Category: Tamil Worship Songs Lyrics

  • Neeyae Nirantharam நீயே நிரந்தரம்

    நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்
    ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…

    அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
    மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
    இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
    நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
    நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
    நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் ஆ…ஆ… — அம்மையப்பன்

    1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
      தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
      தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
      நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் — அம்மையப்பன்
    2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
      பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
      நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
      அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் — அம்மையப்பன்

    Neeyae Nirantharam Lyrics in English

    neeyae nirantharam, Yesuvae en vaalvil neeyae nirantharam
    aa…aa…aa…aa…aa…aa…

    ammaiyappan unthan anpae nirantharam
    maarum ulakil maaraa un uravae nirantharam
    immai vaalvil marumai iruppathu nirantharam – (2)
    naan maannda pinpum unnil uyirppathu nirantharam
    nirantharam, nirantharam, neeyae nirantharam, neeyae nirantharam
    nirantharam, nirantharam, neeyae nirantharam aa…aa… — ammaiyappan

    1. thaayin anpu seykku ingae nirantharam
      thaayum thanthaiyum emakku neeyae nirantharam
      thaeyum vaalvil nampikkai neeyae nirantharam
      naan saayum pothu kaappathu neeyae nirantharam – (2)
      nirantharam, nirantharam, neeyae nirantharam, neeyae nirantharam
      nirantharam, nirantharam, neeyae nirantharam — ammaiyappan
    2. selvangal konarum inpaththil illai nirantharam
      pathaviyum pukalum tharuvathu illai nirantharam
      nilai vaalvu ennum nijamaana neeyae nirantharam
      athan vilaiyaaka enai nee unnil innaippaay nirantharam – (2)
      nirantharam, nirantharam, neeyae nirantharam, neeyae nirantharam
      nirantharam, nirantharam, neeyae nirantharam — ammaiyappan
  • Neeyae Enathu Oli நீயே எனது ஒளி

    நீயே எனது ஒளி நீயே எனது வழி

    நீயே எனது வாழ்வு இயேசையா – 2

    நான்கு திசையும் பாதைகள்
    சந்திக்கின்ற வேளைகள்
    நன்மை என்ன தீமை என்ன
    அறியாத கோலங்கள் – 2
    நீயே எங்கள் வழியாவாய்
    நீதியின் பாதையின் பொருளாவாய் – 2
    உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
    அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே

    துன்ப துயர நிகழ்வுகள்
    இருளின் ஆட்சிக் காலங்கள்
    தட்டுத் தடுமாறி விழத்
    தகுமான சூழல்கள் – 2
    நீயே எங்கள் ஒளியாவாய்
    நீதியின் பாதையின் சுடராவாய் – 2
    உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
    உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே


    Neeyae Enathu Oli Lyrics in English

    neeyae enathu oli neeyae enathu vali

    neeyae enathu vaalvu iyaesaiyaa – 2

    naanku thisaiyum paathaikal
    santhikkinta vaelaikal
    nanmai enna theemai enna
    ariyaatha kolangal – 2
    neeyae engal valiyaavaay
    neethiyin paathaiyin porulaavaay – 2
    umathu paathappathivukal emathu vaalvin thelivukal
    avattil naan nadanthaal vettiyin kanikal – neeyae

    thunpa thuyara nikalvukal
    irulin aatchik kaalangal
    thattuth thadumaari vilath
    thakumaana soolalkal – 2
    neeyae engal oliyaavaay
    neethiyin paathaiyin sudaraavaay – 2
    ummai naangal pottida poymai engum pokkida
    unnmaiyin iraivaa unatharul thaarum – neeyae

  • Neethiyil Nilaaithirunthu Um நீதியில் நிலைத்திருந்து உம்

    நீதியில் நிலைத்திருந்து – உம்
    திருமுகம் நான் காண்பேன்
    உயிர்தெழும் போது -உம்
    சாயலால் திருப்தியாவேன் -நீதியில்

    1. தேவனே, நீர் என் தேவன்
      அதிகாலமே தேடி வந்தேன்
      நீரின்றி வறண்ட நிலம்போல்
      ஏங்குகிறேன் தினம் உமக்காய்
      அல்லேலூயா ஓசான்னா
    2. ஜீவனை விட உம் அன்பு
      அது எத்தனை நல்லது
      புகழ்ந்திடுமே, என் உதடு
      மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
    3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
      உம் நாமம் சொல்லி துதிப்பேன்
      அறுசுவை உண்பது போல
      திருப்தியாகும் என் ஆன்மா
    4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
      இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
      துணையாளரே, உம் நிழலை
      தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

