Author: admin

  • ஆண்டவரின் திருமகனே aantavarin thirumakane

    ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
    உண்மைதனை அறிவித்த அடையாளம்
    ஏராளம் அந்த அடையாளம் கண்டு
    கொண்டு அவர் வழியில் செல்வது தான்
    (இயேசு) திருசபையில் நாம்
    காணும் வாழ்வாகும்

    கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
    திரட்சை ரசம்ஆகியதே
    அற்புதத்தில் முதலாகும் அன்று
    கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
    மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
    அடையாளம் இரண்டாகும்
    முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
    முடியாத நோய் தீர்த்த
    எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
    வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்
    ஐயாயிரம் பேர உண்ட கலிலேயா
    அருள் நிகழ்ச்சி நான்காகும்

    கடல் மீது நடந்து வந்து
    கடும் புயல் தானடக்கி
    கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
    ஒரு குருடனுக்கு பார்வை தந்து
    உலகின் ஒளி அவரே என
    வெளியான தத்துவமே ஆறாகும்
    இறந்து விட்ட லாசுருவை
    எழுப்பியவர் இறைமகனே
    என்பது தான் ஏழாகும் இன்னும்
    எண்ணில்லா அற்புதத்தை
    இவ்வுலகில் செய்து வைத்த
    இயேசுவின் மேல் அன்பு
    வைத்தால் நலமாகும்


    aantavarin thirumakane iyesu enra
    unmaithanai ariviththa ataiyalam
    eeralam antha ataiyalam kantu
    kontu avar vazhiyil selvathu than
    iyesu thirusapaiyil nam
    kanum vazhvakum

    kananur kalyanaththil thannirai
    thiratsai rasamaakiyathe
    arputhaththil muthalakum anru
    kappar nakar athikari makan uyirai
    mittuththantha karththar ennum
    ataiyalam irantakum
    muppaththettu aantukalay
    mutiyatha noy thirththa
    erusalemin arutseyale munrakum
    verum appam ainthu iinirantil
    aiyayiram pera unta kalileya
    arul nikazhssi nankakum

    katal mithu natanthu vanthu
    katum puyal thanatakki
    kanivotu kaththa seyal ainthakum
    oru kurutanukku parvai thanthu
    ulakin oli avare ena
    veliyana thaththuvame aarakum
    iranthu vitta lasuruvai
    ezhuppiyavar iraimakane
    enpathu than eezhakum innum
    ennilla arputhaththai
    ivvulakil seythu vaiththa
    iyesuvin mel anpu
    vaiththal nalamakum


  • இயேசுவின் தோற்றம் Iyesuvin thorram

    இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம்
    இறைமகன் மனுவாய் ஏகிய பயணம்
    வந்தபின் வளர்ந்தது தேவனின் பயணம்
    வழியாய் ஒளியாய் விளங்கிய பயணம்

    பன்னிரு வயதில் பாஸ்கா பயணம்
    பண்டிதரை எங்கள் தெளிவித்த பயணம்
    பெற்றோர் மகிழ வளர்ந்த பின் வந்தது
    பிறவியின் இலட்சியம் செயல்படும் பயணம்

    சமாரியர் மண்ணில் சத்திய பயணம்
    சாய்ந்த இனத்தையும் நிமிர்த்திய பயணம்
    ஒதுக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டு
    தண்ணீர் அருந்திய தலைவனின் பயணம்

    உலக உயிர்களை இரட்சிக்கும் பயணம்
    உத்தம கர்த்தரின் மீட்பின் பயணம்
    ஆண்டவர் மனம் போல் மனுகுலம் துலங்க
    அழைத்ததும் உழைத்ததும் இயேசுவின் பயனம்


