Author: admin

  • இயேசு நம்பி iyEsu nampi

    இயேசு நம்பி தான் நான்
    வாழ்ந்திருக்கேன் அவர்
    பேச்சை நம்பித்தான் நான்
    வளர்ந்திருக்கேன் இயேசு
    வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது
    வந்து வந்து தேத்தும்மா

    தாய் என்னை மறந்தாலும் இயேசு
    நான் உன்னை மறவேன் என்றார்
    தந்தை என்னை வெறுத்தாலும்
    என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்
    பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்
    பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே

    உலகம் முடிவு பரியந்தம் நான்
    உன்னோடு இருப்பேன் என்றார்
    இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்
    உன்னிலே வைப்பேன் என்றார்
    உன் மேல் என் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்வேன் என்றார்
    உன்னை நான் ஒரு போதும்
    கைவிட மாட்டேன் என்றார்

    காலங்கள் மாறிவிடும் என் இயேசு
    கர்த்தரோ மாறமாட்டார்
    கோலங்கள் அழிந்து விடும் என் இயேசு
    கொள்கையோ நிலைத்து நிற்கும்
    வானமும் பூமியும் ஒருநாள் ஒழிந்திடும்
    தேவனின் வார்த்தையோ
    எந்நாளும் ஒழிவதில்லை


    iyesu nampi than nan
    vazhnthirukken avar
    pessai nampiththan nan
    valarnthirukken iyesu
    vakkuththaththam en nenysile athu
    vanthu vanthu theththumma

    Thay ennai maranthalum iyesu
    nan unnai maraven enrar
    thanthai ennai veruththalum
    en iyesu thangki sumappen enrar
    panthangkal sonthakal parinil maritum
    paraman iyesuvo enrenrum maritare

    ulakam mutivu pariyantham nan
    unnotu iruppen enrar
    intha ulakam tharakkutatha samathanam
    unnile vaippen enrar
    un mel en kannai vaiththu
    aalosanai solven enrar
    unnai nan oru pothum
    kaivita matten enrar

    kalangkal marivitum en iyesu
    karththaro maramattar
    kolangkal azhinthu vitum en iyesu
    kolkaiyo nilaiththu nirkum
    vanamum pumiyum orunal ozhinthitum
    thevanin varththaiyo
    ennalum ozhivathillai


  • ஆயிரம் இருந்து Aayiram irunthu

    ஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவ
    ஆலயம் ஒன்றே போதும்
    நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு
    நம் நாயகன் அன்பொன்றே போதும்
    இயேசு நாயகன் அன்பொன்றே போதும்

    காலமென்னும் ஊஞ்சலிலே
    கனிவுடனே நம்மை ஆட வைத்தார்
    அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்
    நல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்
    வேதனை தீயால் புடமிட்டார்
    தேவா ……. தேவா …… தேவா ….
    கடும் சோதனையால் நல் மெருகிட்டார்

    ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்
    இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும்
    ஆத்தும மீட்பு இல்லையென்றால்
    அவைகளினால் ஒரு நன்மையில்லை
    ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை
    மனமே மனமே மனமே அந்த
    அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை


    aayiram irunthu enna namakku thEva
    aalayam onRE pOthum
    naLellam vazhnthenna namakku
    nam nayakan anponRE pOthum
    iyEsu nayakan anponRE pOthum

    kalamennum uunysalilE
    kanivutanE nammai aata vaiththar
    anpinilE nammai varththetuththar
    nalla paNpinilE nammai thOyththetuththar
    vEthanai thIyal putamittar
    thEva thEva thEva
    katum sOthanaiyal nal merukittar

    aasthiyai malaippOl kuviththalum
    intha akilam muzhuvathaiyum sErththalum
    aaththuma mItpu illaiyenRal
    avaikaLinal oru nanmaiyillai
    aaNtavar paththiraththil pangkumillai
    manamE manamE manamE antha
    aruL nathar maLikaiyil itamumillai


