillaiyae ingu neer thaamae en ellaiyae

    en nenja veettinil en inpa paattinilae

    un naamam naan paada en ullam neer vaalavae

    en anputh thaayaaka ennaalum enaik kaakkavae

    en sontham neeyaaka en vaalvum neeyaakavae

    thaevaa elunthu vaa thaedum amaithi thaa – 2

    unai alaiththaen uyir koduththaen uravaith thaetiyae

    payanam thaan naan sella paathaiyum neeyaakavae

    valiyellaam thunnaiyaaka vaalvellaam inithaakavae

    sumaiyellaam sukamaaka pakaiyellaam parivaakavae

    ninaivellaam niraivaaka nenjaோdu nee vaalavae thaevaa

  • Enguthe Ennakanthan Thuyar ஏங்குதே என்னகந்தான் துயர்

    ஏங்குதே என்னகந்தான் துயர்
    தாங்குதில்லை முகந்தான்

    பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
    ஓங்கியே உதிரங்கள்
    நீங்கியே துயர் கண்டு

    மேசியாவென்றுரைத்து யூத
    ராஜனென்றே நகைத்து
    தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
    மாசுகளே சுமத்தி
    ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
    நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு

    யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
    பேதுரு மறுதலிக்க
    சூதா யெரோதே மெய்க்க வெகு
    தீதாயுடை தரிக்க
    நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
    சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு

    நீண்ட குரு செடுத்து எருசலேம்
    தாண்டிமலையடுத்து
    ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல்
    வேண்டும் வசை கொடுத்து
    ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
    மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே


    Enguthe Ennakanthan Thuyar Lyrics in English

    aenguthae ennakanthaan thuyar
    thaanguthillai mukanthaan

    poongaavilae kaninthaengi neer mantada
    ongiyae uthirangal
    neengiyae thuyar kanndu

    maesiyaaventuraiththu yootha
    raajanente nakaiththu
    thooshanniththae atiththu ninaikkutti
    maasukalae sumaththi
    aasaaramintiyae aasaariyanidam
    neesarkal sey kodum thoshamathu kanndu

    yoothaas kaattikkodukka seemon
    paethuru maruthalikka
    soothaa yerothae meykka veku
    theethaayutai tharikka
    naathanae ivvitham neethamontillaamal
    sothanaiyaaych seyyum vaethanaiyaik kanndu

    neennda kuru seduththu erusalaem
    thaanntimalaiyaduththu
    eenndal pinnae thoduththu avarinmael
    vaenndum vasai koduththu
    aanndavar kai kaalil poonndidum aanniyaal
    maanndathinaal narar meennda thentalumae

  • Engumullor Yaarum எங்குமுள்ளோர் யாரும்

    எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
    இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
    யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
    இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே

    1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
      பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
      கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
      செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு
    2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
      இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
      தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
      கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
      அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
      நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே — எங்கு
    3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
      திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
      ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
      வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
      இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
      நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே — எங்கு

    Engumullor Yaarum Lyrics in English

    engumullor yaarum sernthu sthoththarippomae
    isravaelin karththarukkuth thuthi seluththumae
    yaakkopin santhathiyaarum kooti vaarumae
    Yesu engal karththar entu sthoththarippomae

    1. thaeva mainthan Yesuvukkaay sthoththarippomae
      parisuththaakamam eenthatharkaay sthoththarippomae
      kadantha kaala veerarukkaay sthoththarippomae
      jeevan vitta suththarukkaay sthoththarippomae
      kothumai manni thaniththaal ilaapam aethu unndu paareer
      seththathaakil palan mikuthi sthoththarippomae — engu
    2. nampikkai ilakkaavannnam mun nadappomae
      iraajaavin kattalaikkuk kanam koduppomae
      thaeva samookap palakkam ullor payam kollamaattar
      geelppatiyak kattukkonntoor thadumaattam kollaar
      avarkkaay ilanthavarkkup parisu nooraththanaiyaakak kittum
      niththiya makilchchi avarai moodum sthoththarippomae — engu
    3. aththi maram thulirvidaamal ponapothilum
      thiraatchaைch setiyil kani kaannaamal karukippoyinum
      oliva maraththin palankal kooda attuppoyinum
      vayalil makasool inti aekkam vanthapothilum
      immaikkaaka alla Yesunaathar maelae ulla pattu
      nam iruppu paralokaththil sthoththarippomae — engu
  • Engu pogireer yesu deivame எங்கு போகிறீர் இயேசு தெய்வமே

    எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
    எனக்காய் சிலுவையை
    சுமக்கும் தெய்வமே

    பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
    நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
    உம் உள்ளம் உடைந்ததோ
    என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர்

    தீய சிந்தனை நான் நினைத்ததால்
    உன் சிரசில் முள்முடி
    நான் சூட்டினேன்

    பெருமை கோபத்தால்
    உம் கன்னம் அறைந்தேனே
    என் பொறாமை எரிச்சலால்
    உம் விலாவைக் குத்தினேனே

    கசையால் அடித்தது என்
    காம உணர்ச்சியால்
    காறித்துப்பியது என்
    பகைமை உணர்ச்சியால்

    அசுத்த பேச்சுக்கள்
    நான் பேசி மகிழ்ந்ததால்
    கசப்புக்காடியை நான்
    குடிக்கக் கொடுத்தேனே


    Engu pogireer yesu deivame Lyrics in English

    engu pokireer Yesu theyvamae
    enakkaay siluvaiyai
    sumakkum theyvamae

    paarachchiluvaiyo en paavachchiluvaiyo
    neer sumanthathu en paavachchiluvaiyo
    um ullam utainthatho
    en paavach settinaal engu pokireer

    theeya sinthanai naan ninaiththathaal
    un sirasil mulmuti
    naan soottinaen

    perumai kopaththaal
    um kannam arainthaenae
    en poraamai erichchalaal
    um vilaavaik kuththinaenae

    kasaiyaal atiththathu en
    kaama unarchchiyaal
    kaariththuppiyathu en
    pakaimai unarchchiyaal

    asuththa paechchukkal
    naan paesi makilnthathaal
    kasappukkaatiyai naan
    kutikkak koduththaenae

  • Engeyakinum swami எங்கேயாகினும் ஸ்வாமி

    எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
    அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

    பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
    பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

    வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
    போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

    பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
    பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்

    எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
    எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

    உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
    மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே

    தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
    சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

    ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
    ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்


    Engeyakinum swami Lyrics in English

    engaeyaakinum svaami engaeyaakinum
    angae yaesuvae ummai atiyaen pinselvaen

    pangam paadukal ulla pallaththaakkilum
    payamillaamal naan unthan paatham pinselvaen

    vaekum theeyilum minjum vellap perukkilum
    pokumpothum naan angum aekuvaen pinnae

    paal vanaththilum unthan paathai sentalum
    pathaikkaamal naan unthan pakkam pinselvaen

    enakku naesamaay ulla ellaavattaைyum
    eduththittalumae ummai engum pinselvaen

    unthan paathaiyil mosam ontum naeridaa
    manthaaram mappum ummaal maarippokumae

    thaevaiyaanathai ellaam thirupthiyaayth thanthu
    saavu naal varai ennaith thaangi naesippeer

    jeeviththaalum naan eppo seththaalum aiyaa
    aavalaakavae ummai atiyaen pinselvaen

  • Enge sumanthu pogireer எங்கே சுமந்து போகிறீர்

    எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
    எங்கே சுமந்து போகிறீர்

    எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
    அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

    தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
    தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

    வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
    பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

    தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
    மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

    வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
    எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

    மாசணுகாத சத்திய வாசகனே உமது
    தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து