    Iyesuvin thorram piravippayanam
    iraimakan manuvay eekiya payanam
    vanthapin valarnthathu thevanin payanam
    vazhiyay oliyay vilangkiya payanam

    panniru vayathil paska payanam
    pantitharai engkal theliviththa payanam
    perror makizha valarntha pin vanthathu
    piraviyin ilatsiyam seyalpatum payanam

    samariyar mannil saththiya payanam
    sayntha inaththaiyum nimirththiya payanam
    othukkappatta pennitam kettu
    thannir arunthiya thalaivanin payanam

    ulaka uyirkalai iratsikkum payanam
    uththama karththarin mitpin payanam
    aantavar manam pol manukulam thulangka
    azhaiththathum uzhaiththathum iyesuvin payanam


  • ஜெபமே ஜெயம் Jepame jeyam

    ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
    இயேசு ஜெபமே ஜெயம்
    அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்கு
    ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின்
    ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம்

    ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றி
    துதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலே
    கதி நீரே மதி நீரே (2)
    கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில்
    இணையில்லா இன்பம் பெற

    முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும்
    உம் மீது அன்பு கூர்ந்து உன்னத வாழ்வு பெற
    தன்னை போல பிறர் மேலே
    அன்பு கூர்ந்து வாழ்ந்தென்றும் தரணியில்
    தாழ்வின்றி தழைத்தோங்கி சிறந்திடவே


    jepame jeyam jepame jeyam
    iyesu jepame jeyam
    apayam apayam enru alainthitum mantharkku
    aanantha vazhvalikkum aantavar iyesuvin
    jepame jeyam iyesu jepame jeyam

    oru manathotu vanthu un thiru namam porri
    thuthi kitham patitum thuyavar vazhvinile
    kathi nire mathi nire kannirai thutaippavare
    ennalum ivvulakil inaiyilla inpam pera

    muzhu aathmavotum muzhu iruthayaththotum
    um mithu anpu kurnthu unnatha vazhvu pera
    thannai pola pirar mele
    anpu kurnthu vazhnthenrum tharaniyil
    thazhvinri thazhaiththongki siranthitave


  • எங்கள் பரலோக Engkal paraloka

    எங்கள் பரலோக நன்னாடு பரன்
    இயேசுவின் பொன் வீடு
    தூதரோடு கூடி துதி கீதம் பாடி
    துயரின்றி வாழும் தூய நாடு

    கர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்கு
    கணக்கற்ற தெய்வங்கள் இருபதில்லை
    விக்ரக உருவ சிலை வணக்கம் அந்த
    விண்ணக தேசத்தில் நடப்பதில்லை
    இயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்கு
    எங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடு
    ஏழாம் நாளாம் ஓய்வு நாளில்
    இயேசுவை எல்லோரும் துதிக்கும் நாடு

    பெற்று வளர்த்த தாய் தந்தையை மதியா
    பிள்ளைக்கு அங்கு இடமில்லை
    பொய் கொலை களவு விபசாரம் செய்யும்
    புல்லர்கள் அங்கு செல்வதில்லை
    மாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்ட
    துர் மார்க்கர் அங்கு இருப்பதில்லை
    மாதேவன் இயேசு வகுத்திட்ட வழியில்
    வாழ்ந்திட்ட மனிதர்கள் வாழும் நாடு


    engkal paraloka nannatu paran
    iyesuvin pon vitu
    thutharotu kuti thuthi kitham pati
    thuyarinri vazhum thuya natu

    karththar iyesu kiristhu anri angku
    kanakkarra theyvangkal irupathillai
    vikraka uruva silai vanakkam antha
    vinnaka thesaththil natappathillai
    iyesuvin thirunama makimai onre angku
    engkengkum oongki olikkum natu
    eezham nalam ooyvu nalil
    iyesuvai ellorum thuthikkum natu

    perru valarththa thay thanthaiyai mathiya
    pillaikku angku itamillai
    poy kolai kalavu vipasaram seyyum
    pullarkal angku selvathillai
    marran manaiviyai issikkum mathiketta
    thur markkar angku iruppathillai
    mathevan iyesu vakuththitta vazhiyil
    vazhnthitta manitharkal vazhum natu


  • என்னையாளும் இன் Ennaiyalum inpa

    என்னையாளும் இன்ப நாதனே என்
    இயேசு மணாளனே –
    துணையாரும் இல்லை என்று
    மனம் நொந்து போனேன்
    துணையாக வந்து தோள் தந்து என்னை
    மீட்ட தேவனே – என்னையாளும்

    மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்
    தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்
    அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
    புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்

    கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
    முரடான காடுகள் முள் கல் பாதைகள்
    அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்
    இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே

    கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்
    இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்
    தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா
    தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே


    ennaiyalum inpa nathane en
    iyesu manalane
    thunaiyarum illai enru
    manam nonthu ponen
    thunaiyaka vanthu thol thanthu ennai
    mitta thevane ennaiyalum

    manam nonthu vatinen thiru patham thetinen
    thinam kannir sinthinen muzhangkalil thangkinen
    azhum ennai theti vanthu anaiththu anpil aazhththinar
    puzhu ennai thottu than pol puthu rupam aakkinar

    karatana metukal katum pallaththakkukal
    muratana katukal mul kal pathaikal
    avamana ninthaikal evai vantha pothilum
    ithu enthan pakkiyam ena sonna iyesuve

    katankaran aanathal utan vantha patukal
    itam mari poyinum thatumara seythitum
    thatumarum kalkal um mun thallatalakuma
    thallatum ennai thangki nil enra iyesuve


  • அத்திமரம் துளிர் Aththimaram thulir

    அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே
    ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே
    இயேசு வருகையின் நேரமே

    நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காதுகர்த்தரின் வருகை நிற்காது

    கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார்இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே
    கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது

    கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும்
    கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே
    கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது


    aththimaram thulir vittathu vasantha kalame
    aapaththukkal nerungkinathu varukaiyin nerame
    iyesu varukaiyin nerame

    nattukku natu yuththangkalin
    seythikal ketkum enrar
    inru nattukku natu yuththangkalitn
    seythi kettituthe
    vittukku vitu janam ezhumpi
    pakaiyinil mutiyum enrar
    inru vittukku vitu janam ezhumpi
    pakaiyinil mutinthituthe
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam karththarin
    varukai nirkathu
    karththarin varukai nirkathu

    kollai noykalum kolaiveriyum
    kukkural ketkum enrar
    inru kollai noykalum kolaiveriyum
    kukkural kettituthe
    panysangkalum kalakangkalum
    parinai kalakkum enrar
    inru panysangkalum kalakangkalum
    parinai kalakkituthe
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam
    karththarin varukai nirkathu
    karththarin varukai nirkathu

    kallaththirkkatharisikalum anthikkiristhukalum
    karththarin namam thariththu
    kontu vanysiththu vazhvar enrare
    kallaththirkkatharisikalum anthikkiristhukalum
    karththarin peyarai solli kontu
    vanysiththu vazhvar enrare
    kalangkitathe natungkitathe
    karththarin varththai niraiveruthu
    kalam ithu kataisi kalam
    karththarin varukai nirkathu
    karththarin varukai nirkathu


  • தேவன் இல்லையென்று Thevan illaiyenru

    தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்
    இயேசு தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்
    அவன் வார்த்தை உண்மையில்லை
    அவன் வாழ்ந்தும் நன்மையில்லை
    அவன் வாழ்ந்தும் நன்மையில்லை

    தன்னையும் தேடுவபவன் இந்த மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் அங்கே நல்லவர் யாருமில்லை

    பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை
    கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார்


    Thevan illaiyenru mathiketan sollukinran
    iyesu thevan illaiyenru mathiketan sollukinran
    avan varththai unmaiyillai
    avan vazhnthum nanmaiyillai
    avan vazhnthum nanmaiyillai

    thannaiyum thetuvapavan intha mannile unto enru
    vallavar kannokkinar angke nallavar yarumillai

    pavam seypavarkal thevanai thozhuvathillai
    karththaro nithimanin santhathitiyotiruppar


  • மெய் பொருள் யாரென்று Mey porul yarenru ariyatha

    மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
    வையகமெல்லாம் தேடுகின்றார் பல
    வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்

