Author: admin

  • சப்தமாய்ப் பாடி சத்துருவை Sapthamayp pati saththuruvai

    சப்தமாய்ப் பாடி சத்துருவை
    சங்கிலியால் கட்டுவோம்
    நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்
    பாடி உயர்த்திடுவோம்

    இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
    இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்

    புதுப்பாடல் பாடி மகிழ்வோம்
    புனிதர்கள் சபையிலே
    துதிபலி எழும்பட்டும்
    ஜெயக்கொடி பறக்கட்டும்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது

    உண்டாக்கினாரே நம்மை
    உள்ளம் மகிழட்டும்
    ஆளுநர் அவர்தானே
    இதயம் துள்ளட்டும்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது

    தமது ஜனத்தின்மேலே
    பிரியம் வைக்கின்றார்
    வெற்றி தருகிறார்
    மேன்மைப்படுத்துவார்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது

    கர்த்தரை உயர்த்தும் பாடல்
    (நம்) வாயில் இருக்கட்டும்
    வசனம் என்ற போர்வாள்,
    (நம்) கையிலே இருக்கட்டும்
    எழுப்புதல் தேசத்தில்
    பொழுதுபோல் உதித்தது


    Sapthamayp pati saththuruvai
    sangkiliyal kattuvom
    niththam niththam karththar namam
    pati uyarththituvom

    iraja iyesu jivikkinrar
    iraththam sinthi jeyam thanthar

    puthuppatal pati makizhvom
    punitharkal sapaiyile
    thuthipali ezhumpattum
    jeyakkoti parakkattum
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu

    untakkinare nammai
    ullam makizhattum
    aalunar avarthane
    ithayam thullattum
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu

    thamathu janaththinmele
    piriyam vaikkinrar
    verri tharukirar
    menmaippatuththuvar
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu

    karththarai uyarththum patal
    nam vayil irukkattum
    vasanam enra porval
    nam kaiyile irukkattum
    ezhupputhal thesaththil
    pozhuthupol uthiththathu


  • ஜீவனுள்ள தேவன் Jivanulla thevan

    ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
    சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
    பரலோகம் (நம்) தாயகம்
    விண்ணகம் (நம்) தகப்பன் வீடு

    கோடான கோடி தூதர்
    கூடி அங்கே துதிக்கின்றனர்
    பரிசுத்தரே என்று பாடி
    (பாடிப்பாடி) மகிழ்கின்றார்
    பரிசுத்தர் பரிசுத்தர்
    பரலோக தேவன் பரிசுத்தர் – நம்

    பெயர்கள் எழுதப்பட்ட
    தலைப்பேறானவர்கள்
    திருவிழாக் கூட்டமாகக்
    கொண்டாடி மகிழ்கின்றனர்
    அல்லேலூயா ஓசன்னா
    அல்லேலூயா ஓசன்னா
    கொண்டாட்டம் கொண்டாட்டம்
    நம் தகப்பன் வீட்டில்

    பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்
    ஆவி அங்கே
    எல்லாரையும் நியாயம் தீர்க்கும்
    நியாயாதிபதி அங்கே
    நீதிபதி கர்த்தரே
    நீதிபதி கர்த்தரே
    எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர்

    புதிய உடன்பாட்டின்
    இணைப்பாளர் இயேசு அங்கே
    நன்மை தரும் ஆசீர்வாதம்
    பேசும் இரத்தம் அங்கே
    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்


    jivanulla thevan thangkum paraloka erusalem
    siyon malaikku vanthu sernthuvittom
    paralokam nam thayakam
    vinnakam nam thakappan vitu

    kotana koti thuthar
    kuti angke thuthikkinranar
    parisuththare enru pati
    patippati makizhkinrar
    parisuththar parisuththar
    paraloka thevan parisuththar nam

    peyarkal ezhuthappatta
    thalaipperanavarkal
    thiruvizhak kuttamakak
    kontati makizhkinranar
    alleluya oosanna
    alleluya oosanna
    kontattam kontattam
    nam thakappan vittil

    puranamakkappatta nithimankal
    aavi angke
    ellaraiyum niyayam thirkkum
    niyayathipathi angke
    nithipathi karththare
    nithipathi karththare
    ellaraiyum niyayam thirkkum nithipathi avar

    puthiya utanpattin
    inaippalar iyesu angke
    nanmai tharum aasirvatham
    pesum iraththam angke
    iraththam jeyam iraththam jeyam
    iraththam jeyam iraththam jeyam
    iyesu kiristhuvin iraththam jeyam


  • யார் பிரிக்க முடியும் Yar pirikka mutiyum

    யார் பிரிக்க முடியும் நாதா
    உந்தன் அன்பிலிருந்து தேவா

    என் சார்பில் நீர் இருக்க
    எனக்கெதிராய் யார் இருப்பார்

    மகனையே நீர் தந்தீரய்யா
    மற்ற அனைத்தும் தருவீர் ஐயா

    தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான்
    குற்றம் சாட்ட யார் இயலும்
    நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
    தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே

    நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
    அன்பு கூர்ந்த (என்) கிறிஸ்துவினால்
    அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்

    வேதனையோ நெருக்கடியோ
    சோதனையோ பிரித்திடுமோ
    பகைமைகளோ பழிச்சொல்லோ
    பொறாமையோ பிரித்திடுமோ


    Yar pirikka mutiyum natha
    unthan anpilirunthu theva

    en sarpil nir irukka
    enakkethiray yar iruppar

    makanaiye nir thanthirayya
    marra anaiththum tharuvir aiya

    therinthukonta um makan makal nan
    kurram satta yar iyalum
    nithimanay aakkivittir
    thantanaith thirppu enakkillaiye

    nikazhvanavo varuvanavo
    vazhvo savo piriththitumo
    anpu kurntha en kiristhuvinal
    anaiththilum nan verri peruven

    vethanaiyo nerukkatiyo
    sothanaiyo piriththitumo
    pakaimaikalo pazhissollo
    poramaiyo piriththitumo


  • இயேசுவின் பிள்ளைகள் Iyesuvin pillaikal

    இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
    எப்போதும் மகிழ்ந்திடுவோம்
    இயேசுவின் பிள்ளைகளே
    எப்போதும் மகிழ்ந்திருங்கள்
    நேசரில் களிகூருங்கள்

    எந்நேரமும் எவ்வேளையும்
    இயேசுவில் களிகூருவோம்
    நம் நேசரில் களிகூருவோம்

    இன்று காணும் எகிப்தியரை
    இனிமேல் காணமாட்டோம்
    நமக்காய் யுத்தம் செய்வார்

    நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
    குறிசொல்லல் எதுவும் இல்லை
    சாத்தான் நம் காலின் கீழே

    காற்றை நாம் காணமாட்டோம்
    மழையையும் பார்க்க மாட்டோம்
    வாய்க்கால்கள் நிரப்பப்படும்

    நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    அதிகமாய் செய்திடுவார்
    அதிசயம் செய்திடுவார்


    Iyesuvin pillaikal nangkal
    eppothum makizhnthituvom
    iyesuvin pillaikale
    eppothum makizhnthirungkal
    nesaril kalikurungkal

    enneramum evvelaiyum
    iyesuvil kalikuruvom
    nam nesaril kalikuruvom

    inru kanum ekipthiyarai
    inimel kanamattom
    namakkay yuththam seyvar iyesu

    namakku ethiray manthiram illai
    kurisollal ethuvum illai
    saththan nam kalin kizhe inru

    karrai nam kanamattom
    mazhaiyaiyum parkka mattom
    vaykkalkal nirappappatum

    ninaippatharkum ventuvatharkum
    athikamay seythituvar
    athisayam seythituvar


  • எரிகோ கோட்டை Eriko kottai

    எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
    சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே
    யோர்தான் நதியையும் கடக்க முடியுமே
    இயேசுவின் பேரை சொன்னால்
    போதுமே உன் நாமமே

    மோசேயோடே இருந்த தேவன்
    அவர் உன்னோடும் வந்திடுவார்
    இஸ்ரவேலை வழி நடத்தினவர்
    உன்னையும் அவர் நடத்திடுவார்
    கலங்காதே நீ திகையாதே
    உன் தேவன் என்றும் உன்னோடு
    அவரே உந்தன் கன்மலை
    அவரே உந்தன் கன்மலை

    ஆகாரை தேற்றியவர் – உன்
    இருதயத்தையும் மாற்றிடுவார்
    எஸ்தரை பலப்படுத்தினவர்
    உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார்
    அஞ்சாதே நீ பதறாதே
    அன்பின் தேவன் உன் அருகிலே
    அவரே உந்தன் அடைக்கலமே
    அவரே உந்தன் அடைக்கலமே

    கிதியோன் மேல் இருந்த கிருபை
    உன் மேலும் இறங்கிடுதே
    தாவீதை உயர்த்தினவர்
    உன்னையும் மேன்மைப் படுத்திடுவார்
    அவரிடம் நீ வந்திடு
    அவரிடம் உன்னை தந்திடு
    அவரே உன்னை வழி நடத்திடுவார்
    அவரே உன்னை வழி நடத்திடுவார்


    Eriko kottai itinthu vizhukuthe
    sivantha samuththiram irantay pilakkuthe
    yorthan nathiyaiyum katakka mutiyume
    iyesuvin perai sonnal
    pothume un namame

    moseyote iruntha thevan
    avar unnotum vanthituvar
    isravelai vazhi nataththinavar
    unnaiyum avar nataththituvar
    kalangkathe ni thikaiyathe
    un thevan enrum unnotu
    avare unthan kanmalai
    avare unthan kanmalai

    aakarai therriyavar un
    iruthayaththaiyum marrituvar
    estharai palappatuththinavar
    unnaiyum sthirappatuththituvar
    anysathe ni patharathe
    anpin thevan un arukile
    avare unthan ataikkalame
    avare unthan ataikkalame

    kithiyon mel iruntha kirupai
    un melum irangkituthe
    thavithai uyarththinavar
    unnaiyum menmaip patuththituvar
    avaritam ni vanthitu
    avaritam unnai thanthitu
    avare unnai vazhi nataththituvar
    avare unnai vazhi nataththituvar


  • கடும் காற்றோ கடும் katum karro katum

    கடும் காற்றோ கடும் கடலோ
    கடும் மழையோ கடும் புயலோ
    உம் அன்பை விட்டென்னை
    பிரிக்குமோ இயேசுவே
    உம்மையே பற்றிக் கொள்வேன்
    இயேசுவே இயேசுவே இயேசுவே
    இயேசுவே உம்மையே பற்றிக் கொள்வேன்
    உம்மையே பற்றிக் கொள்வேன்

    உயர்வோ தாழ்வோ
    பசியோ பட்டினியோ

    பணமோ பொருளோ
    பட்டமோ பதவியோ

    வியாதியோ வறுமையோ
    கண்ணீரோ கடன் தொல்லையோ


    katum karro katum katalo
    katum mazhaiyo katum puyalo
    um anpai vittennai
    pirikkumo iyesuve
    ummaiye parrik kolven
    iyesuve iyesuve iyesuve
    iyesuve ummaiye parrik kolven
    ummaiye parrik kolven

    uyarvo thazhvo
    pasiyo pattiniyo

    panamo porulo
    pattamo pathaviyo

    viyathiyo varumaiyo
    kanniro katan thollaiyo


  • தாவீதின் குமாரனே Thavithin kumarane

    தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
    பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன்
    எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் நான்
    பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும்

    மனமோ உம்மைக் காண தினம் துடிக்குதே
    ஜனமோ உம்மைக் காண
    எனை விடாமல் தடுக்குதே
    மரியாளின் மைந்தனே
    யோசேப்பின் குமாரனே
    தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
    யோசேப்பின் குமாரனே எனக்கு இரங்கும்

    மனிதரை கண்டேனைய்யா
    இதயத்தைக் காணவில்லை
    குரல்தானை கேட்டோமைய்யா
    இரக்கத்தைக் காணவில்லை
    ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே
    யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும்
    யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும்

    பட்டதுன்பம் போதுமைய்யா
    தொட்டு சுகமாக்குமைய்யா
    பட்டு போன என் வாழ்க்கை
    மலர்ந்திட வேண்டுமைய்யா
    எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே
    நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும்
    நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும்
    – தாவீதின்
    இரங்கும் தேவா இரங்கும்
    இரங்கும் இரங்கும்


    thavithin kumarane enakku irangkum
    pavi nan parththimeyu katharukiren
    erikovin vithiyile eththanai nal nan
    piththanay parvaiyinri alaiya ventum

    manamo ummaik kana thinam thutikkuthe
    janamo ummaik kana
    enai vitamal thatukkuthe
    mariyalin mainthane
    yoseppin kumarane
    thavithin kumarane enakku irangkum
    yoseppin kumarane enakku irangkum

    manitharai kantenaiyya
    ithayaththaik kanavillai
    kuralthanai kettomaiyya
    irakkaththaik kanavillai
    aapirakamin thevane iisakkin theyvame
    yakkopin rajane enakkirangkum
    yoseppin theyvame enakkirangkum

    pattathunpam pothumaiyya
    thottu sukamakkumaiyya
    pattu pona en vazhkkai
    malarnthita ventumaiyya
    eliyavin theyvame elisavin rajane
    nan vanangkum theyvame enakkirangkum
    nan porrum rajane enakkirangkum
    thavithin
    irangkum theva irangkum
    irangkum irangkum


  • போலே போலே Pole pole

    போலே போலே போலே இஸ்ரவேலே
    மேலே மேலே மேலே கிருபையாலே
    ஒரு தந்தையை போலே ஒரு தாயை போலே
    சிநேகிதனை போலே இஸ்ரவேலே

    காக்கின்ற செட்டைகளோடு
    சுமக்கின்ற கழுகினைப் போலே
    கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே
    தங்கும் நேச புறாவைப் போலே

    பெந்தெகோஸ்தே நாளின் ஆவி போலே
    பொழிகின்ற ஆவி மழையாலே
    அக்னி நாவை போலே பல பாஷையாலே
    பேசும் ஆவியானவர் போலே


    pole pole pole isravele
    mele mele. mele kirupaiyale
    oru thanthaiyai pole oru thayai pole
    sinekithanai pole isravele

    kakkinra settaikalotu
    sumakkinra kazhukinaip pole
    kanmalaiyin mele vetippin ulle
    thangkum nesa puravaip pole

    penthekosthe nalin aavi pole
    pozhikinra aavi mazhaiyale
    akni navai pole pala pashaiyale
    pesum aaviyanavar pole



  • சிட்டுக்குருவி காட்டுக்குருவி Sittukkuruvi kattukkuruvi

    சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது
    காட்டுக்குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – ஏ
    கன்னிமரி மடியினிலே கண்ணின் மணி தவழுது
    இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு இதை காண காணான் மேய்ப்பர்களின் கொண்டாட்டம் அங்கிருக்கு தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா

    சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன்
    நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும்

    கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது
    கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
    தங்க தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
    அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு

    கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே
    முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே
    மண்டியிட்டு கை கூப்பி மன்னவனே உம்மை வாழ்த்தி அண்டிவந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே


    Sittukkuruvi kattukkuruvi pattup patuthu
    kattukkuruvi vittukkuruvi thalam potuthu ee
    kannimari matiyinile kannin mani thavazhuthu
    ithai kana vana nyanavankal kuttam vanthirukku
    ithai kana kanan meypparkalin kontattam
    angkirukku
    thalelo ooho thalelo thayyarathayya

    saththiraththin natuvinile sariththira nayakan
    niththirai kolvathuthan eththanai eththanai azhako
    unnathaththil makimaiyum pumiyile samathanamum
    manushar mel piriyamum untakattum

    kanakuyil kuvuthu kannin mani azhukuthu
    kannimari thalattil thavazhnthu thavazhnthu natakkuthu
    thangka thottil thalattu tharaniyile sirattu
    anpu theyvam palakanay ooti aatum vilaiyattu

    kannimari palakane mannil vantha mannavane
    munnanai mithamarntha sinna kumarane
    mantiyittu kai kuppi mannavane ummai vazhththi
    antivanthom nannavane engkal anpu theyvame


  • ஐயா அம்மா கேளுங்க Aiya amma kelungka

    ஐயா அம்மா கேளுங்க
    ஆண்டவரைப் பாருங்க
    அங்க இங்க உட்காந்து
    நான் சொல்லுறதை கேளுங்க
    கேளுங்க கேளுங்க கேளுங்க
    ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க
    இந்த கிறிஸ்தவன் இல்லைன்னா
    இந்த ஊருக்கு நிம்மதி ஏது
    இந்த இயேசு சாமி இல்லைன்னா
    இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது
    எங்க ஆலயம் இல்லைன்னா
    இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது

    உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி
    உடைச்சிப் போட்டவன் கிறிஸ்தவன்
    தவிச்சவனுக்கு தாகத்துக்கு
    தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன்
    ஜாதியை ஒழிச்சவன் கிறிஸ்தவன்
    ஜனங்கள நேசித்தவன் கிறிஸ்தவன்

    அரை துணி கால் துணி
    போட்டுத் திரிஞ்ச நம்மள
    பேண்ட் சட்டை போட வச்சி
    அழகு பார்த்தவன் கிறிஸ்தவன்
    படிப்பக் கொடுத்தவன் கிறிஸ்தவன்
    பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன்

    சண்ட போட மாட்டோம்
    வீணா மண்டைய உடைக்க மாட்டோம்
    இரத்தஞ்சிந்த மாட்டோம்
    வீண் வம்புக்கு போக மாட்டோம்
    முழங்கால் போடுபவன் கிறிஸ்தவன்
    எதையும் சாதிப்பவன் கிறிஸ்தவன்


    Aiya amma kelungka
    aantavaraip parungka
    angka ingka utkanthu
    nan sollurathai kelungka
    kelungka kelungka kelungka
    aantavarin varththaikal kelungka
    intha kiristhavan illainna
    intha uurukku nimmathi eethu
    intha iyesu sami illainna
    intha ulakaththirku nimmathi eethu
    engka aalayam illainna
    intha ulakaththirku nimmathi eethu

    uyarntha jathi thazhntha jathi
    utaissip pottavan kiristhavan
    thavissavanukku thakaththukku
    thanni kotuththavan kiristhavan
    jathiyai ozhissavan kiristhavan
    janangkala nesiththavan kiristhavan

    arai thuni kal thuni
    pottuth thirinysa nammala
    pent sattai pota vassi
    azhaku parththavan kiristhavan
    patippak kotuththavan kiristhavan
    pasaththaik kattinavan kiristhavan

    santa pota mattom
    vina mantaiya utaikka mattom
    iraththanysintha mattom
    vin vampukku poka mattom
    muzhangkal potupavan kiristhavan
    ethaiyum sathippavan kiristhavan