  • எல்லா மகிமையும் Ella makimaiyum

    எல்லா மகிமையும் கர்த்தருக்கே
    இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
    வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
    வாழும் உயிர்களின் தந்தைக்கே

    வானும் ஒளியும் நிலமும் நீரும்
    காற்றும் முதலில் படைத்தாரே
    வகை வகையான பயிர்களும்
    உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
    ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
    அவர் தன் சாயலில் படைத்தாரே
    அது முதல் உலகில் மனுகுலம்
    பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே

    தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
    சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
    தன் வழி நடக்கும் தலைமுறை
    தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
    அவன் வழி உலகில் மனிதரை
    எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
    அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
    மீண்டும் நிறைந்திட வகுத்தாரே


    ella makimaiyum karththarukke
    ingke ella menmaiyum iraivanukke
    vallan aantavar parama pitha vinnil
    vazhum uyirkalin thanthaikke

    vanum oliyum nilamum nirum
    karrum muthalil pataiththare
    vakai vakaiyana payirkalum
    uyirkalum pataiththu perukita vithiththare
    aatham manithanai eeval mangkaiyai
    avar than sayalil pataiththare
    athu muthal ulakil manukulam
    paluki arul vazhi natanthita vithiththare

    thavarukal pavangkal valarththitum
    saththan manukkalil kalanthita kantare
    than vazhi natakkum thalaimurai
    thazhaikka aapirahamai azhaiththare
    avan vazhi ulakil manitharai
    ellam aasirvathippen enrare
    athumuthal thuya sanror thalaimurai
    mintum nirainthita vakuththare


  • கடவுள் உண்டு katavul untu

    கடவுள் உண்டு தான்
    அதுவும் ஒன்று தான்
    கற்பனையில் உருவாகும் கல்லும்
    மண்ணும் கடவுளல்ல
    மடமை என்று ஓர் மடத்தின்
    மண்டபத்தின் மலை உச்சியில்
    உடமையும் பொருள் கொடுத்து
    முடியும் பண்டிகை கடவுளல்ல

    கூழுக்கு வழியில்லா மக்கள்
    விதி மட்கி மாளும் போது
    ஆளுக்கொரு தெய்வம் என்று
    நாளுக்கொரு சடங்குகள் ஏன்
    உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்
    ஒளியான எள்ளத்தும் களமில்லா
    இயேசுவே கடவுள் என்போம்

    பாவத்தை கண்ணீராக பருகுகின்ற
    மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு
    சாத்திரங்கள் என்ன செய்யும்
    பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி
    பாவத்தின் பலியாகி…. ஆ….
    சிலுவையில் சாபம் தீர்த்த
    இயேசுவே கடவுள் என்போம்


    katavul untu than
    athuvum onru than
    karpanaiyil uruvakum kallum
    mannum katavulalla
    matamai enru oor mataththin
    mantapaththin malai ussiyil
    utamaiyum porul kotuththu
    mutiyum pantikai katavulalla

    kuzhukku vazhiyilla makkal
    vithi matki malum pothu
    aalukkoru theyvam enru
    nalukkoru satangkukal een
    ullaththin anpaki ulakaththin
    oliyana ellaththum kalamilla
    iyesuve katavul enpom

    pavaththai kanniraka parukukinra
    mantharkalin sapaththai tholaippatharku
    saththirangkal enna seyyum
    pavaththin paliyaki paralokam vazhiyaki
    pavaththin paliyaki. aa.
    siluvaiyil sapam thirththa
    iyesuve katavul enpom


  • இருக்கிறார் இருக்கிறார் Irukkirar Irukkirar

    இருக்கிறார் இருக்கிறார் இயேசு
    இயேசு இருக்கிறவராக இருக்கிறார்
    இங்கேயும் இருக்கிறார்
    எங்கேயும் இருக்கிறார்
    இப்போதும் இருக்கிறார்
    எப்போதும் இருக்கிறார்

    இருவர் மூவர் இயேசுவின் பெயரால்
    கூடுமிடத்தில் அவர் இருக்கிறார்
    அவரை உயர்த்தும் எந்த ஸ்தானத்திலும்
    இரங்கி ஆசீர்வதிக்கிறார்

    பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி
    பரிசுத்த வாழ்வை அளிக்கிறார்
    பேயினை விரட்டி நோயினை அகற்றி
    பேரின்ப வாழ்வை தருகிறா

    குறைகளை போக்கி நிறைவை உண்டாக்கி
    குதுகுல வாழ்வை அளிக்கிறார்
    வறுமையை நீக்கி வளமை சேர்த்து
    வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார்


    Irukkirar irukkirar iyesu
    iyesu irukkiravaraka irukkirar
    ingkeyum irukkirar
    engkeyum irukkirar
    ippothum irukkirar
    eppothum irukkirar

    iruvar muvar iyesuvin peyaral
    kutumitaththil avar irukkirar
    avarai uyarththum entha sthanaththilum
    irangki aasirvathikkirar

    pavaththai pokki sapaththai nikki
    parisuththa vazhvai alikkirar
    peyinai viratti noyinai akarri
    perinpa vazhvai tharukirar

    kuraikalai pokki niraivai untakki
    kuthukula vazhvai alikkirar
    varumaiyai nikki valamai serththu
    vazhkkaiyai aasirvathikkirar


  • கல்வாரி மலையிலே kalvari malaiyile

    கல்வாரி மலையிலே என்
    கர்த்தா உம் வேதனை
    கண்ணீர் பெருகிடுதே கல்
    நெஞ்சமும் உருகிடுதே

    முப்பது வெள்ளியின் மோகமும் யூதாஸ்
    முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ
    வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்
    வலியவர்க்கே உம்மை காட்டித்தந்தான்
    இரக்கமில்லாதவர் தேடி வந்தார்
    இதயம் இல்லாதவர் பிடித்துச்சென்றார்

    இரத்தம் நதி போல் பாயுதய்யா
    என் இதயம் தனலாய் வேகுதய்யா
    உத்தமர் உடலும் துடிக்குதய்யா அங்கு
    உளுத்தவர் உள்ளமும் களிக்குதய்யா
    எத்தர்கள் நெஞ்சினில் இரக்கமில்லை அதை
    நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை

    ஆணி உம் மேனியில் பாயலாமோ உம்
    அங்கமெல்லாம் காயம் ஆகலாமோ
    தாகத்தால் நீரும் தவிக்கலாமோ குடிக்க
    காடியை கொடியவன் கொடுக்கலாமோ
    சிலுவையில் நீர் பட்ட பாடுகளை இன்றும்
    சிந்தித்தால் என் உள்ளம் துடிக்குதய்யா


    kalvari malaiyile en
    karththa um vethanai
    kannir perukituthe kal
    nenysamum urukituthe

    muppathu velliyin mokamum yuthas
    muththaththal ummai virkalakumo
    vanysakanay nanpan marivittan
    valiyavarkke ummai kattiththanthan
    irakkamillathavar theti vanthar
    ithayam illathavar pitiththussenra

    iraththam nathi pol payuthayya
    en ithayam thanalay vekuthayya
    uththamar utalum thutikkuthayya angku
    uluththavar ullamum kalikkuthayya
    eththarkal nenysinil irakkamillai athai
    niththamum ninaikkaiyil urakkamillai

    aani um meniyil payalamo um
    angkamellam kayam aakalamo
    thakaththal nirum thavikkalamo kutikka
    katiyai kotiyavan kotukkalamo
    siluvaiyil nir patta patukalai inrum
    sinthiththal en ullam thutikkuthayya


  • பர்வதங்கள் நிலை Parvathangkal nilai

    பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
    என் கிருபை உன்னை விட்டு விலகாது
    என்றுரைத்த என் இயேசுவே
    உன் சொல் ஒருநாளும் உறங்காது