    Enge sumanthu pogireer Lyrics in English

    engae sumanthu pokireer siluvaiyai neer
    engae sumanthu pokireer

    engae sumanthu poreer inthak kaanalil umathu
    angam muluthum Nnoka aiyaa en aesunaathaa

    tholil paaram aluntha thoorkkap pelam illaamal
    thaalun thaththalikkavae thaapa sopam ura neer

    vaathaiyinaal udalum vaatith thavippunndaaka
    paetham illaachchaீmonum pinnaakath thaangivara

    thaayaar aluthuvara saarnthavar pin thodara
    maayam illaatha njaana maathar pulampi vara

    valla paeyaik kollavum marananthanai vellavum
    ellai illaap paavangal ellaam naasamaakavum

    maasanukaatha saththiya vaasakanae umathu
    thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu

  • Enge Oduven Enge Oduven எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

    எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
    வானத்திற்கோ, நிலவிற்கோ
    எங்கே ஓடுவேன்

    1. மலைகளே குன்றுகளே
      மறைத்துக் கொள்ளுங்களே
      நீதிபரர் வருகின்றார்
      ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்
    2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
      உந்தன் தஞ்சம் நானே
      அழைக்கின்றார் இயேசு ராஜன்
      வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

    ஓடி வந்தேன் இதோ
    உம் காயம் என் தஞ்சமே
    அடைக்கலம் புகுந்தேன்


    Enge Oduven Enge Oduven Lyrics in English

    engae oduvaen engae oduvaen
    vaanaththirko, nilavirko
    engae oduvaen

    1. malaikalae kuntukalae
      maraiththuk kollungalae
      neethiparar varukintar
      aiyo naan athamaanaen – engae oduvaen
    2. ennidam otivanthaal pilaippaay
      unthan thanjam naanae
      alaikkintar Yesu raajan
      vanthaen atimai itho – engae oduvaen

    oti vanthaen itho
    um kaayam en thanjamae
    ataikkalam pukunthaen

  • Engalukkullae Vaasam எங்களுக்குள்ளே வாசம்

    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே….
    இந்நாளில் உம சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

    ஆவியானவரே……. ஆவியானவரே…….
    பரிசுத்த ஆவியானவரே

    எப்படி நான் ஜெபிக்கவேண்டும்
    எதற்காக ஜெபிக்க வேண்டும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே……. (2)
    வேத வசனம் புரிந்து கொண்டு
    விளக்கங்களை அறிந்திட
    வெளிச்சம் தாரும் ஆவியானவரே….. (2)

    கவலை கண்ணீர் மறக்கணும்
    கர்த்தரையே நோக்கணும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    செய்த நன்மை நினைக்கணும்
    நன்றியோடு துதிக்கணும்
    சொல்லித் தாரும் ஆவியானவரே

    எங்கு செல்ல வேண்டும்
    என்ன சொல்ல வேண்டும்
    வழி நடத்தும் ஆவியானவரே
    உம் விருப்பம் இல்லாத
    இடங்களுக்குச் செல்லாமல்
    தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

    எதிரிகளின் சூழ்ச்சிகள்
    சாத்தானின் தீக்கணைகள்
    எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
    உடல் சோர்வு அசதிகள்
    பெலவீனங்கள் நீக்கி
    உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே


    Engalukkullae Vaasam Lyrics in English

    engalukkullae vaasam seyyum aaviyaanavarae….
    innaalil uma siththam pol nadaththich sellumaiyaa

    aaviyaanavarae……. aaviyaanavarae…….
    parisuththa aaviyaanavarae

    eppati naan jepikkavaenndum
    etharkaaka jepikka vaenndum
    kattuth thaarum aaviyaanavarae……. (2)
    vaetha vasanam purinthu keாnndu
    vilakkangalai arinthida
    velichcham thaarum aaviyaanavarae….. (2)

    kavalai kannnneer marakkanum
    karththaraiyae Nnokkanum
    kattuth thaarum aaviyaanavarae
    seytha nanmai ninaikkanum
    nantiyodu thuthikkanum
    sollith thaarum aaviyaanavarae

    engu sella vaenndum
    enna solla vaenndum
    vali nadaththum aaviyaanavarae
    um viruppam illaatha
    idangalukkuch sellaamal
    thaduththu niruththum aaviyaanavarae

    ethirikalin soolchchikal
    saaththaanin theekkannaikal
    ethirththu nirka pelan vaenndumae
    udal sorvu asathikal
    pelaveenangal neekki
    ursaakaththaal nirampa vaenndumae

