Author: admin

  • Uyarntha Adaikalame Devan உயர்ந்த அடைக்கலமே

    உயர்ந்த அடைக்கலமே
    தேவன் உயர்ந்த அடைக்கலமே
    ஆபத்துக் காலத்திலே
    தேவன் அரனான கோட்டயாமே

    பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும்
    அலைகள் கொந்தளித்தாலும் (2)
    பர்வதங்கள் அதிர்ந்தாலும் பாழ்க்கடிப்பே வந்தாலும்
    பயப்படவே மாட்டேன்
    நான் பயப்படவே மாட்டேன் – உயர்ந்த

    ஜாதிகள் கொந்தளித்து இராஜ்ஜியங்கள் தத்தளித்து
    பூமியே உருகி போனாலும் (2)
    யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்
    எதற்கும் துணிந்திடலாம்
    நாம் எதற்கும் துணிந்திடலாம் – உயர்ந்த

    பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின்
    செய்கைகளை வந்து பாருங்கள் (2)
    வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்
    இரதங்களை சுட்டெறிக்கிறார்
    இயேசு இரதங்களை சுட்டெறிக்கிறார் – உயர்ந்த


    Uyarntha Adaikalame Devan Lyrics in English
    uyarntha ataikkalamae
    thaevan uyarntha ataikkalamae
    aapaththuk kaalaththilae
    thaevan aranaana kottayaamae

    poomi maarinaalum malaikal saaynthaalum
    alaikal konthaliththaalum (2)
    parvathangal athirnthaalum paalkkatippae vanthaalum
    payappadavae maattaen
    naan payappadavae maattaen – uyarntha

    jaathikal konthaliththu iraajjiyangal thaththaliththu
    poomiyae uruki ponaalum (2)
    yaakkopin thaevan nammotiruppathaal
    etharkum thunninthidalaam
    naam etharkum thunninthidalaam – uyarntha

    poomiyilae paalkkatippai nadappikkum thaevanin
    seykaikalai vanthu paarungal (2)
    villai otikkiraar eettiyai murikkiraar
    irathangalai sutterikkiraar
    Yesu irathangalai sutterikkiraar – uyarntha

  • Uyaramum Unathamum உயரமும் உன்னதமுமான

    உயரமும் உன்னதமுமான
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
    சேனைகளின் கர்த்தராகிய
    ராஜாவை என் கண்கள் காணட்டும்

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
    பரிசுத்தர் பரிசுத்தரே

    ஒருவராய் சாவாமையுள்ளவர்
    அவர் சேரக்கூடா ஒளிதனில்
    வாசம் செய்பவர் அகிலத்தை
    வார்த்தையால் சிருஷ்டித்தவர்
    இயேசுவே உம்மையே
    ஆராதிப்பேன்

    ஆதியும் அந்தமுமானவர் அவர்
    அல்பாவும் ஒமேகாவுமானவர்
    அவர் இருந்தவரும் இருப்பவரும்
    சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

    எல்லா நாமத்திலும் மேலானவர்
    முழங்கால்கள் முடங்கிடும்
    இவருக்கு முன்
    துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
    தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்


    Uyaramum unathamum Lyrics in English
    uyaramum unnathamumaana
    singaasanaththil veettirukkum
    senaikalin karththaraakiya
    raajaavai en kannkal kaanattum

    senaikalin karththar parisuththar-8
    parisuththar parisuththarae

    oruvaraay saavaamaiyullavar
    avar serakkoodaa olithanil
    vaasam seypavar akilaththai
    vaarththaiyaal sirushtiththavar
    Yesuvae ummaiyae
    aaraathippaen

    aathiyum anthamumaanavar avar
    alpaavum omaekaavumaanavar
    avar irunthavarum iruppavarum
    seekkiram varappokum raajaa ivar

    ellaa naamaththilum maelaanavar
    mulangaalkal mudangidum
    ivarukku mun
    thuthikanam makimaikku paaththirarae
    thooyavar Yesuvai uyarnthiduvaen