    இரண்டோ மூன்றோ பேர்கள்
    உம் நாமத்தில் இருக்கும்
    இடத்தில் நீர் இருப்பீர்
    இதயமோ உம்மை நினைத்திருந்தால்
    இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்
    இன்னல் நீங்க உம்மை அழைத்தால்
    அண்ணல் இயேசுவே நீர் வருவீர்

    ஆறுகளை நான் கடக்கின்ற போதும்
    அக்கினி என்னை சூழ்கின்ற போதும்
    அங்கும் அருகே வந்திடுவீர்
    அழிவின்றி என்னை தாங்கிடுவீர்
    ஆண்டவர் இயேசு என்று
    அழைக்கும் என் மனமே
    அரவணைக்கும் உந்தன் அன்பு கரமே


    parvathangkal nilai peyarnthalum
    en kirupai unnai vittu vilakathu
    enruraiththa en iyesuve
    un sol orunalum urangkathu

    iranto munro perkal
    um namaththil irukkum
    itaththil nir iruppir
    ithayamo ummai ninaiththirunthal
    inpamam aaviyil nirappituvir
    innal ningka ummai azhaiththal
    annal iyesuve nir varuvir

    aarukalai nan katakkinra pothum
    akkini ennai suzhkinra pothum
    angkum aruke vanthituvir
    azhivinri ennai thangkituvir
    aantavar iyesu enru
    azhaikkum en maname
    aravanaikkum unthan anpu karame


  • இயேசு என்றதுமே Iyesu enrathume

    இயேசு என்றதுமே எனக்கு ஒரு
    இன்பம் பிறக்குதம்மா
    காசினியிள்ளவர் போல் எவரையும்
    கண்டதில்லையம்மா

    பேச தொடங்கினாலும்
    பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
    பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
    பாவியில் இல்லையம்மா
    குஷ்ட ரோகிகளை கைகளால்
    கூசாமல் தொட்டாரம்மா
    கஷ்டப்படுவோரைக் கண்டதும்
    கண்ணீர் வடித்தாரம்மா
    கஷ்டப்படுவோரைக் கண்டதும்
    கண்ணீர் வடித்தாரம்மா

    காசு மேல் ஆசை வைத்து
    தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
    காசு மேல் ஆசை வைத்து
    தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
    ஆரத் தழுவினோரை காசினியில்
    கண்டதும் உண்டோ அம்மா
    ஆரத் தழுவினோரை காசினியில்
    கண்டதும் உண்டோ அம்மா

    சிலுவை மீதினிலே இரத்தத்தை
    சிந்தி மடிந்தாரம்மா
    சிலுவை மீதினிலே இரத்தத்தை
    சிந்தி மடிந்தாரம்மா
    உலகை மீட்டிடவே இயேசு வந்து
    உவந்து மாண்டாரம்மா
    உலகை மீட்டிடவே இயேசு வந்து
    உவந்து மாண்டாரம்மா
    எங்கு நான் சென்றிடுவேன்
    இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
    எங்கு நான் சென்றிடுவேன்
    இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
    பங்கம் பல வரிணும் அவர்க்காய்
    பாடுகள் பல பட்டிடுவேன்
    பங்கம் பல வரிணும் அவர்க்காய்
    பாடுகள் பல பட்டிடுவேன்


    Iyesu enrathume enakku oru
    inpam pirakkuthamma
    kasiniyillavar pol evaraiyum
    kantathillaiyamma

    pesa thotangkinalum
    pessellam perinpam sottuthamma
    parkkaththotangkinalum parvaiyellam
    paviyil illaiyamma
    kushta rokikalai kaikalal
    kusamal thottaramma
    kashtappatuvoraik kantathum
    kannir vatiththaramma
    kashtappatuvoraik kantathum
    kannir vatiththaramma

    kasu mel aasai vaiththu
    thammai than kattik kotuththavanin
    kasu mel aasai vaiththu
    thammai than kattik kotuththavanin
    aarath thazhuvinorai kasiniyil
    kantathum unto amma
    aarath thazhuvinorai kasiniyil
    kantathum unto amma

    siluvai mithinile iraththaththai
    sinthi matintharamma
    siluvai mithinile iraththaththai
    sinthi matintharamma
    ulakai mittitave iyesu vanthu
    uvanthu mantaramma
    ulakai mittitave iyesu vanthu
    uvanthu mantaramma
    engku nan senrituven
    ivvanpai evvitham sollituven
    engku nan senrituven
    ivvanpai evvitham sollituven
    pangkam pala varinum avarkkay
    patukal pala pattituven
    pangkam pala varinum avarkkay
    patukal pala pattituven