  • Engalukkalla Engalukkalla எங்களுக்கல்ல எங்களுக்கல்ல

    எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
    உந்தன் நாமத்திற்கே மகிமை
    மகிமை …..மகிமை
    மகிமை …..மகிமை

    1. அற்புதம் நடக்கும் போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை
      அதிசயம் காணும்போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை …. 2
      உம் அன்பினால் என் உள்ளத்தை
      நிரம்ப செய்தீரே
      உம் வார்த்தையால் என் வாழ்க்கையை
      ஒளிர செய்தீரே
    2. வியாதிகள் நீங்கும்போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை
      கட்டுகள் உடையும்போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை …. 2
      பெலவீனன் பெலவான் என்பானே
      தரித்திரன் செழிப்பான்
      பூலோகம் எங்கும் சொல்வேனே
      உம் நாமம் பெரியதே

    Engalukkalla Engalukkalla Lyrics in English

    engalukkalla engalukkalla
    unthan naamaththirkae makimai
    makimai …..makimai
    makimai …..makimai

    1. arputham nadakkum pothu
      unthan naamaththirkae makimai
      athisayam kaanumpothu
      unthan naamaththirkae makimai …. 2
      um anpinaal en ullaththai
      nirampa seytheerae
      um vaarththaiyaal en vaalkkaiyai
      olira seytheerae
    2. viyaathikal neengumpothu
      unthan naamaththirkae makimai
      kattukal utaiyumpothu
      unthan naamaththirkae makimai …. 2
      pelaveenan pelavaan enpaanae
      thariththiran selippaan
      poolokam engum solvaenae
      um naamam periyathae
  • Engal tharisanathai engal எங்கள் தரிசனத்தை எங்கள்

    எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
    நிறைவேற்றிடும் ஆவியானவரே

    தரிசனம் தந்தவரே… நிறைவேற்றிட உதவிடுமே…

    நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
    திரும்பவும் தந்திடுமே
    நாங்கள் மறந்து போன தரிசனத்தை
    மீண்டும் புதுப்பித்திடும்

    எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
    நோக்கத்தை நேராக்கிடும்
    உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
    காத்துக் கொள்ளும் தேவனே

    எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்
    அனுபவம் சார்ந்து கொண்டோம்
    உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு
    ஓடிட உதவிடுமே

    நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
    தந்த இவ்வூழியத்தை
    உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
    உந்தன் பலத்தால் நிரப்பிடுமே


    Engal tharisanathai engal Lyrics in English

    engal tharisanaththai engal ooliyaththil
    niraivaettidum aaviyaanavarae

    tharisanam thanthavarae… niraivaettida uthavidumae…

    naangal ilanthu pona unthan vallamaiyai
    thirumpavum thanthidumae
    naangal maranthu pona tharisanaththai
    meenndum puthuppiththidum

    engal paarvaiyai oru visai thelivaakkidum
    Nnokkaththai naeraakkidum
    unthan siththaththai vittu vilakidaamal
    kaaththuk kollum thaevanae

    engal suya palaththai nampi thottup ponom
    anupavam saarnthu konntoom
    unthan kirupaiyai muttilum saarnthu konndu
    otida uthavidumae

    naangal unnmaiyullavarkalentu nampi
    thantha ivvooliyaththai
    unnmaiyaay seythida vaanjikkirom
    unthan palaththaal nirappidumae