    Neethiyil Nilaaithirunthu Um Lyrics in English

    neethiyil nilaiththirunthu – um
    thirumukam naan kaannpaen
    uyirthelum pothu -um
    saayalaal thirupthiyaavaen -neethiyil

    1. thaevanae, neer en thaevan
      athikaalamae thaeti vanthaen
      neerinti varannda nilampol
      aengukiraen thinam umakkaay
      allaelooyaa osaannaa
    2. jeevanai vida um anpu
      athu eththanai nallathu
      pukalnthidumae, en uthadu
      makilnthidumae, en ullam
    3. uyir vaalum naatkalellaam
      um naamam solli thuthippaen
      arusuvai unnpathu pola
      thirupthiyaakum en aanmaa
    4. padukkaiyilae ummai ninaippaen
      iraachchaாmaththil thiyaanam seyvaen
      thunnaiyaalarae, um nilalai
      thodarnthu, nadanthu valarvaen.
  • Neethiyamo Neer Sollum நீதியாமோ நீர் சொல்லும் ஓய்

    நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
    நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்

    ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
    ஆதரித்திடுவதே யோக்கியம் ஓ கோ
    பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
    பாதை நடக்கில் சிலாக்யம்

    தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான்
    தற்பரனுக் கவன் கடனே என்று
    கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
    கடுநெஞ் சகல் மானிடனே

    அம்புடன் விதவையும் போட்ட காசை
    அதி வியப்பாய் காட்டப் புகழ்
    இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
    எவர்களும் அகத்தினில் நாட்ட

    பிறர் புகழும்படி இன்றே செய்தால்
    பிரயோசனமிலை என்றே பரன்
    மறையதில் விளம்பினார் நன்றே-அம்
    மாதிரி விலகாது நின்றே

    பிரிதானம் வாங்குதல் தீது அதைப்
    பறித்தறம் செய்தல் தகாது உமக்
    குரியதில் ஈவது போதம் இதில்
    ஓன்றி இருப்பதே நீதம்

    ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
    ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி இதோ
    வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
    வாழலாம் அதுவே மா பூர்த்தி


    Neethiyamo Neer Sollum Lyrics in English

    neethiyaamo neer sollum oy
    neriyulorae aram seyyaathirunthitil

    aathulark geevathae paakkiyam pirarai
    aathariththiduvathae yokkiyam o ko
    paathakam seyyil nirppaakkiyam motcha
    paathai nadakkil silaakyam

    thariththirark kiranguvon udanae iduvaan
    tharparanuk kavan kadanae entu
    karuththudan karuthiyil thidanae uraiththaar
    kadunenj sakal maanidanae

    ampudan vithavaiyum potta kaasai
    athi viyappaay kaattap pukal
    inpudan aval misai sootta athai
    evarkalum akaththinil naatta

    pirar pukalumpati inte seythaal
    pirayosanamilai ente paran
    maraiyathil vilampinaar nante-am
    maathiri vilakaathu ninte

    pirithaanam vaanguthal theethu athaip
    pariththaram seythal thakaathu umak
    kuriyathil eevathu potham ithil
    onti iruppathae neetham

    aelaikat geeyaathu aasthi aiyae
    eenndu serththitil enna geerththi itho
    vaalula katainthitil naerththi entum
    vaalalaam athuvae maa poorththi

  • Neethiman Selithu Vaalvan நீதிமான் செழித்து வாழ்வான்

    நீதிமான் செழித்து வாழ்வான்
    நீதிமான் பனையைப் போல
    செழித்து வாழ்வான்
    லீபனோனின் கேதுருவாய்
    வளருவான் (2)

    1. தீமையை வெறுத்திடுங்கள்
      நன்மையே செய்திடுங்கள்
      கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
      செழிப்படைய செய்வார் – நீதி
    2. கலங்கிடாதிருங்கள்
      கண்ணீர் விடாதிருங்கள்
      கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
      செழிப்படைய செய்வார் – நீதி
    3. சிறுமைப்பட்ட நாட்கள்
      துன்பத்தின் வருடங்கள்
      சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
      செழிப்படையச் செய்வார் – நீதி
    4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
      அநேக நாள் பிறகு அதின் பலனை
      களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
      செழிப்படையச் செய்வார் – நீதி

    Neethiman Selithu Vaalvan Lyrics in English

    neethimaan seliththu vaalvaan
    neethimaan panaiyaip pola
    seliththu vaalvaan
    leepanonin kaethuruvaay
    valaruvaan (2)