  • உன்னைத்தான் கேட்கின்றார் unnaiththan ketkinrar

    உன்னைத்தான் கேட்கின்றார் இயேசு
    உன்னைத்தான் கேட்கின்றார்
    மனம் திரும்ப மாட்டாயா நீ
    மனம் திரும்ப மாட்டாயா

    நாடும் வீடும் நிலமும் எனக்கு
    போதும் என்று சொன்னாய்
    கூடு விட்டு ஆவி போகும்
    போது என்ன செய்வாய்
    யாவும் அழிந்து போகும்
    அழியா ஒன்று உண்டு
    உன்னைக் காக்கும் நல்ல இயேசு
    கிறிஸ்துவின் நேசக்கரங்கள்

    பட்டம் பதவி தகுதி உயர்வு
    யாவும் மாறி போகும்
    உலகம் உன்னை வெறுத்து
    ஒதுக்கும் காலம் வந்து சேரும்
    அன்று உணர்ந்து கொள்வாய்
    உண்மை என்ன என்று
    மாறும் உலகில் நிலைத்த ஒருவன்
    இயேசு தேவன் என்று


    unnaiththan ketkinrar iyesu
    unnaiththan ketkinrar
    manam thirumpa mattaya ni
    manam thirumpa mattaya

    natum vitum nilamum enakku
    pothum enru sonnay
    kutu vittu aavi pokum
    pothu enna seyvay
    yavum azhinthu pokum
    azhiya onru untu
    unnaik kakkum nalla iyesu
    kiristhuvin nesakkarangkal

    pattam pathavi thakuthi uyarvu
    yavum mari pokum
    ulakam unnai veruththu
    othukkum kalam vanthu serum
    anru unarnthu kolvay
    unmai enna enru
    marum ulakil nilaiththa oruvan
    iyesu thevan enru


  • ஐந்து காய வேதனை Ainthu kaya vethanai

    ஐந்து காய வேதனை அன்பர்
    இயேசுவை வாட்டுதே
    ஆறாத சோகம் மாறாத துன்பம்
    ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்

    கற்றூணில் கட்டி
    கசையடிகள் அடித்தனரே
    தலையினிலே குத்தி அவர்
    கன்னத்தில் அறைந்தனரே
    சிவப்பங்கி உடுத்தி கையில்
    கோலினைக் கொடுத்தனரே
    யூத ராஜா என்று இகழ்ந்து
    முகத்தில் காறி உமிழ்ந்தனரே

    மன்னவர் இயேசு உடல்
    பெரும் புண்ணாகி நொந்ததுவே
    மாபெரும் இரத்த வெள்ளம்
    பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
    மானிடர் பாவம் தனை மா
    தேவன் சுமந்து தீர்த்தார்
    மறாவாதே நீ நெஞ்சமே மனம்
    திரும்பிடு அவர் தஞ்சமே


    Ainthu kaya vethanai anpar
    iyesuvai vattuthe
    aaratha sokam maratha thunpam
    aantavar iyesu mel suzhnthathen

    karrunil katti
    kasaiyatikal atiththanare
    thalaiyinile kuththi avar
    kannaththil arainthanare
    sivappangki utuththi kaiyil
    kolinaik kotuththanare
    yutha raja enru ikazhnthu
    mukaththil kari umizhnthanare

    mannavar iyesu utal
    perum punnaki nonthathuve
    maperum iraththa vellam
    peruki aaraki paynthathuve
    manitar pavam thanai ma
    thevan sumanthu thirththar
    maravathe ni nenysame manam
    thirumpitu avar thanysame