    என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று
    எடுத்துச் சொன்னவர் இயேசு
    இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
    தன்னை அளித்தவர் இயேசு

    கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்
    கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது
    கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி
    காசுக்காக போகும் விற்பனையே
    சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த
    சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே
    மெய் பொருளே இயேசு மெய் பொருளே
    இயேசு மெய் பொருளே
    இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை
    இருப்பதெல்லாம் இயேசு திருவருளே


    mey porul yarenru ariyatha mantharkal
    vaiyakamellam thetukinrar pala
    vativaththil theyvaththai vanangkukinrar

    ennaiyallal oru theyvamillai enru
    etuththus sonnavar iyesu
    intha mannulakil oru manitha vativaki
    thannai aliththavar iyesu

    kallalum mannalum kaikalin thiranalum
    katavulenna seykinrar karpanaiye athu
    kataivithiyil vanthu viyapara porulaki
    kasukkaka pokum virpanaiye
    saththiya sanmarkka mukthi vazhi arintha
    siththar ellam unarntha mey porule
    mey porule iyesu mey porule
    iyesu mey porule
    ippuviyil atharku inaiyaka verillai
    iruppathellam iyesu thiruvarule


  • அன்பே தான் உருவாக வந்தார் Anpe than uruvaka vanthar

    அன்பே தான் உருவாக வந்தார்
    அன்பே தான் மொழியாக தந்தார்
    அன்பே தான் வழியாக நடந்தார்
    இயேசு இயேசு இயேசு

    அறவாழ்வு நெறி மீறி அலைகின்ற மனிதன்
    அழிக்கின்ற பெரும் பாவம் புரிந்தான்
    அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு
    அருள் செய்ய மனு வேடம் கொண்டார்

    மறை ஞானம் மொழி பேசி பணி யாவும் செய்தார்
    மக்கள் தம் பாவம் சுமந்தார்
    மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்டார்
    மனக்கோயில் உறை தெய்வம் ஆனார்


    anpe than uruvaka vanthar
    anpe than mozhiyaka thanthar
    anpe than vazhiyaka natanthar
    iyesu iyesu iyesu

    aravazhvu neri miri alaikinra manithan
    azhikkinra perum pavam purinthan
    athu kantu peranpu irai mainthan iyesu
    arul seyya manu vetam kontar

    marai nyanam mozhi pesi pani yavum seythar
    makkal tham pavam sumanthar
    maruvazhvu namakkellam tharam mittukkontar
    manakkoyil urai theyvam aanar


  • வேர்வை இரத்தாமாய் மாறிடவே vervai iraththamay maritave

    வேர்வை இரத்தாமாய் மாறிடவே
    வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
    தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே
    தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
    என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா
    உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா

    பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
    பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
    முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய
    முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன-நினைத்தீரோ

    உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
    உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்
    உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று
    உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே – என்ன
    -நினைத்தீரோ

    பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
    பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
    வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
    யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே– என்ன நினைத்தீரோ


    vervai iraththamay maritave
    viyakulaththal vethanaiyil poritave
    thangka thuyar thanil nir thanimaiyile
    thavikkinra pothu sitarkal urangkaiyile
    enna ninaiththiro en iyesu natha
    ummai nan ninaikkaiyil urukukinrenayya

    parpala athisayangkalai parththarinthavanum
    panappaiyai than tholil sumanthe thirinthavanum
    muppathu vellikkaka mokam kontu mosam seyya
    muththamittu ummai kattik kotuththa velaiyile -enna
    -ninaiththiro

    umakkaka jivanaith tharuven enravanum
    un nimiththan ethu varinum itaral ataiyen enravanum
    uyirukkay payam nirainthu ummaiyariyen enru
    umakku ethire saththiyam seythitum velaiyile – enna
    -ninaiththiro

    para siluvai athu tholil amizhnthitave
    patham itariye nir parithaviththu senritave
    varinal atikkum pothu valiyinal thutiththitave
    yaritamum sollamal nir eengki thaviththitum velaiyile
    enna ninaiththiro