Category: Tamil Worship Songs Lyrics

  • Yakkoppe Nee யாக்கோபே நீ

    யாக்கோபே நீ வேரூன்றுவாய்
    பூத்துக் குலுங்கிடுவாய்
    காய்த்துக் கனி தருவாய்
    பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த

    என் மகனே நீ வேரூன்றுவாய்

    நானே காப்பாற்றுவேன்
    நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
    இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை
    எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

    அருமையான மகன் அல்லவோ எனக்கு
    பிரியமான பிள்ளையல்லவோ நீ
    உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
    உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

    நுகங்களை முறித்துவிட்டேன்
    கட்டுகளை அறுத்துவிட்டேன்
    இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
    எனக்கே ஊழியம் செய்திடுவாய்

    புதிய கூர்மையான
    போரடிக்கும் கருவியாக்குவேன் உன்னை
    மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
    குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய்


    Yakkoppe Nee Lyrics in English
    yaakkopae nee vaeroontuvaay
    pooththuk kulungiduvaay
    kaayththuk kani tharuvaay
    poomiyellaam nirappiduvaay intha

    en makanae nee vaeroontuvaay

    naanae kaappaattuvaen
    naalthorum neer paaychchuvaen
    iravum pakalum kaaththuk kolvaen unnai
    evarum theengilaikka vidamaattaen

    arumaiyaana makan allavo enakku
    piriyamaana pillaiyallavo nee
    unnai naan innum ninaikkinten
    unakkaaka en ithayam aengukintathu

    nukangalai muriththuvittaen
    kattukalai aruththuvittaen
    inimael nee atimai aavathillai
    enakkae ooliyam seythiduvaay

    puthiya koormaiyaana
    poratikkum karuviyaakkuvaen unnai
    malaikalai mithiththu norukkiduvaay
    kuntukalaith thavidu potiyaakkuvaay

  • Yagova Nisi Yagova Nisi யேகோவா நிசி யேகோவா நிசி

    யேகோவா நிசி யேகோவா நிசி
    யேகோவா நிசியை
    யேகோவா நிசியை
    ஏற்றிப்பாடுவோம் எங்கள்
    கொடி வெற்றிக்கொடியே- ஆஹா

    1. கர்த்தர் துணை நின்று
      யுத்தம் செய்வாரே
      கலங்கி நிற்க காரணங்கள்
      இல்லையே கைகளைத்
      தளர்த்திடாமல் தாங்கியே
      கர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்
      சத்தியம் என்ற கச்சை கட்டியே – ஆஹா
    2. வீறுகொண்டெழுவீர் இயேசு
      வீரரே மாறுகொண்டு
      மன்னர் முன்னே
      செல்கிறார்
      சீறியெழும் சிங்கங்கள்
      நாம் அல்லவோ
      மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!
      நீதி என்ற கவசம் அணிந்தே – ஆஹா
    3. ஆவியில் நிறைந்து ஜெபம்
      செய்வோமே
      ஆயுதங்கள் அணிந்து
      களம் செல்வோமே
      ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
      ஆவிகளின்சேனைகளை
      வெல்லுவோம்
      சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா
    4. சத்ரு வெள்ளம் போல ஏறி
      வருகிறான்
      சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார்
      கோலியாத்தின் வேஷம்
      இங்கே செல்லுமா?
      கோஷமிடும் இளைஞரின்
      முன் நிற்குமா?
      விசுவாச கேடயம் எடுத்துமே -ஆஹா
    5. முடிந்தென்று முழங்கி நிற்கும்
      வீரனே முற்றும் அவனை
      முறியடித்து தீரனே
      சிலுவையில் சிரம் நசித்த சீலனே
      சிலுவைக்கொடியை ஏற்றும்
      தேவபாலனே!
      ரட்சிப்பென்ற தலைசீராவை
      அணிந்தே-ஆஹா
    6. நமக்கு இருக்கும் இந்த
      பெலன் போதுமே
      இந்தியாவின் சாட்சியாக
      போவோமே பட்டயமோ
      புயபலமோ தேவையா?
      பரம தேவ ஆவி நம்மில்
      இல்லையா?

    வேத வசன வாள் சுழற்றியே – ஆஹா


    Yagova Nisi Yagova Nisi Lyrics in English
    yaekovaa nisi yaekovaa nisi
    yaekovaa nisiyai
    yaekovaa nisiyai
    aettippaaduvom engal
    koti vettikkotiyae- aahaa

    1. karththar thunnai nintu
      yuththam seyvaarae
      kalangi nirka kaaranangal
      illaiyae kaikalaith
      thalarththidaamal thaangiyae
      karththar Yesu sathyaaavi nirkiraar
      saththiyam enta kachchaை kattiyae – aahaa
    2. veerukonndeluveer Yesu
      veerarae maarukonndu
      mannar munnae
      selkiraar
      seeriyelum singangal
      naam allavo
      meerum ethiri sathikalukku miralavaa!
      neethi enta kavasam anninthae – aahaa
    3. aaviyil nirainthu jepam
      seyvomae
      aayuthangal anninthu
      kalam selvomae
      aarppariththalangamathai veelththiyae
      aavikalinsenaikalai
      velluvom
      samaathaana ratchaைanninthae -aahaa
    4. sathru vellam pola aeri
      varukiraan
      sathyaaavivaekamkotiyaiaettuvaar
      koliyaaththin vaesham
      ingae sellumaa?
      koshamidum ilainjarin
      mun nirkumaa?
      visuvaasa kaedayam eduththumae -aahaa
    5. mutinthentu mulangi nirkum
      veeranae muttum avanai
      muriyatiththu theeranae
      siluvaiyil siram nasiththa seelanae
      siluvaikkotiyai aettum
      thaevapaalanae!
      ratchippenta thalaiseeraavai
      anninthae-aahaa
    6. namakku irukkum intha
      pelan pothumae
      inthiyaavin saatchiyaaka
      povomae pattayamo
      puyapalamo thaevaiyaa?
      parama thaeva aavi nammil
      illaiyaa?
      vaetha vasana vaal sulattiyae – aahaa
  • Yaezhaigalin Belane ஏழைகளின் பெலனே

    ஏழைகளின் பெலனே
    எளியவரின் திடனே
    புயல் காற்றிலே என் புகலிடமே
    கடும் வெயினிலே குளிர் நிழலே

    1. கர்த்தாவே நீரே என் தேவன்
      நீரே என் தெய்வம்
      உம் நாமம் உயர்த்தி
      உன் அன்பைப் பாடி
      துதித்து துதித்திடுவேன்
      அதிசயம் செய்தீர் ஆண்டவரே
    2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
      தடுமாறும்போது தாங்கி அணைத்து
      தயவோடு நடத்துகிறீர்
      உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

    Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே Lyrics in English
    Yaezhaigalin Belane
    aelaikalin pelanae
    eliyavarin thidanae
    puyal kaattilae en pukalidamae
    kadum veyinilae kulir nilalae

    1. karththaavae neerae en thaevan
      neerae en theyvam
      um naamam uyarththi
      un anpaip paati
      thuthiththu thuthiththiduvaen
      athisayam seytheer aanndavarae
    2. thaayaip pola thaettukireer, aattukireer
      thadumaarumpothu thaangi annaiththu
      thayavodu nadaththukireer
      um matiyilae thaan ilaippaaruvaen
  • Yaesuvae Kirupaasanappathiyae யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட

    யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
    இழிஞன் எனை மீட்டருள்,
    ஏசுவே, கிரு பாசனப்பதியே.

    1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
      கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
      நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
      நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு
    2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
      பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;
      தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
      தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு

    3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி
    தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
    குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
    குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, — யேசு

    1. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
      புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்;
      எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
      இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, — யேசு

    Yaesuvae Kirupaasanappathiyae Lyrics in English
    yaesuvae, kiru paasanappathiyae, ketta
    ilinjan enai meettarul,
    aesuvae, kiru paasanappathiyae.

    1. kaasiniyil unnai anti, thaasan enakkaatharavu
      kanntilaen, saruva valla manndalaathipaa!
      naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu
      niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi, — yaesu
    2. paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum,
      pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen;
      theeyarai meetkum porulaay naeyam uttuthiram vitta
      thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki, — yaesu

    3.siraippaduththina vattaைch siraiyaakki vittaathi
    theeramulla engalupa kaara vallalae,
    kurai aethunai anntinork kiraivaa? enaich sathikkum
    kuttangal aravae theerththu, muttumutiyak kann paarththu, — yaesu

    1. pollaa ulakam athil nallaar evarum illai,
      punnnniyanae, un saranam nannnni anntinaen;
      ellaarkkul ellaamnee allo enakkuthavi?
      innaal arul purinthu un aaviyaich sorinthu, — yaesu
  • Yaesu Nasaraiyinathipathiyae யேசு நசரையி னதிபதியே

    யேசு நசரையி னதிபதியே, – பவ நரர்பினை யென வரும்.