    1. theemaiyai veruththidungal
      nanmaiyae seythidungal
      karththar nammotiruppaar – nammai
      selippataiya seyvaar – neethi
    2. kalangidaathirungal
      kannnneer vidaathirungal
      karththarin saatchikalaay – nammai
      selippataiya seyvaar – neethi
    3. sirumaippatta naatkal
      thunpaththin varudangal
      sariyaay makilchchiyaakkuvaar – nammai
      selippataiyach seyvaar – neethi
    4. aakaaraththai thannnneeril podu
      anaeka naal piraku athin palanai
      kalikoornthu kaanach seyvaar – nammai
      selippataiyach seyvaar – neethi
  • Neethimaan Naan Neethimaan Naan நீதிமான் நான் நீதிமான் நான்

    நீதிமான் நான் நீதிமான் நான்
    இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின்

    1. பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்
      கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
      கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
      முதிர்வயதிலும் நான் கனிதருவேன் – நீதிமான்
    2. காலையிலே உம் கிருபையையும்
      இரவினிலே உம் சத்தியத்தையும்
      பத்துநரம்புகள் இசையோடு
      பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
    3. ஆண்டவனே என் கற்பாறை
      ஆவரிடம் அநீதியே இல்லை
      என்றே முழக்கம் செய்திடுவேன்
      செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்
    4. ராஜாவின் ஆட்சி வருகையிலே
      கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் – இயேசு
      ஆகாயமண்டல விண்மீனாய்
      முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்
    5. எதிரியின் வலிமையை மேற்கொள்ள
      அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
      புதுஎண்ணை அபிஷேகம் என் தலைமேல்
      பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்
    6. கர்த்தரின் கண்கள் என்மேலே
      என் வேண்டுதல் கேட்கின்றார்
      மன்றாடும்போது செவிசாய்த்து
      மாபெரும் விடுதலை தருகின்றார்

    Neethimaan Naan Neethimaan Naan Lyrics in English

    neethimaan naan neethimaan naan
    iraththaththaalae kaluvappatta neethimaan – Yesuvin

    1. panaimarampol naan seliththonguvaen
      kaethuru marampol valarnthiduvaen
      karththarin illaththil naattappattu
      muthirvayathilum naan kanitharuvaen – neethimaan
    2. kaalaiyilae um kirupaiyaiyum
      iravinilae um saththiyaththaiyum
      paththunarampukal isaiyodu
      paatippaati makilnthiruppaen
    3. aanndavanae en karpaarai
      aavaridam aneethiyae illai
      ente mulakkam seythiduvaen
      selumaiyum pasumaiyumaay valarvaen
    4. raajaavin aatchi varukaiyilae
      kathiravanaip pol pirakaasippaen – Yesu
      aakaayamanndala vinnmeenaay
      mutivillaa kaalamum oliveesuvaen
    5. ethiriyin valimaiyai maerkolla
      athikaaram enakkuth thanthullaar
      puthuennnnai apishaekam en thalaimael
      polinthu polinthu makilkinteer
    6. karththarin kannkal enmaelae
      en vaennduthal kaetkintar
      mantadumpothu sevisaayththu
      maaperum viduthalai tharukintar
  • Neerthaan En Thanjamae நீர்தான் என் தஞ்சமே

    1. நீர்தான் என் தஞ்சமே
      நீர்தான் என் கோட்டையே
      துன்ப வேளை தூக்கி என்னை
      தோளில் சுமந்தவரே

    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    இயேசையா உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை

    1. நீர்தான் என் பெலனே
      நீர்தான் என் சுகமே
      கண்ணீர் துடைத்து
      கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே
    2. நீரே என் ஆதாரமே
      நீரே என் துணையாளரே
      சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
      கிருபை ஈந்தவரே
    3. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
      என் நேசரே உம்மை பாடிடுவேன்
      நீர் செய்த எல்லா நன்மைகட்காக
      உமக்கே ஆராதனை

    Neerthaan En Thanjamae Lyrics in English

    1. neerthaan en thanjamae
      neerthaan en kottaைyae
      thunpa vaelai thookki ennai
      tholil sumanthavarae

    umakkae aaraathanai
    umakkae aaraathanai
    iyaesaiyaa umakkae aaraathanai
    umakkae aaraathanai

