Category: Tamil Worship Songs Lyrics

  • Thuthigal Naduvil துதிகள் நடுவில்

    துதிகள் நடுவில் வாசம் செய்யும்
    தூயாதி தூயர் நீரே
    துதிக்கும் வேளையில் ஜெயம் தந்திடும்
    கர்த்தாதி கர்த்தர் நீரே
    என் தஞ்சம் நீரே உம்மை ஆண்டினேன்
    உமக்கே என் ஆராதனை

    உமக்கே உமக்கே ஆராதனை
    உமக்கே என் ஆராதனை

    பாவியாய் அலைந்த என்னையுமே
    தம் இரத்தத்தால் மீட்டவரே
    பரிசுத்தமாய் வாழ பெலன் தந்தீரே
    தம் பிள்ளையாய் மாற்றினீரே
    பரிசுத்தரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் ஆராதனை

    மகிமை மாட்சிமை நிறைந்தவரே
    மகத்துவமானவரே
    மன்னித்து மறுரூபமாக்குகிறீர்
    மறுகரை சேர்த்திடுவீர்
    மன்னவரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் ஆராதனை

    சாந்தமும் தாழ்மையும் உடையவரே
    அன்புள்ளம் கொண்டவரே
    நுகங்கள் முறித்திட அபிஷேகித்தீர்
    வல்லமை பொழிந்திடுவீர்
    வல்லவரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் ஆராதனை

    ஆசீர்வதித்திட சித்தம் கொண்டீர்
    சாபங்கள் தீர்த்தவரே
    வியாதியின் ரோகங்கள் மாற்றினீரே
    விடுதலை கொடுத்தவரே
    இரட்சகரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் அராதனை


    Thuthigal naduvil Lyrics in English
    thuthikal naduvil vaasam seyyum
    thooyaathi thooyar neerae
    thuthikkum vaelaiyil jeyam thanthidum
    karththaathi karththar neerae
    en thanjam neerae ummai aanntinaen
    umakkae en aaraathanai

    umakkae umakkae aaraathanai
    umakkae en aaraathanai

    paaviyaay alaintha ennaiyumae
    tham iraththaththaal meettavarae
    parisuththamaay vaala pelan thantheerae
    tham pillaiyaay maattineerae
    parisuththarae enthan Yesuvae
    umakkae en aaraathanai

    makimai maatchimai nirainthavarae
    makaththuvamaanavarae
    manniththu maruroopamaakkukireer
    marukarai serththiduveer
    mannavarae enthan Yesuvae
    umakkae en aaraathanai

    saanthamum thaalmaiyum utaiyavarae
    anpullam konndavarae
    nukangal muriththida apishaekiththeer
    vallamai polinthiduveer
    vallavarae enthan Yesuvae
    umakkae en aaraathanai

    aaseervathiththida siththam konnteer
    saapangal theerththavarae
    viyaathiyin rokangal maattineerae
    viduthalai koduththavarae
    iratchakarae enthan Yesuvae
    umakkae en araathanai

  • Thuthibaliyai Selutha துதிபலியை செலுத்த

    துதிபலியை செலுத்த
    வந்தோம் இயேசய்யா
    உம்மை ஆராதிக்க
    கூடி வந்தோம் இயேசய்யா (2)

    நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (2)
    இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2)

    1. என்னிலே ஒன்றுமில்லை
      ஆனாலும் நேசித்தீரே (2)
      என்னிலே நன்மையில்லை
      ஆனாலும் உயர்த்தினீரே (2)
      தகப்பனைப் போல
      என்னை சுமந்தீரைய்யா
      ஒரு தாயைப் போல
      என்னைத் தேற்றினீரே (2)
      சுமந்தீரைய்யா தேற்றினிரே
      சுமந்தீரைய்யா என்னை தேற்றினிரே

    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா

    1. பிறந்த நாள் முதலாய்
      தூக்கி எரியப்பட்டேன் (2)
      ஒரு கண்ணும் என்மேலே
      இரக்கமாய் இருந்ததில்லை (2)
      பிழைத்திரு என்று
      என்னை தூக்கினீரே
      உம் மகனாகவே
      என்னை ஏற்றுக்கொண்டீர் (2)
      பிழைக்கச் செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
      பிழைக்கச் செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்