    தேசுறு பரதல வாசப் பிரகாசனே
    ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு

    1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
      எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
      தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
      சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — யேசு
    2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
      நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
      தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
      தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — யேசு
    3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
      கேடுபாடுகள் யாவையும் தீரும்;
      பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
      பொன்னு லோகமதில் என்னையே சேரும். — யேசு

    Yaesu Nasaraiyinathipathiyae Lyrics in English
    yaesu nasaraiyi nathipathiyae, – pava nararpinai yena varum.

    thaesutru parathala vaasap pirakaasanae
    jeevanae, amarar paavanae makaththuva. — yaesu

    1. intha ulaku suvai thanthu poraaduthae,
      enathudalum athuvo tisainthu seeraaduthae;
      thanthara alakai soola nintu vaathaaduthae;
      saami, paaviyakam Nnoyinil vaaduthae. — yaesu
    2. nin suya pelanallaamal en pelan aethu
      ninaivu, seyal, vasanam, muluthum pollaathu;
      thanjam unai atainthaen, thavara vidaathu;
      thaangi aal karunnai ongi eppothum. — yaesu
    3. kirupaiyudan en iruthayanthanil vaarum;
      kaedupaadukal yaavaiyum theerum;
      porumai, nampikkai, anpu pothavae thaarum;
      ponnu lokamathil ennaiyae serum. — yaesu
  • Yaesappaa Unka Naamaththil இயேசப்பா உங்க நாமத்தில்

    இயேசப்பா உங்க நாமத்தில்
    இன்றும் அற்புதங்கள் நடக்குது
    பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
    பாவங்கள் பறந்தோடுது

    உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
    உந்தன் உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை (2)

    1. துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் நோய்கள்
      வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார்
      விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
      தேவ மகிமையை கண்டிடுவோம்
    2. மந்திர சூனியம் செய்வினை கட்டுக்கள்
      இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
      ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
      உலகத்தை நாம் கலக்கிடுவோம்
    3. சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
      இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
      துதியின் ஆயுதம் நமக்குள் இருந்தால்
      அசுத்த ஆவியை துரத்திடுவோம்

    Yaesappaa Unka Naamaththil Lyrics in English
    iyaesappaa unga naamaththil
    intum arputhangal nadakkuthu
    paeykal oduthu Nnoykal theeruthu
    paavangal paranthoduthu

    unthan vallamaikal kurainthu pokavillai
    unthan uyirththeluthal makimai maaravillai (2)

    1. thunpangal thollaikal viyaathikal Nnoykal
      vanthaalum nam Yesu kunamaakkuvaar
      visuvaasam namakkul irunthaal pothum
      thaeva makimaiyai kanndiduvom
    2. manthira sooniyam seyvinai kattukkal
      inte nam Yesu utaiththerivaar
      aaviyaanavar namakkul iruppathaal
      ulakaththai naam kalakkiduvom
    3. saaththaanin sathikalaa paavaththin vaalkkaiyaa
      inte nam Yesu utaiththerivaar
      thuthiyin aayutham namakkul irunthaal
      asuththa aaviyai thuraththiduvom
  • Yaen Maganae Innum ஏன் மகனே மகளே இன்னும்

    ஏன் மகனே (மகளே) இன்னும்
    இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    உன்னோடு நான் இருக்க
    உன் படகு மூழ்கிடுமோ?

    கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2

    நற்கிரியை தொடங்கியவர்
    நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
    திகிலூட்டும் காரியங்கள்
    செய்திடுவார் உன் வழியாய் -கரை

    நீதியினால் ஸ்திரப்படுவாய்
    கொடுமைக்கு நீ தூரமாவாய்
    திகில் உன்னை அணுகாது
    பயமில்லாத வாழ்வு உண்டு

    படைத்தவரே உனக்குள்ளே
    செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்
    விருப்பத்தையும் ஆற்றலையும்
    தருகின்றார் அவர் சித்தம் செய்ய

    வழுவாமல் காத்திடுவார்
    நீதிமானாய் நிறுத்திடுவார்
    மகிமையுள்ள அவர் சமூகத்திலே
    மகிழ்வோடு நிற்கச் செய்வார்

    வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
    வழி குரல் கேட்கும்
    கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
    மனம் இரங்கி பதிலளிப்பார்


    Yaen maganae innum Lyrics in English
    aen makanae (makalae) innum
    innum payam unakku
    aen nampikkai illai?
    unnodu naan irukka
    un padaku moolkidumo?

    karai sernthiduvaay (nee) kalangaathae -2

    narkiriyai thodangiyavar
    nichchayamaay mutiththiduvaar-unnil
    thikiloottum kaariyangal
    seythiduvaar un valiyaay -karai

    neethiyinaal sthirappaduvaay
    kodumaikku nee thooramaavaay
    thikil unnai anukaathu
    payamillaatha vaalvu unndu

    pataiththavarae unakkullae
    seyalaatti makilkintar – unnaip
    viruppaththaiyum aattalaiyum
    tharukintar avar siththam seyya

    valuvaamal kaaththiduvaar
    neethimaanaay niruththiduvaar
    makimaiyulla avar samookaththilae
    makilvodu nirkach seyvaar

    vali thavari saaynthaalum ithuthaan
    vali kural kaetkum
    kooppiduthal saththam kaetpaar
    manam irangi pathilalippaar

  • Yaekovaa Thaevanukku Aayiram Naamangal யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

    யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
    எதை சொல்லி பாடிடுவேன்
    என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
    கரம் தட்டி பாடிடுவேன்

    பல்லவி

    யேகோவா ஷாலோம்
    யேகோவா ஷம்மா
    யேகோவா ரூவா
    யேகோவா ரவ்ப்பா

    1. எல்லோரிக்கு அல்லேலூயா
      என்னை நீரே கண்டீரையா
      ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
      நான் தாகத்தோடு வந்த போது
      ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
      தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா
    2. எல்ஷடாயும் நீங்க தாங்க
      சர்வ வல்ல தேவனாக
      என்னை என்றும் நடத்துவீங்க
      எபினேசரும் நீங்க தாங்க
      உதவி செய்யும் தேவனாக
      என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா
    3. எல்லோகியும் நீங்க தாங்க
      என்றும் உள்ள தேவனாக
      எந்த நாளும் பாடுவீங்க
      இம்மானுவேல் நீங்க தாங்க
      மண்ணில் வந்த தேவன் நீங்க
      இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

    Yehova Devanukku
    yaekovaa thaevanukku aayiram naamangal
    ethai solli paadiduvaen
    en karththaathi karththar seytha nanmaikal aayiram
    karam thatti paadiduvaen

    pallavi

    yaekovaa shaalom
    yaekovaa shammaa
    yaekovaa roovaa
    yaekovaa ravppaa

    1. ellorikku allaelooyaa
      ennai neerae kannteeraiyaa
      aekkamellaam theerththeeraiyaa
      naan thaakaththodu vantha pothu
      jeeva thannnneer enakku thanthu
      thaakamellaam theerththeeraiyaa — yaekovaa
    2. elshadaayum neenga thaanga
      sarva valla thaevanaaka
      ennai entum nadaththuveenga
      epinaesarum neenga thaanga
      uthavi seyyum thaevanaaka
      ennai entum thaanguveenga — yaekovaa
    3. ellokiyum neenga thaanga
      entum ulla thaevanaaka
      entha naalum paaduveenga
      immaanuvael neenga thaanga
      mannnnil vantha thaevan neenga
      intum entum paaduveenga — yaekovaa
  • Yacob Ennum யாக்கோபென்னும் சிறு பூச்சியே

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே
    நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே
    நீ எதற்கும் பயந்துவிடாதே

    உன்னை உண்டாக்கினவர்
    உன்னை சிருஷ்டித்தவர்
    உன் முன்னே நடந்து செல்கிறார்
    தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

    அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை
    தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை
    பேர் சொல்லி அழைத்த தேவன்
    உன்னை மகிமைப்படுத்திடுவார்

    பெலவீனன் ஆவதில்லை – இல்லை
    சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை
    சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
    சாபம் உன்னை அணுகுவதில்லை

    வியாதிகள் வருவதில்லை – இல்லை
    வாதைகள் தொடர்வதில்லை – இல்லை
    ஆண்டுகள் முடிவதில்லை
    அவர் கிருபையோ விலகுவதில்லை


    Yacob ennum Lyrics in English
    yaakkopennum sitru poochchiyae
    nee ontukkum kalangi vidaathae
    isravaelin sitru koottamae
    nee etharkum payanthuvidaathae

    unnai unndaakkinavar
    unnai sirushtiththavar
    un munnae nadanthu selkiraar
    theengu unnai ontum seyyaathae

    alaiththavar kaividuvaaro – illai
    therinthavar vitdiduvaaro – illai
    paer solli alaiththa thaevan
    unnai makimaippaduththiduvaar

    pelaveenan aavathillai – illai
    sukaveenam thodarvathillai – illai
    saaththaan unnai jeyippathillai
    saapam unnai anukuvathillai

    viyaathikal varuvathillai – illai
    vaathaikal thodarvathillai – illai
    aanndukal mutivathillai
    avar kirupaiyo vilakuvathillai

  • Yaarum Illai Raja யாரும் இல்லை ராஜா

    யாரும் இல்லை ராஜா
    உம்மை போல என்னை தொட்டவர்கள்
    வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
    யாரும் இல்லை ராஜா

    உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
    நீர் தொட்டால் சுகம் உண்டு
    உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
    உம்மை போல் யாருண்டு

    யாரும் இல்லை ராஜா
    உம்மை போல என்னை தொட்டவர்கள்
    வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
    யாரும் இல்லை ராஜா


    Yaarum Illai Raja Lyrics in English
    yaarum illai raajaa
    ummai pola ennai thottavarkal
    vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen
    yaarum illai raajaa

    um irakkangal perum nathiyai pol
    neer thottal sukam unndu
    um settaைyin geel paathukaavalunndu
    ummai pol yaarunndu

    yaarum illai raajaa
    ummai pola ennai thottavarkal
    vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen
    yaarum illai raajaa