  • Uyara Uyara Uyarnthongum உயர உயர உயர்ந்தோங்கும்

    உயர உயர உயர்ந்தோங்கும்
    அனுபவம் – விண்
    சிகரம் தொடும் விசுவாசம் அவசியம்
    கனவையும் வென்றிடும் மகத்துவம்
    கர்த்தரின் ஆவியால் சாத்தியம்
    செட்டையடித்து எழும்பிடுவோம்
    தீப்பிழம்பாய் மாறிடுவோம்
    தேவப்பிரியம் செய்வதிலே
    தீரராகுவோம் – 2

    1. வானம் தொடும் கழுகுகளாய் மாறுவோம்
      புவிமீதின் ஈர்ப்பினை நாம்
      மேற்கொள்ளுவோம்
      அனல்மக்கள் திரளணியாய்
      ஆர்த்தெழுவோம்
      ஆண்டவரின் சொந்தங்களாய்
      ஆர்ப்பரிப்போம்
      இயேசுவை நோக்கிடுவோம்
      இயேசுவைப் போல்
      மாறிடுவோம் தேவனது
      ஆட்சியிலே
      நிலைத்தோங்குவோம்!
    2. சாத்தானின் சேனைகளை
      முறியடிக்கும்
      விண்ணப்பப் போரினையே
      மேற்கொள்ளும் பரிவாரம்
      சபைதோறும் எழும்பட்டும்
      மறைவான தாக்குதலை
      நடத்தட்டும் வஞ்சகப் பேய்
      ஒழியட்டும் தேவஜனம்
      ஜெயிக்கட்டும்
      கிறிஸ்துசபையின் வெற்றிப்பவனி
      தொடர்ந்தோங்கட்டும்!

    Uyara Uyara Uyarnthongum Lyrics in English
    uyara uyara uyarnthongum
    anupavam – vinn
    sikaram thodum visuvaasam avasiyam
    kanavaiyum ventidum makaththuvam
    karththarin aaviyaal saaththiyam
    settaைyatiththu elumpiduvom
    theeppilampaay maariduvom
    thaevappiriyam seyvathilae
    theeraraakuvom – 2

    1. vaanam thodum kalukukalaay maaruvom
      puvimeethin eerppinai naam
      maerkolluvom
      analmakkal thiralanniyaay
      aarththeluvom
      aanndavarin sonthangalaay
      aarpparippom
      Yesuvai Nnokkiduvom
      Yesuvaip pol
      maariduvom thaevanathu
      aatchiyilae
      nilaiththonguvom!
    2. saaththaanin senaikalai
      muriyatikkum
      vinnnappap porinaiyae
      maerkollum parivaaram
      sapaithorum elumpattum
      maraivaana thaakkuthalai
      nadaththattum vanjakap paey
      oliyattum thaevajanam
      jeyikkattum
      kiristhusapaiyin vettippavani
      thodarnthongattum!
  • Uyar Malaiyo Sama Veliyo உயர் மலையோ சம வெளியோ

    எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
    தீங்கு என்னைஅணுகாது
    துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
    துளியும் என்னை நெருங்காது

    சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
    உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

    உயர் மலையோ சம வெளியோ
    இரண்டிலும் நீரே என் தேவன்
    எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
    என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

    ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
    நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
    விட்டு கொடுக்காத பேரழகு
    உயர் மலையோ

    உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
    நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
    அட ஊர் என்ன சொன்னாலும் பார்
    எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
    நிகர் இல்லாத தகப்பனுக்கு
    உயர் மலையோ


    Uyar Malaiyo Sama Veliyo Lyrics in English
    enthappakkam vanthaalum neenga en koodaaram
    theengu ennaianukaathu
    thurchchanappiravaakam soolnthida nintalum
    thuliyum ennai nerungaathu

    sitru vellaattu kitai pol kidanthaen
    um nilalil en thanjam konntaen

    uyar malaiyo sama veliyo
    iranntilum neerae en thaevan
    entha nilaiyilum aaraathiththiduvaen
    en Yesuvai mulu manathodu aaraathiththiduvaen

    aettamaay thontum paathaikalilellaam pinnilae thaangidum ullangai alaku sarukkalaay thontum paathaikalilellaam pinnalaay thaangidum um viralkal alaku
    naan entha nilai entalum ennai vittu pokaamal nirpathallo um alaku
    vittu kodukkaatha paeralaku
    uyar malaiyo

    ulakaththin kannnnil perumpaanmai ental athikampaer nirpathae avar sollum kanakku appaa um kannnnil thanimanithanaayinum
    neer thunnai nirpathaal perumpaanmai enakku
    ada oor enna sonnaalum paar
    ethir ninnaalum pillaiyallo naan umakku
    nikar illaatha thakappanukku
    uyar malaiyo

  • Uththamamaay Vaazhvaen உத்தமமாய் வாழ்வேன்

    உத்தமமாய் வாழ்வேன்

    கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்
    அநேகத்திற் கதிகாரியாய்
    மாற்றுவேன் என்ற என் நேசரே
    நீர் என்னையும் மாற்றிடுமே

    1.வாழ்வில் நேரும் போராட்டங்கள்
    தாக்கும் பல துன்பங்கள் – 2
    அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே
    உன்னத பெலன் தாருமே

    1. சோர்பிலாது ஜெபித்திட
      சலிப்பில்லாது உழைத்திட – 2
      உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே
      உன்னத பெலன் தாருமே

    3.மரணம் என்னை சந்திக்கும்
    நாள் வரையும் உண்மையாய்
    உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே
    உன்னத கிருபை தாருமே


    Uththamamaay Vaazhvaen Lyrics in English
    uththamamaay vaalvaen

    konjaththil unnmaiyaayirunthaal
    anaekaththir kathikaariyaay
    maattuvaen enta en naesarae
    neer ennaiyum maattidumae

    1.vaalvil naerum poraattangal
    thaakkum pala thunpangal – 2
    aththanaiyum sakiththida neer pelan thaarumae
    unnatha pelan thaarumae

    1. sorpilaathu jepiththida
      salippillaathu ulaiththida – 2
      uththamamaay vaalnthida neer pelan thaarumae
      unnatha pelan thaarumae

    3.maranam ennai santhikkum
    naal varaiyum unnmaiyaay
    uththamamaay jeevikka neer kirupai thaarumae
    unnatha kirupai thaarumae

  • Uththa Aaviyae பரிசுத்த ஆவியே வாருமையா

    பரிசுத்த ஆவியே, வாருமையா
    அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
    புது எண்ணையால், புது பெலத்தால்
    பாத்திரம் நிரம்பி வழியட்டுமே

    1.ஆத்தும ஆதாயம் செய்திடவே
    அழியும் மக்களை மீட்டிடவே
    அனுப்பும் தேவா ஆவியினை உம்
    அற்புதம் இன்று விளங்கட்டுமே

    2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்
    புதிய பெலத்தை கொடுத்தீரே
    சோர்ந்து போன ஊழியரே, உன்னை
    உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே

    3.உலர்ந்த எலும்புகள் உயிரடைய
    உன்னத ஆவியை அனுப்பினீரே
    சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க
    எழுப்புதல் இன்று அனுப்பிடுமே


    Uththa Aaviyae, Vaarumaiyaa Lyrics in English
    parisuththa aaviyae, vaarumaiyaa
    apishaekaththaal ennai nirappumaiyaa
    puthu ennnnaiyaal, puthu pelaththaal
    paaththiram nirampi valiyattumae

    1.aaththuma aathaayam seythidavae
    aliyum makkalai meettidavae
    anuppum thaevaa aaviyinai um
    arputham intu vilangattumae

    2.simsonukku neer irangineer
    puthiya pelaththai koduththeerae
    sornthu pona ooliyarae, unnai
    uyirpikka seyyum apishaekamae

    3.ularntha elumpukal uyirataiya
    unnatha aaviyai anuppineerae
    sapaikal valara, kaal oonti nirka
    elupputhal intu anuppidumae

  • Uthiththaarae Nalla Maeyppar உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை

    உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே
    விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த
    இம்மானுவேலன் இவர் தானே
    விண்ணிலே தேவனுக்கே மகிமை
    பூமியிலே நல் சமாதானம்
    மானிடர் மேல் பிரியமும்
    இன்றும் என்றும் உண்டாவதாக

    மந்தையை காத்த மேய்ப்பர்களும்
    சிந்தையில் சிறந்த ஞானியரும்
    பாலனை சென்று பணிந்தனரே
    நல் காணிக்கை அவருக்குப் படைத்தனரே
    உன்னையும் என்னையும் மீட்டிடவே
    பூமியில் வந்த அதிசயமே
    எண்ணில் அடங்கா நன்றியுடன்
    அவரைப் போற்றி துதித்திடுவோம் — உதித்தாரே

    அன்பே அவரின் திருமொழியாய்
    பண்பில் சிறந்த போதகராய்
    நம்மை அணைத்துக் காத்திடவே
    ஏழையின் கோலம் எடுத்தாரே
    விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே
    எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே
    வல்லவர் இயேசு பிறந்த நாளில்
    வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்திடுவோம் — உதித்தாரே


    Uthiththaarae Nalla Maeyppar Lyrics in English
    uthiththaarae nalla maeyppar pullannai meethinilae
    vinnnakam thuranthu mannnakam vantha
    immaanuvaelan ivar thaanae
    vinnnnilae thaevanukkae makimai
    poomiyilae nal samaathaanam
    maanidar mael piriyamum
    intum entum unndaavathaaka

    manthaiyai kaaththa maeypparkalum
    sinthaiyil sirantha njaaniyarum
    paalanai sentu panninthanarae
    nal kaannikkai avarukkup pataiththanarae
    unnaiyum ennaiyum meettidavae
    poomiyil vantha athisayamae
    ennnnil adangaa nantiyudan
    avaraip potti thuthiththiduvom — uthiththaarae

    anpae avarin thirumoliyaay
    pannpil sirantha pothakaraay
    nammai annaiththuk kaaththidavae
    aelaiyin kolam eduththaarae
    vinnnavar vaalththoli kaetkirathae
    ennnnillaa aanantham perukiduthae
    vallavar Yesu pirantha naalil
    vaalththukkal solli makilnthiduvom — uthiththaarae

  • Uthayanaeram Vaarunkal உதயநேரம் வாருங்கள்

    ஆராதிப்போம் வாருங்கள்!

    உதயநேரம் வாருங்கள்! உன்னதர் பாதம் தேடுங்கள்!
    பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்! பரமனின் புகழ் பாடுங்கள்!

    1. பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுக தரிசனம்
      அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும்
    2. இயேசுவைக் கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன்
      தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன்
    3. தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமே
      ஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும் கோபுர சாதனை புரிந்திடும்

    Uthayanaeram Vaarunkal! Lyrics in English
    aaraathippom vaarungal!

    uthayanaeram vaarungal! unnathar paatham thaedungal!
    panninthu kuninthu vaalththungal! paramanin pukal paadungal!

    1. paadukal niraintha ulakinil thaevanin thirumuka tharisanam
      alaiyinil amaithi thanthidum aaththuma valimai aliththidum
    2. Yesuvaik kannda manithanae thaevaiyin tharisanam kaannpavan
      thaevanin saththam kaetpavan thaevanin siththam seypavan
    3. thaevanodu thinam thanimaiyil vaalnthu palakiya ullamae
      aikkiya vaalvil jeyamperum kopura saathanai purinthidum
  • Uthavi Varum Kanmalai Noekkip Paarkkinraen உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
    வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன்

    1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
      காக்கும் தேவன் உறங்கமாட்டார்
      இஸ்ரவேலைக் காக்கிறவர்
      எந்நாளும் தூங்க மாட்டார்
    2. கர்த்தர் என்னைக் காக்கின்றார்
      எனது நிழலாய் இரக்கின்றார்
      பகலினிலும் இரவினிலும்
      பாதுகாக்கின்றார்
    3. கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
      விலக்கி என்னைக் காக்கின்றார்
      அவர் எனது ஆத்துமாவை
      அநுதினம் காத்திடுவார்
    4. போகும்போதும் காக்கின்றார்
      திரும்பும்போதும் காக்கின்றார்
      இப்போதும் எப்போதும்
      எந்நாளும் காக்கின்றார்

    Uthavi Varum Kanmalai Noekkip Paarkkinraen Lyrics in English
    uthavi varum kanmalai Nnokkip paarkkinten
    vaanamum vaiyamum pataiththavarai naan paarkkinten

    1. kaalkal thallaada vidamaattar
      kaakkum thaevan urangamaattar
      isravaelaik kaakkiravar
      ennaalum thoonga maattar
    2. karththar ennaik kaakkintar
      enathu nilalaay irakkintar
      pakalinilum iravinilum
      paathukaakkintar
    3. karththar ellaath theengirkum
      vilakki ennaik kaakkintar
      avar enathu aaththumaavai
      anuthinam kaaththiduvaar
    4. pokumpothum kaakkintar
      thirumpumpothum kaakkintar
      ippothum eppothum
      ennaalum kaakkintar
  • Uthavi Seitharule உதவி செய்தருளே

    உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம்
    உதவி செய்திடவே

    உதவி செய்தருள் மோட்ச
    உசிதக் கோனே நீ பூவில்
    பதவி தந்திட வந்த போதினின்
    பலருக்குதவின பான்மை போலவே

    ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்க
    ஒத்தாசை தருவாய்
    தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரிய
    சகோதரன் படும் கஷ்சங் கவலையில்
    சன்மனத்தொடு பங்கு பெற்றிட

    உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள்
    ஒன்றாய்ப் பொருந்தவே
    எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட
    உன் தயை செயல் தந்து மேற்பட

    பிரியாமல் உனையே பற்ற எமக்குப்
    வெலன் தா நீ துணையே
    நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை
    நிதமு மதிலே மிக வுய்திடவே

    மாசற்ற பளிங்காய் ஒளிருமுன்
    மாணன்பு மிகவாய்
    ஆசற்ற குணமணி கோர்க்கும் பொற் சரடதே
    அழிவிலாததை எமக்குள் அணிந்திட
    ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட


    Uthavi Seitharule Lyrics in English
    uthavi seytharulae oruvarukkoruvar yaam
    uthavi seythidavae

    uthavi seytharul motcha
    usithak konae nee poovil
    pathavi thanthida vantha pothinin
    palarukkuthavina paanmai polavae

    oruvaroruvarkkaay siluvai thookka
    oththaasai tharuvaay
    tharuna naesa sakaayam sakalarkkum piriya
    sakotharan padum kashsang kavalaiyil
    sanmanaththodu pangu pettida

    unnanpu thodavae emmullangal
    ontayp porunthavae
    ennaalum piranpaal yaam aekiyae kittida
    un thayai seyal thanthu maerpada

    piriyaamal unaiyae patta emakkup
    velan thaa nee thunnaiyae
    niraivaay uniliruntha parivaana anpin sinthai
    nithamu mathilae mika vuythidavae

    maasatta palingaay olirumun
    maananpu mikavaay
    aasatta kunamanni korkkum por saradathae
    alivilaathathai emakkul anninthida
    aarnthun sinthaiyai naernthu seythida