Kaariyam Vaikkum

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2

  1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் – 2
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம்
  2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் – 2
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – 2 – உன் காரியம்
  3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் – 2 – என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 3


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply