Author: admin

  • Thooki Sumapeerae தூக்கி சுமப்பீரே

    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
    உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
    பயமின்றி வாழ்ந்திடுவேன்

    குழப்பங்கள் என்னை குழப்பும் போது
    குழந்தை போல நான் உம்முன் வருவேன்
    போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
    யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்

    பாரங்கள் என்னை அழுத்தும் போது
    உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
    யாருமின்றி நான் கலங்கும் போது
    என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்


    Thooki Sumapeerae Lyrics in English
    thookki sumappeerae vaalnaalellaam
    thookki sumappeerae vaalnaalellaam
    unthan tholkalil naan kidappaen
    payaminti vaalnthiduvaen

    kulappangal ennai kulappum pothu
    kulanthai pola naan ummun varuvaen
    poraattangal enai Nnokki kerchchikkum pothu
    yootha raaja singaththidam ataikkalam pukuvaen

    paarangal ennai aluththum pothu
    um paathaththai naan pitiththukkolvaen
    yaaruminti naan kalangum pothu
    en nannpanaaka neerae ennai nadaththich selveer

  • Thooimai Pera Naadu Karthar Pathame தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

    1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே

    நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;

    கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,

    யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

    1. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில்

    தனித்திரு நாளும் அவர் பாதத்தில்

    யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை

    பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

    1. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,

    என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;

    இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,

    நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை.

    1. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,

    சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,

    அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,

    முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.


    Thooimai Pera Naadu Karthar Pathame Lyrics in English

    1. thooymai pera naadu; karththar paathamae

    nilaiththavar vaarththai utkollentumae;

    kooti paktharodu sornthor thaanguvaay,

    yaavilumae theyva thayai naaduvaay.

    1. thooymai pera naadu; lokaththil koshdaththil

    thaniththiru naalum avar paathaththil

    yaesuvaip polaavaay, Nnokkin avarai

    paarppor unnil kaannpaar avar saayalai.

    1. thooymai pera naadu; karththar nadaththa,

    enna naerittalum, avarpin sella;

    inpam thunpam naernthum vidaay avarai,

    Nnokkiyavar vaakkil vaippaay nampikkai.

    1. thooymai pera naadu; aathmaa amarnthu,

    sinthai seykai yaavum avarkkutpattu,

    anpin jeeva oottaைch sernthu rusikka,

    muttum thooymaiyaavaay vinnnnil vasikka.

  • Thoobam Pol En தூபம் போல் என்

    தூபம் போல் என் ஜெபங்கள்
    ஏற்றுக் கொள்ளும் ஐயா
    மாலை பலி போல் என் கைகளை
    உயர்த்தினேன் ஐயா
    உம்மை நோக்கி கதறுகிறேன்
    விரைவாய் உதவி செய்யும்

    என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
    நிலைநிற்க முடியாதையா
    மன்னிப்புத் தருபவரே
    உம்மைத் தான் தேடுகிறேன்

    விடியலுக்காய் காத்திருக்கும்
    காவலனைப் பார்க்கிலும்
    என் நெஞ்சம் ஆவலுடன்
    உமக்காய் ஏங்குதையா

    என் வாய்க்கு காவல் வையும்
    காத்துக் கொள்ளுமையா
    தீயன எதையுமே
    நாட விடாதேயும்

    என் கண்கள் உம்மைத் தானே
    நோக்கி இருக்கின்றன
    அடைக்கலம் புகுந்தேன் – நான்
    அழிய விடாதேயும்


    Thoobam Pol En Lyrics in English
    thoopam pol en jepangal
    aettuk kollum aiyaa
    maalai pali pol en kaikalai
    uyarththinaen aiyaa
    ummai Nnokki katharukiraen
    viraivaay uthavi seyyum

    en kuttangal neer manathil konndaal
    nilainirka mutiyaathaiyaa
    mannipputh tharupavarae
    ummaith thaan thaedukiraen

    vitiyalukkaay kaaththirukkum
    kaavalanaip paarkkilum
    en nenjam aavaludan
    umakkaay aenguthaiyaa

    en vaaykku kaaval vaiyum
    kaaththuk kollumaiyaa
    theeyana ethaiyumae
    naada vidaathaeyum

    en kannkal ummaith thaanae
    Nnokki irukkintana
    ataikkalam pukunthaen – naan
    aliya vidaathaeyum

  • Thondu Seaiyath தொண்டு செய்யத்

    தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம்
    மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம்

    ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்
    வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம்

    கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்
    பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட

    சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்
    பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர

    தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட
    ஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட

    .சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்
    முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம்

    சத்திய விரதம் பூண்டு சாந்தமாய்ச் செல்வோம்,
    அத்தனின் அருளைச் சார்ந்தும் ஆனந்தம் கொள்வோம்


    Thondu seaiyath Lyrics in English
    thonndu seyyath tholarae, thutippudan selvom
    manndala maanidar maannpai naatiththaeduvom

    eenndu kooti yaekamaay eththisaiyum selluvom
    vaenndum tholar virumpichchaேra viraivudan serppom

    katchi neengak kalvi ongak, kiraamam kalikkap
    patchikkum kadan kavalai paranthae otida

    sirumai theerach selvaakkuch suthanthiram serap
    porumai seranni vakuththum aikkiyam valara

    thaalchchiyullor vaalvataiyum tharumam ongida
    aatchiyaavum avarkal nanmaikkenta maarida

    .suththa manath thooymaiyaal nam sorvai ottuvom
    muththar pol suyanalanthuranthu thunnivom

    saththiya viratham poonndu saanthamaaych selvom,
    aththanin arulaich saarnthum aanantham kolvom

  • Tholugirom Engal Pithave தொழுகிறோம் எங்கள் பிதாவே

    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்

    வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

    கண்கள் புறாக்கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல (2)
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

    அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
    கூடிவந்த எம் அலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

    பாவிநேசன் பாவநாசன்
    பரமபாதன் வரமே வாசன் (2)
    துங்காசிங்கன் மங்காதங்கன்
    துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

    பார்த்திபனே கன தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்


    Tholugirom Engal Pithave Lyrics in English
    tholukirom engal pithaavae
    poluthellaam aavi unnmaiyudanae

    parisuththa alangaaraththudanae
    tharisippathinaal saranam saranam

    vennmaiyum sivappumaanavar
    unnmaiyae uruvaayk konndavar (2)
    ennaiyae meettuk konndavar
    annaiyae itho saranam saranam – tholukirom

    kannkal puraakkannkal pola
    kannangal paaththikal pola (2)
    sinnangal siranthathaalae
    ennnnillaatha saranam saranam – tholukirom

    atiyaarkalin asthipaaram
    arivukkettatha visthaaram (2)
    kootivantha em alangaaram
    kodaa kotiyaam saranam saranam – tholukirom

    paavinaesan paavanaasan
    paramapaathan varamae vaasan (2)
    thungaasingan mangaathangan
    thuyya anganae saranam saranam – tholukirom

    paarththipanae kana thoththiram
    geerththanam mangalam niththiyam (2)
    vaalka vaalka vaalka entum
    allaelooyaa aamen aamen – tholukirom

  • Thollai Kasdangal தொல்லை கஷ்டங்கள்

    தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
    இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
    சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
    பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்

    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    காத்திடுவார் என்றுமே

    1. ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்
      மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
      என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
      முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும்
    2. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
      யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
      அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்

    என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் -காக்கும்


    Thollai Kasdangal Lyrics in English
    thollai kashdangal soolnthidum thunpam thukkam varum
    inpaththil thunpam naernthidum irulaayth thontum engum
    sothanai varum vaelaiyil sorkaetkum seviyilae
    paraththilirunthu jeyam varum paran unnaik kaakka vallor

    kaakkum valla meetpar unndenakku (3 )
    kaakkum valla meetpar unndenakku
    kaaththiduvaar entumae

    1. aiyamirunthathor kaalaththil aavik kuraivaal thaan
      meetpar uthira pelaththaal saththuruvai venten
      en payam yaavum neengitte Yesu kai thookkinaar
      muttum ennullam maarittu iyaesennaik kaakka vallor -kaakkum
    2. enna vanthaalum nampuvaen en naesa meetparai
      yaar kaivittalum pin selvaen enathu Yesuvai
      akala aala uyaramaay evvalavanpu koornthaar
      enna thunpangal vanthaalum ennaik kaividamaattar -kaakkum
  • Thoeththiram Seyvaenae தோத்திரம் செய்வேனே

    தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
    தோத்திரம் செய்வேனே

    பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
    பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்

    1. அன்னை மரி சுதனை – புல் மீது
      அமிழ்துக் கழுதவனை
      முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
      முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
    2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
      வந்தடி பணிபவனை
      மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
      மான பரன் என்னும் ஞான குணவானை
    3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
      தேடும் குருவானை
      அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
      அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி.

    Thoeththiram Seyvaenae Lyrics in English
    thoththiram seyvaenae – ratchakanaith
    thoththiram seyvaenae

    paaththiramaakka immaathram karunnaivaiththa
    paarththipanai yoothak koththiranai entum

    1. annai mari suthanai – pul meethu
      amilthuk kaluthavanai
      munnannai meethutta sinnak kumaaranai
      munnurai noorpati innilath thuttaோnai
    2. kanthai pothinthavanai – vaanorkalum
      vanthati pannipavanai
      manthaiyark kaanantha maatchiyaliththonai
      maana paran ennum njaana kunavaanai
    3. sempon nuruvaanaith – thaesikarkal
      thaedum kuruvaanai
      ampara maeviya umpar kanaththodu
      anpu pera nintu paim pon malar thoovi.
  • Thoeththiram Patiyae Poerrituvaen தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்

    1. அற்புதமான அன்பே – என்னில்
      பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
      என்றும் மாறா தேவ அன்பே
      என்னுள்ளம் தங்கும் அன்பே
    2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
      ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
      தியாகமான தேவ அன்பே
      திவ்விய மதுர அன்பே

    Thoeththiram Patiyae Poerrituvaen Lyrics in English
    thoththiram paatiyae pottiduvaen
    thaevaathi thaevanai raajaathi raajanai
    vaalththi vanangiduvaen

    1. arputhamaana anpae – ennil
      porparan paaraattum thooya anpae
      entum maaraa thaeva anpae
      ennullam thangum anpae
    2. jothiyaay vantha anpae – poovil
      jeevan thanthu ennai meetta anpae
      thiyaakamaana thaeva anpae
      thivviya mathura anpae
  • Thodum En Kangalaiye தொடும் என் கண்களையே

    தொடும் என் கண்களையே
    உம்மை நான் காண வேண்டுமே
    இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே
    தொடும் என் காதுகளை
    உம் குரலை கேட்க வேண்டுமே
    இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே

    தொடும் என் ஆண்டவரே
    தொடும் என் வாழ்வினையே
    இயேசுவே உம்மைப்போல்
    என்னை மாற்றுமே

    தொடும் என் நாவினையே
    உம் புகழ் பாட வேண்டுமே
    இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே
    தொடும் என் ஆன்மாவையே
    என் பாவம் போக்க வேண்டுமே
    இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

    தொடும் என் மனதினையே
    மனப்புண்கள் ஆறவேண்டுமே
    இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
    தொடும் என் உடலினையே
    உடல் நோய்கள் தீர வேண்டுமே
    இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே


    Thodum en kangalaiye Lyrics in English
    thodum en kannkalaiyae
    ummai naan kaana vaenndumae
    Yesuvae ummai naan kaana vaenndumae
    thodum en kaathukalai
    um kuralai kaetka vaenndumae
    Yesuvae um kuralai kaetka vaenndumae

    thodum en aanndavarae
    thodum en vaalvinaiyae
    Yesuvae ummaippol
    ennai maattumae

    thodum en naavinaiyae
    um pukal paada vaenndumae
    Yesuvae um pukalaip paada vaenndumae
    thodum en aanmaavaiyae
    en paavam pokka vaenndumae
    Yesuvae en paavam pokka vaenndumae

    thodum en manathinaiyae
    manappunnkal aaravaenndumae
    Yesuvae manappunnkal aaravaenndumae
    thodum en udalinaiyae
    udal Nnoykal theera vaenndumae
    Yesuvae udal Nnoykal theera vaenndumae

  • Thirupthiyaakki Nataththituvaar திருப்தியாக்கி நடத்திடுவார்

    திருப்தியாக்கி நடத்திடுவார்
    தேவைகளை சந்திப்பார்
    மீதம் எடுக்க வைப்பார்
    பிறருக்கு கொடுக்க வைப்பார்

    பாடி கொண்டாடுவோம்
    கோடி நன்றி சொல்லுவோம்

    1. ஐந்து அப்பங்களை
      ஆயிரமாய் பெருகச் செய்தார்
      ஐயாயிரம் ஆண்களுக்கு
      வயிராற உணவளித்தார்
    2. பொன்னோடும் பொருளோடும்
      புறப்படச் செய்தாரே
      பலவீனம் இல்லாமலே
      பாதுகாத்து நடத்தினாரே – ஒரு
    3. காடைகள் வரவழைத்தார்
      மன்னாவால் உணவளித்தார்
      கற்பாறையை பிளந்த
      தண்ணீர்கள் ஓடச்செய்தார்
    4. நீடிய ஆயுள் தந்து
      நிறைவோடு நடத்திடுவார்
      முதிர் வயதானாலும்
      பசுமையாய் வாழச் செய்வார்
    5. கெம்பீர சத்ததோடு
      ஆரவார முழக்கத்தோடு
      தெரிந்து கொண்ட தம் மக்களை
      தினமும் நடத்தி சென்றார்
    6. துதிக்கும்போதெல்லாம்
      சுவையான உணவு அது
      ஆத்மா திருப்தியாகும்
      ஆனந்த ராகம் பிறக்கும்

    Thirupthiyaakki Nataththituvaar Lyrics in English

    thirupthiyaakki nadaththiduvaar
    thaevaikalai santhippaar
    meetham edukka vaippaar
    pirarukku kodukka vaippaar

    paati konndaaduvom
    koti nanti solluvom

    1. ainthu appangalai
      aayiramaay perukach seythaar
      aiyaayiram aannkalukku
      vayiraara unavaliththaar
    2. ponnodum porulodum
      purappadach seythaarae
      palaveenam illaamalae
      paathukaaththu nadaththinaarae – oru
    3. kaataikal varavalaiththaar
      mannaavaal unavaliththaar
      karpaaraiyai pilantha
      thannnneerkal odachcheythaar
    4. neetiya aayul thanthu
      niraivodu nadaththiduvaar
      muthir vayathaanaalum
      pasumaiyaay vaalach seyvaar
    5. kempeera saththathodu
      aaravaara mulakkaththodu
      therinthu konnda tham makkalai
      thinamum nadaththi sentar
    6. thuthikkumpothellaam
      suvaiyaana unavu athu
      aathmaa thirupthiyaakum
      aanantha raakam pirakkum