    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா


    Thuthibaliyai selutha
    Vandhoam Yaesaiyyaa
    Ummai aaraadhikka
    Koodi Vandhoam Yaesaiyyaa (2)
    Neer uyarndhavar neer vallavar (2)
    Indha ulagai aalum dheivam neerae (2)

    1. Ennilae onrumillai
      Aanaalum naesitheerae (2)
      Ennilae nanmaiyillai
      Aanaalum uyarthineerae (2)
      Thagappanai poala
      Ennai sumandheeraiyyaa
      Oru thaayai poala
      Ennai thaetrineerae (2)
      Sumandheeraiyyaa thaetrineerae
      Sumandheeraiyyaa ennai thaetrineerae

    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa

    1. Pirandha naal mudhalaai
      Thooki eriyappattaen (2)
      Oru kannum enmaelae
      Irakamaai irundhadhillai (2)
      Pizhaithiru endru
      Ennai thookkineerae
      Um maganaagavae
      Ennai aetrukondeer (2)
      Pizhaika seidheer aetrukondeer
      Pizhaika seidheer ennai aetrukondeer

    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa

  • Thuthi Umake Yesu Naatha துதி உமக்கே இயேசு நாதா

    துதி உமக்கே இயேசு நாதா
    வாழ்த்திடுவோம் உம்மையே

    நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
    எண்ணியே துதித்திடுவோம்

    1.ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
    அடைக்க்கலாமாநீர் எமக்கு நீரே
    மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி

    2.கடந்த நாளெல்லாம் வழுவாமல்
    காருண்யத்தாலே காத்தீரே
    வல்ல தேவனே உம் வாக்குகளையே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி

    3.தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்
    தந்தை போல் எமை சுமந்தீரே
    ஜீவனைத் தந்த உம் அன்பினையே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி

    4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
    ஜீவனை வைத்தே துதித்திடவே
    நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி


    Thuthi Umake Yesu Naatha Lyrics in English
    thuthi umakkae Yesu naathaa
    vaalththiduvom ummaiyae

    niththamum kaakkum um kirupaikalaiyae
    ennnniyae thuthiththiduvom

    1.aathi anthamillaa anaathi thaevanae
    ataikkkalaamaaneer emakku neerae
    maaraa visvaasaththai emakkuth thantheerae
    ennnniyae thuthiththiduvom – thuthi

    2.kadantha naalellaam valuvaamal
    kaarunnyaththaalae kaaththeerae
    valla thaevanae um vaakkukalaiyae
    ennnniyae thuthiththiduvom – thuthi

    3.thaayinum maelaay anpukoorntheer
    thanthai pol emai sumantheerae
    jeevanaith thantha um anpinaiyae
    ennnniyae thuthiththiduvom – thuthi

    4.jeyam pettaோraay sevai seythu
    jeevanai vaiththae thuthiththidavae
    niththiya jeevanai emakkuth thantheerae
    ennnniyae thuthiththiduvom – thuthi

  • Thuthi Thuthi Iyaesuvai துதி துதி இயேசுவை

    துதி துதி இயேசுவை
    துதி துதி இயேசுவை என் நேசரை (துதி)

    1. காலை கல்லில் இடறாதபடி
      காத்து நடத்துவார்
      எந்தன் தெய்வம் என் இயேசுவை
      என்றென்றும் பாடுவோம் (துதி)
    2. துன்ப இன்ப வேளையில்
      தாங்கி நடத்துவார்
      மாறா தெய்வம் என் இயேசுவை
      என்றென்றும் பாடுவோம் (துதி)

    Thuthi Thuthi Iyaesuvai Lyrics in English
    thuthi thuthi Yesuvai
    thuthi thuthi Yesuvai en naesarai (thuthi)

    1. kaalai kallil idaraathapati
      kaaththu nadaththuvaar
      enthan theyvam en Yesuvai
      ententum paaduvom (thuthi)
    2. thunpa inpa vaelaiyil
      thaangi nadaththuvaar
      maaraa theyvam en Yesuvai
      ententum paaduvom (thuthi)
  • Thuthi Thuthi En Maname துதி துதி என் மனமே

    துதி துதி என் மனமே
    துதிகளில் உன்னதரை
    அவர் நாள்தோறும் செய்யும்
    நன்மைகளை நினைத்து
    பாடித் துதி என் மனமே

    அன்னையைப் போல அவர்
    என்னை அரவணைத்தாற்றிடுவார்
    அவர் அன்புள்ள மார்பதனில்
    இன்பமாக இளைப்பாறுவேன் – நான்

