Author: admin

  • உன் ஆத்துமத்தில் Un aaththumaththil

    உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்
    வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய்
    நீ தேவனை நோக்கியே
    காத்திரு காத்திரு காத்திரு

    வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு
    நீரோடை தேடி அலையும் தினம்
    வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ
    வார்த்தைகள் கேட்டு மகிழும்

    உன் தேவன் எங்கே என்று
    உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று
    உன்னை நிந்திப்பதாலே இன்று உன்
    நிலையில் தடுமாற்றம் உண்டு
    கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த
    மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ
    கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய
    சாத்தான் கிரியை யாவும் நீங்கும்


    un aaththumaththil ni een kalangkuray
    vinay unakkulle ni een thiyangkuray
    ni thevanai nokkiye
    kaththiru kaththiru kaththiru

    vanysiththu katharum mankal oru
    nirotai theti alaiyum thinam
    vanysiththu katharum aathma theva
    varththaikal kettu makizhum

    un thevan engke enru
    unnai ketkira kuttam onru
    unnai ninthippathale inru un
    nilaiyil thatumarram untu
    karththar un patsam irukka intha
    manithan unakkenna seyvan theva
    kirupai unnai enrum thangkum thiya
    saththan kiriyai yavum ningkum


  • வாழ்க்கை என்னும் படகில் vazhkkai ennum patakil

    வாழ்க்கை என்னும் படகில்
    வாழ்வின் பேரலைகள்
    அல்லேலூயா வருவாரே என் இயேசு
    தருவார் பேரமைதி தருவார் பேரமைதி

    துன்பங்கள் என்னும் அலை வரலாம்
    துவண்டு போகும் நிலை வரலாம்
    இன்பமே இயேசு அங்கே உண்டு
    இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்
    இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்

    போராட்டம் என்னும் புயல் வரலாம்
    நீரோட்டம் கண்ணில் வடிந்திடலாம்
    காற்றை அடக்கும் கர்த்தர் உண்டு
    கவலை இல்லாமல் நாம் செல்லலாம்
    கவலை இல்லாமல் நாம் செல்லலாம்

    சஞ்சலம் என்னும் சுழல் வரலாம்
    சடுதியில் வாழ்வும் சரிந்திடலாம்
    தஞ்சமே இயேசு அங்கே உண்டு
    நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்
    நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்


    vazhkkai ennum patakil
    vazhvin peralaikal
    alleluya varuvare en iyesu
    tharuvar peramaithi tharuvar peramaithi

    thunpangkal ennum alai varalam
    thuvantu pokum nilai varalam
    inpame iyesu angke untu
    innal illamal nam sellalam
    innal illamal nam sellalam

    porattam ennum puyal varalam
    nirottam kannil vatinthitalam
    karrai atakkum karththar untu
    kavalai illamal nam sellalam
    kavalai illamal nam sellalam

    sanysalam ennum suzhal varalam
    satuthiyil vazhvum sarinthitalam
    thanysame iyesu angke untu
    nenysame anysamal nam sellalam
    nenysame anysamal nam sellalam


  • நான் பாடவில்லை என் Nan patavillai en

    நான் பாடவில்லை என்
    நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது
    என் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள்
    இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது

    தேன் இனிக்கவில்லை ஒரு
    திரவத்திலிருந்து தேவன்
    வார்த்தை இனிக்கின்றது
    தென்றல் வீசவில்லை
    திசைகளெல்லாம் ஜீவ
    சுவாசம் தவழ்கின்றது
    சுவாசம் தவழ்கின்றது

    தண்ணீரை தித்திக்கும்
    ரசமாக்கிய நீர் தயபரும்
    கிருபைக்கு இணையில்லையே
    கண்ணீரை களிப்பாக்கும்
    கர்த்தர் இயேசுவை காலமெல்லாம்
    போற்றிப் பாடும் வரம் இன்றாரே
    காலமெல்லாம்
    போற்றிப் பாடும் வரம் இன்றாரே

    தூதர் சேனை போற்றிப்
    பாடும் தூயர் இயேசுவை
    துதி தன்னில் வாசம்
    செய்யும் தேவ தேவனை
    ஆவியோடும் கருத்தோடும்
    பாடு நித்தமே அழைத்தவர்
    நடத்துகின்றார் அவர் சித்தமே
    அழைத்தவர்
    நடத்துகின்றார் அவர் சித்தமே


    Nan patavillai en
    navilirunthu iyesu natham ezhukinrathu
    en uun aatavillai ullukkul
    irunthu karththar uththaravu pirakkinrathu

    then inikkavillai oru
    thiravaththilirunthu thevan
    varththai inikkinrathu
    thenral visavillai
    thisaikalellam jiva
    suvasam thavazhkinrathu
    suvasam thavazhkinrathu

    thannirai thiththikkum
    rasamakkiya nir thayaparum
    kirupaikku inaiyillaiye
    kannirai kalippakkum
    karththar iyesuvai kalamellam
    porrip patum varam inrare
    kalamellam
    porrip patum varam inrare

    thuthar senai porrip
    patum thuyar iyesuvai
    thuthi thannil vasam
    seyyum theva thevanai
    aaviyotum karuththotum
    patu niththame azhaiththavar
    nataththukinrar avar siththame
    azhaiththavar
    nataththukinrar avar siththame


  • கர்த்தருக்கு புதுப்பாட்டு karththarukku puthuppattu

    கர்த்தருக்கு புதுப்பாட்டு பாடிடுவோம்
    காலமெல்லாம் களிகூர்ந்து
    ஸ்தோத்தரிப்போம் நாம்
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆராதிப்போம்
    ஆனந்தமாய் ஆர்பரித்து
    ஸ்தோத்தரிப்போம்

    புத்தியுள்ள பக்தியாலே
    கர்த்தர் இயேசுவை நாம்
    நித்தம் நித்தம் போற்றியே
    துதித்திடுவோமே

    மண்ணுல மாந்தரெல்லாம்
    மகிழ்ந்திடவே விண்ணுல
    தூதரெல்லாம் வியந்திடவே
    பொன்னுலக தேவ மைந்தன்
    புகழ் ஓங்கவே நாம்
    பண் இசைத்து பாடிடுவோம்
    பாங்குடனே

    தாவீதைப் போலவே நடனமாடி
    தேவாதி தேவனை
    நாம் ஸ்தோத்தரிப்போம்
    தாய் என்னை மறந்தாலும்
    மறவாத தயபரன் இயேசுவை
    நாம் துதித்திடுவோம்
    தயபரன் இயேசுவை
    நாம் துதித்திடுவோம்


    karththarukku puthuppattu patituvom
    kalamellam kalikurnthu
    sthoththarippomnam
    aaviyotum unmaiyotum
    aarathippom
    aananthamay aarpariththu
    sthoththarippom

    puththiyulla pakthiyale
    karththar iyesuvai nam
    niththam niththam porriye
    thuthiththituvome

    mannula mantharellam
    makizhnthitave vinnula
    thutharellam viyanthitave
    ponnulaka theva mainthan
    pukazh oongkave nam
    pan isaiththu patituvom
    pangkutane

    thavithaip polave natanamati
    thevathi thevanai
    nam sthoththarippom
    thay ennai maranthalum
    maravatha thayaparan iyesuvai
    nam thuthiththituvom
    thayaparan iyesuvai
    nam thuthiththituvom


  • சொல்லத் துணிந்தேன் Sollath thuninthen

    சொல்லத் துணிந்தேன் அப்பா என்று
    உம் பின் செல்லப் பணிந்தேன்
    உம்மை கண்டு ஆமென்
    அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்
    உலகை வெல்லுவேன்

    யோவான் எழுதிய சுவிஷேசம் அதில்
    ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம்
    இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது
    எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த
    அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய்
    உம்மை அப்பா என்று
    அழைக்கும் புத்திரனாய்

    காணும் உலக இன்ப காட்சி யாவும்
    கானல் நீராக போச்சு
    நானும் எனது என்ற பேச்சு எல்லாம்
    வீணும் விருதாய் ஆச்சு இந்த
    மாய உலகத்தை மறந்தே இயேசு
    மாதேவனின் பாதம் பணிந்தேன்

    மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும்
    மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி
    மா தேவா நின் பெரும் ஆட்சி நான்
    மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி
    என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ
    உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர


    sollath thuninthen appa enru
    um pin sellap paninthen
    ummai kantu aamen
    appa iyesappa enru solluven
    ulakai velluven

    yovan ezhuthiya suvishesam athil
    onru pannirentam thiruvasanam
    iyesuvin namaththil visuvasam athu
    ellarkkum pillaiyakum athikaram antha
    athikaram thanai perra pillaiyay
    ummai appa enru
    azhaikkum puththiranay

    kanum ulaka inpa katsi yavum
    kanal niraka possu
    nanum enathu enra pessu ellam
    vinum viruthay aassu intha
    maya ulakaththai maranthe iyesu
    mathevanin patham paninthen

    malum mantharin vizhssi yavum
    ma pathakan saththan suzhssi
    ma theva nin perum aatsi nan
    manithanay nilai nirkum satsi
    enrum satsiyin pillaiyay vazha
    unthan motsa vazhvinil thanil sera


  • அனுதினமும் உம்மில் Anuthinamum ummil

    அனுதினமும் உம்மில்
    நான் வளர்ந்திடவே நின்
    அனுகிரகம் தரவேண்டுமே
    என் இயேசுவே நின்
    அனுகிரகம் தரவேண்டுமே
    என்னால் ஒன்றும் கூடாதய்யா
    உம்மால் யாவும் கூடும்

    என் ஞானம் கல்வி செல்வம்
    எல்லாம் ஒன்றுமில்லை குப்பை
    என்று எண்ணுகின்றேன்
    என் மீது நியாயங்கள் அழுக்கான
    கந்தல்கள் என்று உணர்ந்தேன்
    என் இயேசுவே என் இயேசுவே

    அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
    அவனியில் உமக்காய் உழைத்திடவே
    அர்பணிக்கின்றேன் இன்றே
    என்னை ஏற்றுக்கொள்ளும்
    என் இயேசுவே என் இயேசுவே


    Anuthinamum ummil
    nan valarnthitave nin
    anukirakam tharaventume
    en iyesuve nin
    anukirakam tharaventume
    ennal onrum kutathayya
    ummal yavum kutum

    en nyanam kalvi selvam
    ellam onrumillai kuppai
    enru ennukinren
    en mithu niyayangkal azhukkana
    kanthalkal enru unarnthen
    en iyesuve en iyesuve

    azhaiththavare ummil pizhaiththitave
    avaniyil umakkay uzhaiththitave
    arpanikkinren inre
    ennai eerrukkollum
    en iyesuve en iyesuve


  • கர்த்தருக்கு காணிக்கை karththarukku kanikkai

    கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள் அவர்
    கணக்கில்லாமல் திருப்பி தருவார்
    ஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர்
    உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார்

    உலக செல்வம் அனைத்தையுமே
    உருவாக்கியவர் உனக்காக
    யாவற்றையும் தத்தம் செய்தவர்
    தனக்கான தருபவரை தாங்கி நடத்துவார்
    தசம தாகம் அளிப்பவரை
    தழைக்க செய்குவார்

    அன்புடனே தருபவரை ஆதரிப்பவர்
    அளவில்லாமல் அவர்களுக்கே
    அள்ளி கொடுப்பவர்
    ஏழ்மையிலும் தருபவரை
    இயேசு மதிப்பார் இம்மையிலும்
    மறுமையிலும் ஆசீர்வதிப்பார்
    பத்தில் ஒன்று தருபவரை பரமன்
    பார்க்கிறார் தன் பலனின் முதலை
    தருபவரை பார்த்து மகிழ்கிறார்
    பாசத்துடன் இயேசு தேவன்
    உன்னை கேட்கிறார்
    தந்தால் தலகணையை
    திறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார்

    விண்ணும் வெளியும் தன்னுடையது
    என்று கர்த்தர் சொல்கிறார் அதை
    என்னுடையது என்பவரை
    இயேசு வெறுக்கிறார்
    பொய்யுலக செல்வமதை
    பூச்சி அரித்திடும் உன்
    பொக்கிஷத்தை பரலோகத்தில்
    சேர்த்து வை என்றார்
    பொற்தள வீதி அதை மிதித்து
    நடப்பவர் இப்பூமியிலே பொன்
    நகைகளை வெறுத்து ஒதுக்குவார்
    புண்ணியராம் இயேசு பணி
    புவியில் நடக்கவே தன் பொன் பொருளை
    வழங்கிடுவோர் மோட்சம் சேருவார்


    karththarukku kanikkai tharungkal avar
    kanakkillamal thiruppi tharuvar
    uuzhiyaththirku uthavi seyyungkal avar
    ungkal vazhvai aasirvathippar

    ulaka selvam anaiththaiyume
    uruvakkiyavar unakkaka
    yavarraiyum thaththam seythavar
    thanakkana tharupavarai thangki nataththuvar
    thasama thakam alippavarai
    thazhaikka seykuvar

    anputane tharupavarai aatharippavar
    alavillamal avarkalukke
    alli kotuppavar
    eezhmaiyilum tharupavarai
    iyesu mathippar immaiyilum
    marumaiyilum aasirvathippar
    paththil onru tharupavarai paraman
    parkkirar than palanin muthalai
    tharupavarai parththu makizhkirar
    pasaththutan iyesu thevan
    unnai ketkirar
    thanthal thalakanaiyai
    thiranthu ummai aasirvathikkirar

    vinnum veliyum thannutaiyathu
    enru karththar solkirar athai
    ennutaiyathu enpavarai
    iyesu verukkirar
    poyyulaka selvamathai
    pussi ariththitum un
    pokkishaththai paralokaththil
    serththu vai enrar
    porthala vithi athai mithiththu
    natappavar ippumiyile pon
    nakaikalai veruththu othukkuvar
    punniyaram iyesu pani
    puviyil natakkave than pon porulai
    vazhangkituvor motsam seruvar


  • மகனே என்றழைத்து Makane enrazhaiththu

    மகனே என்றழைத்து
    மறுவாழ்வு உனக்கு தந்த
    அன்பு மாதேவன்
    இயேசுவை நீ மறவாதே

    பாவத்தில் நீ உழன்று
    பரிதவிக்கும் நேரத்திலே
    பகல் வேஷம் மாந்தரெல்லாம்
    பார்த்து உன்னை நகைக்கையிலே
    பட்ட மரம் போல நீயும்
    கெட்டழியும் வேளையிலே

    வியாதி படுக்கையிலே
    வேதனையால் துடிக்கையிலே
    விந்தையான உலக சொந்தம்
    வெறுத்துன்னை ஒதுக்கையிலே
    மருத்துவர் கணித்து சொன்ன
    மரணம் வரும் வேளையிலே

    வறுமையில் நீ வாடி
    வருந்திடும் வேளையிலே
    வாய் பேச்சு வள்ளலெல்லாம்
    வசை மாறி பொழிகையிலே
    வாழ்ந்தது போதும் என்று
    சாக போகும் வேளையிலே


    makane enrazhaiththu
    maruvazhvu unakku thantha
    anpu mathevan
    iyesuvai ni maravathe

    pavaththil ni uzhanru
    parithavikkum neraththile
    pakal vesham mantharellam
    parththu unnai nakaikkaiyile
    patta maram pola niyum
    kettazhiyum velaiyile

    viyathi patukkaiyile
    vethanaiyal thutikkaiyile
    vinthaiyana ulaka sontham
    veruththunnai othukkaiyile
    maruththuvar kaniththu sonna
    maranam varum velaiyile

    varumaiyil ni vati
    varunthitum velaiyile
    vay pessu vallalellam
    vasai mari pozhikaiyile
    vazhnthathu pothum enru
    saka pokum velaiyile


  • இயேசு ஒன்றே வேண்டு Iyesu onre ventum

    இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு
    என்றும் இயேசு ஒன்றே வேண்டும்
    எந்தன் இயேசு நினைவோடு
    என் இதயம் என்றும் மகிழ வேண்டும்
    இயேசு தாசன் நான் என்றே
    மாந்தர் என்றும்
    பாசம் கொள்ள வேண்டும்
    எந்தன் இயேசு கிறிஸ்துவையே
    போற்றி நான் பாடி புகழ வேண்டும்

    நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா
    நிம்மதி பெற வேண்டும்
    எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு
    வந்து தரிசனம் தரவேண்டும்
    எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும்
    எந்தன் வாழ்க்கை முழுவதுமே
    இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும்

    படித்து தியானிக்கவே கையில்
    என்றும் பரிசுத்த வேதம் வேண்டும்
    நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு
    கீத பாடல் கூடவே வேண்டும்
    நான் செல்லும் இடமெல்லாம் இயேசு
    புகழ் சொல்லும் வரம் வேண்டும்
    இயேசு சேவையை நான் செய்தே
    உலகினில் ஜீவித்திட வேண்டும்
    இயேசு சேவையை நான் செய்தே
    எந்தன் ஜீவனை நான் விடவேண்டும்


    iyesu onre ventum enakku
    enrum iyesu onre ventum
    enthan iyesu ninaivotu
    en ithayam enrum makizha ventum
    iyesu thasan nan enre
    manthar enrum
    pasam kolla ventum
    enthan iyesu kiristhuvaiye
    porri nan pati pukazha ventum

    niththam jepaththinile nikarilla
    nimmathi pera ventum
    enthan niththirai neraththilum iyesu
    vanthu tharisanam tharaventum
    enthan varththaikal ovvonrum
    iyesuvukku sthoththiram aakaventum
    enthan vazhkkai muzhuvathume
    iyesuvukku satsiyaka ventum

    patiththu thiyanikkave kaiyil
    enrum parisuththa vetham ventum
    nan pati makizhnthitave iyesu
    kitha patal kutave ventum
    nan sellum itamellam iyesu
    pukazh sollum varam ventum
    iyesu sevaiyai nan seythe
    ulakinil jiviththita ventum
    iyesu sevaiyai nan seythe
    enthan jivanai nan vitaventum


  • உள்ளமெல்லாம் உருகுதய்யா ullamellam urukuthayya

    உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்
    கல்வாரி காட்சி கண்டு என்
    தேகமெல்லாம் நடுங்குதய்யா உம்
    சிலுவையின் பாடு கண்டு உம்
    சிலுவையின் பாடு கண்டு

    மகிமை மாட்சிமை மறந்து விட்டு
    மனிதனாய் ஏன் பிறந்தீர்
    மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம்
    மகிமை மறந்தீரோ மனு
    உருவாய் பிறந்தீரோ மனு
    உருவாய் பிறந்தீரோ

    இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண
    காயங்கள் ஏன் அடைந்தீர்
    இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே
    இரத்தத்தை வடித்தீரோ தேவ
    சித்தத்தை முடித்தீரோ தேவ
    சித்தத்தை முடித்தீரோ

    அன்பின் ரூபம் ஆனவரே உம்
    மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ
    ஆணவத்தால் நான் செய்த
    பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ
    உம் மேனியில் பாய்ந்ததுவோ
    உம் மேனியில் பாய்ந்ததுவோ


    ullamellam urukuthayya um
    kalvari katsi kantu en
    thekamellam natungkuthayya um
    siluvaiyin patu kantu um
    siluvaiyin patu kantu

    makimai matsimai maranthu vittu
    manithanay een piranthir
    mannana ennai nir nesiththathal um
    makimai maranthiro manu
    uruvay piranthiro manu
    uruvay piranthiro

    iraththamum aaray perukitave irana
    kayangkal een atainthir
    iratsippin vazhvai nan perave
    iraththaththai vatiththiro theva
    siththaththai mutiththiro theva
    siththaththai mutiththiro

    anpin rupam aanavare um
    mel aanikal paynthatheno
    aanavaththal nan seytha
    pavangkale kur aaniyay mariyatho
    um meniyil paynthathuvo
    um meniyil paynthathuvo