    கஷ்டங்கள் வந்திடவே
    நல்ல கர்த்தராம் துணை அவரே
    துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
    நல்ல பந்தி ஆயத்தம் செய்வார்

    பாரங்கள் அமிழ்த்தினாலும்
    தீரா வியாதியால் கலங்கினாலும்
    அவர் காயத்தின் தழும்புகளால்
    வியாதி தனை விலக்கிடுவார்

    சிங்கமோ விரியன் பாம்போ
    பால சிங்கமோ வலு சர்ப்பமோ
    அதன் தலையதை நசுக்கிடவே
    பெலனதை தருபவரே


    Thuthi thuthi en maname Lyrics in English
    thuthi thuthi en manamae
    thuthikalil unnatharai
    avar naalthorum seyyum
    nanmaikalai ninaiththu
    paatith thuthi en manamae

    annaiyaip pola avar
    ennai aravannaiththaattiduvaar
    avar anpulla maarpathanil
    inpamaaka ilaippaaruvaen – naan

    kashdangal vanthidavae
    nalla karththaraam thunnai avarae
    thushda ethirikal naduvilavar
    nalla panthi aayaththam seyvaar

    paarangal amilththinaalum
    theeraa viyaathiyaal kalanginaalum
    avar kaayaththin thalumpukalaal
    viyaathi thanai vilakkiduvaar

    singamo viriyan paampo
    paala singamo valu sarppamo
    athan thalaiyathai nasukkidavae
    pelanathai tharupavarae

  • Thuthi Thangiya Paramandala Suvisedaga Naamam துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

    துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
    சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

    சரணங்கள்

    1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
      கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி
    2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
      நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி
    3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
      ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி
    4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
      எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி
    5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
      கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி
    6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
      பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி

    Thuthi Thangiya Paramandala Suvisedaga Naamam Lyrics in English

    thuthi thangiya paramanndala suvisedaka naamam,
    supa mangala miku sampirama suka sopana shaemam!

    saranangal

    1. athi sunthara nirai konnduyar arul mokkisha theepan,
      kathi umparkal tholum ingitha karunnaip pirathaapan — thuthi
    2. manthai aayar panninthu paatham makilnthu vaalththiya aththanaar,
      ninthaiyaay oru kanthai moodavum vantha maapari suththanaar — thuthi
    3. thiruvaan ula karasaay valar thaeva soroopanaar,
      oru maathutai vinai maarida narar roopamathaanaar — thuthi
    4. aapiraam muni yidamaeviya pathilaal upakaaran,
      epiraeyarkal kulam thaaveethen arasar korkumaaran — thuthi
    5. saathaa rana vaethaa kama saasthra suviseshan,
      kothae puri aathaa mutai kothra thiru vaeshan — thuthi
    6. vinnnnaadarum mannnnaadarum maevun thirup paathan,
      pannnnothuvar kannnnaam valar para manndala naathan — thuthi
  • Thuthi Seiya Thodanginal துதி செய்ய தொடங்கினால்

    1. துதி செய்ய தொடங்கினால்
      கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
      துதிசெய்ய தொடங்கினால்
      கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
      அஸ்திபாரம் அசைந்திடும்
      சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
      அஸ்திபாரம் அசைந்திடும்
      சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
    2. முழங்கியே கெர்ச்சிக்கிறார்
      கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
      முழங்கியே கெர்ச்சிக்கிறார்
      கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
      சத்துருவின் சேனைகளை
      அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
      சத்துருவின் சேனைகளை
      அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
    3. தடைகளை நீக்கிடவே
      நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
      தடைகளை நீக்கிடவே
      நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
      வெள்ளம் போன்ற சத்துருவின்
      முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
      வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்
      முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
    4. ஜெபம் செய்ய தொடங்கினால்
      கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
      ஜெபம் செய்ய தொடங்கினால்
      கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
      ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே
      ஆசீர்வாதம் இறங்கிடும்
      ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
      ஆசீர்வாதம் இறங்கிடும்

    ஜெபம் செய்ய தொடங்கினால்
    கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
    ஜெபம் செய்ய தொடங்கினால்
    கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
    ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
    ஆசீர்வாதம் இறங்கிடும்
    ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
    ஆசீர்வாதம் இறங்கிடும்


    Thuthi Seiya Thodanginal Lyrics in English
    Thuthi Seiya Thodanginal

    1. thuthi seyya thodanginaal
      karththar yuththam seyya thodanguvaar
      thuthiseyya thodanginaal
      karththar yuththam seyya thodanguvaar
      asthipaaram asainthidum
      saaththaan asthipaaram asainthidum
      asthipaaram asainthidum
      saaththaan asthipaaram asainthidum
    2. mulangiyae kerchchikkiraar
      karththar paraakkiramasaaliyaip pol
      mulangiyae kerchchikkiraar
      karththar paraakkiramasaaliyaip pol
      saththuruvin senaikalai
      avar muttilumaay maerkolluvaar
      saththuruvin senaikalai
      avar muttilumaay maerkolluvaar
    3. thataikalai neekkidavae
      nam Yesu raajaa munsellukiraar
      thataikalai neekkidavae
      nam Yesu raajaa munsellukiraar
      vellam ponta saththuruvin
      munnae jeyakkoti aettiduvaar
      vellam pontallam ponta saththuruvin
      munnae jeyakkoti aettiduvaar
    4. jepam seyya thodanginaal
      karththar kiriyai seyya thodanguvaar
      jepam seyya thodanginaal
      karththar kiriyai seyya thodanguvaar
      aaseervaatham irangidum – inte
      aaseervaatham irangidum
      aaseervaatham irangiduma – inte
      aaseervaatham irangidum

    jepam seyya thodanginaal
    karththar kiriyai seyya thodanguvaar
    jepam seyya thodanginaal
    karththar kiriyai seyya thodanguvaar
    aaseervaatham irangiduma – inte
    aaseervaatham irangidum
    aaseervaatham irangiduma – inte
    aaseervaatham irangidum

  • Thuthi Sei Nee Maname துதி செய் நீ மனமே

    துதி செய் நீ மனமே துதிகளைப் படியே
    துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை

    பரலோக மகிமை துறந்தவரே
    பாவ இவ்வுலகில் வந்தவரே
    பரிசுத்தராகவே வாழ்ந்தவரே
    பாவியை மீட்கவே வந்தவரே

    கருணையின் உள்ளம் படைத்தவரே
    குற்றங்கள் யாவையும் சுமந்தவரே
    குருசினில் எனக்காய் மரித்தவரே
    குருதியை சிந்தியே மீட்டவரே

    இயேசுவையன்றி வேறொருவர்
    காசினில் உண்டோ சொல் மனமே
    நேசரின் அன்பை என்றும் உணர்ந்து
    தாசரும் அவர் பாதத்தில் விழுந்து

    மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்
    மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்
    ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்
    ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால்

    நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்
    நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்
    நாசம் என்றும் நம்மை அணுகாமலே
    ஆதரித்து என்றும் காத்திடுவார்

    நேசரின் வருகை நெருங்கிடுதே
    நாச லோகை விட்டு சென்றிடுவேன்
    எக்காள சத்தம் தொனித்திடுமே
    மத்திய ஆகாயத்தை சேருவோம்


    Thuthi sei nee maname Lyrics in English
    thuthi sey nee manamae thuthikalaip patiyae
    thuthi pera paaththiraraam thooyavar Yesuvai

    paraloka makimai thuranthavarae
    paava ivvulakil vanthavarae
    parisuththaraakavae vaalnthavarae
    paaviyai meetkavae vanthavarae

    karunnaiyin ullam pataiththavarae
    kuttangal yaavaiyum sumanthavarae
    kurusinil enakkaay mariththavarae
    kuruthiyai sinthiyae meettavarae

    Yesuvaiyanti vaeroruvar
    kaasinil unntoo sol manamae
    naesarin anpai entum unarnthu
    thaasarum avar paathaththil vilunthu

    maanidar ellaarum vittaோtitinum
    maasatta thaevan nammotiruppaar
    aarppariththae entumae makilvaen
    aanndaanndu kaalam nammai kaappathaal

    naesarin maarpinil saarnthiduvaen
    naesaththaal nammai nirappiduvaar
    naasam entum nammai anukaamalae
    aathariththu entum kaaththiduvaar

    naesarin varukai nerungiduthae
    naasa lokai vittu sentiduvaen
    ekkaala saththam thoniththidumae
    maththiya aakaayaththai seruvom

  • Thuthi Paliyai Seluththa துதிபலியை செலுத்த

    துதிபலியை செலுத்த
    வந்தோம் இயேசையா
    உம்மை ஆராதிக்க
    கூடி வந்தோம் இயேசையா

    நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
    இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே

    என்னிலே ஒன்றுமில்லை
    ஆனாலும் நேசித்தீரே
    என்னிலே நன்மையில்லை
    ஆனாலும் உயர்த்தினீரே
    தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
    ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
    சுமந்தீரையா தேற்றினீரே
    ஆராதனை உமக்கே ஐயா எங்கள்
    ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐயா

    பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
    ஒரு கண்ணும் என்மேலே
    இரக்கமாய் இருந்ததில்லை
    பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
    உம் மகனாகவே
    என்னை ஏற்றுக்கொண்டீர்
    பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
    ஆராதனை உமக்கே ஐயா

    உமது இரக்கத்திற்கு
    முடிவே இல்லையாப்பா
    உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
    உமது காருண்யம் என்னை பெரியவனாய்
    உயரத்திலே நிறுத்தியதே


    Thuthi paliyai seluththa Lyrics in English
    thuthipaliyai seluththa
    vanthom iyaesaiyaa
    ummai aaraathikka
    kooti vanthom iyaesaiyaa

    neer uyarnthavar neer vallavar
    intha ulakai aalum theyvam neerae

    ennilae ontumillai
    aanaalum naesiththeerae
    ennilae nanmaiyillai
    aanaalum uyarththineerae
    thakappanai pola ennaich sumantheeraiyaa
    oru thaayai pola ennai thaettineerae
    sumantheeraiyaa thaettineerae
    aaraathanai umakkae aiyaa engal
    aaraathanai aaraathanai
    engal aaraathanai aaraathanai aaraathanai
    aaraathanai umakkae aiyaa

    pirantha naal muthalaay thookki eriyappattaen
    oru kannnum enmaelae
    irakkamaay irunthathillai
    pilaiththiru entu ennai thookkineerae
    um makanaakavae
    ennai aettukkonnteer
    pilaikka seytheer aettukkonnteer
    aaraathanai umakkae aiyaa

    umathu irakkaththirku
    mutivae illaiyaappaa
    umathu anpirku alavae illaiyappaa
    umathu kaarunnyam ennai periyavanaay
    uyaraththilae niruththiyathae

  • Thuthi Paaduvaai Nenjame துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை

    துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை
    அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
    முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்
    மகிமை படுத்தினார், இன்னும் மகிமை படுத்துவார்

    பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
    வானங்களை திரைப்போலாய் விரித்தவரும் அவரே
    நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே
    உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

    வானம் திறந்து மன்னாவால் போஷித்தவரும் அவரே
    செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
    மோசேயின், கைகோலால் அற்புதங்கள் செய்தவரே
    உலகம் முடியும் வரை துணையாய், நம்முடன் இருப்பவரே

    இழந்து போன என்னை தேடி இரட்சிக்க வந்தவரே
    பாவ குழியில் என்னை மீட்டு புது வாழ்வு தந்தவரே
    ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையால் காப்பவரே
    உலகம் முடிவில் என்னை அழைத்து பரலோகில் சேர்ப்பவரே


    Thuthi Paaduvaai Nenjame Lyrics in English

    thuthi paaduvaay nenjamae Yesuvai
    avar thuthi solli varavae thaevan thanthitta vaalvu ithuvae
    mun arinthaar mun kuriththaar nammai alaiththaar
    makimai paduththinaar, innum makimai paduththuvaar

    poomiyin mannnnai marakkaalaal alanthavarum avarae
    vaanangalai thiraippolaay viriththavarum avarae
    natchaththirangalai peyar solli alaiththavarum avarae
    unnaiyum ennaiyum ullangaiyil varainthavarum avarae

    vaanam thiranthu mannaavaal poshiththavarum avarae
    sengadalthanai iranndaaka pilanthavarum avarae
    moseyin, kaikolaal arputhangal seythavarae
    ulakam mutiyum varai thunnaiyaay, nammudan iruppavarae

    ilanthu pona ennai thaeti iratchikka vanthavarae
    paava kuliyil ennai meettu puthu vaalvu thanthavarae
    jeevanulla naalellaam kirupaiyaal kaappavarae
    ulakam mutivil ennai alaiththu paralokil serppavarae