    1. neerthaan en pelanae
      neerthaan en sukamae
      kannnneer thutaiththu
      kavalai pokki aaruthal alippavarae
    2. neerae en aathaaramae
      neerae en thunnaiyaalarae
      sornthidum naeram saarnthida unthan
      kirupai eenthavarae
    3. Yesuvae ummai uyarththiduvaen
      en naesarae ummai paadiduvaen
      neer seytha ellaa nanmaikatkaaka
      umakkae aaraathanai
  • Neeroetaiyai Maan Vaagnsiththu நீரோடையை மான் வாஞ்சித்து

    இயேசுவே என் வாஞ்சை

    1. நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய்,
      என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய்
    2. தயாள கர்த்தா உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ?
      உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ?
    3. என் உள்ளமே விசாரம் ஏன்? நம்பிக்கைகொண்டு நீ
      சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி
    4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும்,
      ஆதிமுதல் என்றென்றுமே துதி உண்டாகவும்

    Neeroetaiyai Maan Vaagnsiththu Lyrics in English

    Yesuvae en vaanjai

    1. neerotaiyai maan vaanjiththu katharum vannnamaay,
      en aanndavaa , en aaththumam thavikkum umakkaay
    2. thayaala karththaa umakkaay en ullam aengaatho?
      um maatchiyulla mukaththai eppothu kaannpaeno?
    3. en ullamae visaaram aen? nampikkaikonndu nee
      sathaa un jeeva ootteyaam karththaavai sthoththari
    4. naam vaalththum karththanaar pithaa kumaaran, aavikkum,
      aathimuthal ententumae thuthi unndaakavum
  • Neerey Ennai Kaankintra Devan நீரே என்னை காண்கிற தேவன்

    நீரே என்னை காண்கிற தேவன்
    கருத்துடன் என்னை நடத்துவீரே
    உமது மாறா கிருபையாலே – 2
    அடியேனை தாங்கி நடத்துவீரே

    1.தாயின் கருவில் முதற் கொண்டு
    தெரிந்தென தன்பின் தேவன் நீரே – 2
    முதற் பலனாய் எம்மை நிறுத்திடவே
    நித்திய அன்பால் அழைத்து விட்டீர்

    2.உமது பலத்த கரத்தினிலே
    நாளும் இருக்க கிருபை தாரும்
    பரிசுத்த வழியில் நடந்திடவே
    கர்த்தாவே நீர் என் வெளிச்சமே

    3.ஆதியும் அந்தமும் ஆன தேவா
    ஆர்ப்பரிப்புடன் நீர் இறங்கிவாரும்
    மணவாளன் உம்முடன் இணைந்திடவே
    மகிமையில் என்னையும் சேர்த்து கொள்ளும்!


    Neerey Ennai Kaankintra Devan Lyrics in English

    neerae ennai kaannkira thaevan
    karuththudan ennai nadaththuveerae
    umathu maaraa kirupaiyaalae – 2
    atiyaenai thaangi nadaththuveerae

    1.thaayin karuvil muthar konndu
    therinthena thanpin thaevan neerae – 2
    muthar palanaay emmai niruththidavae
    niththiya anpaal alaiththu vittir

    2.umathu palaththa karaththinilae
    naalum irukka kirupai thaarum
    parisuththa valiyil nadanthidavae
    karththaavae neer en velichchamae

    3.aathiyum anthamum aana thaevaa
    aarpparippudan neer irangivaarum
    manavaalan ummudan innainthidavae
    makimaiyil ennaiyum serththu kollum!

  • Neere Enthan Kanmalai நீரே எந்தன் கன்மலை

    நீரே எந்தன் கன்மலை
    நான் உம்மை நம்புவேன்
    நீரே எந்தன் மறைவிடம்
    என்றும் உம்மில் தங்குவேன்

    துன்பமான நேரமோ
    இன்பமான காலமோ
    தோல்வியின் மத்தியில்
    புகழ்ச்சியின் உச்சத்தில்
    எல்லா சூழ்நிலையிலும்
    மாறாத தேவனே
    உம்மையே நம்புவேன்
    உம்மை விசுவாசிப்பேன்
    அசைக்கபடுவதில்லை

    மனுஷரை நம்பிடேன்
    பிரபுகளையும் நம்பிடேன்
    பணம் பதவி நம்பிடேன்
    என் பெலனையும் நான்
    நம்பிடேன்
    நான் உம்மை மறந்தாலும்
    என்னை மறவா தேவனே
    உம்மையே நம்புவேன்
    உம்மை விசுவாசிப்பேன்
    அசைக்கப்படுவதில்லை

    எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
    வழியும் நீரே வழுவாமல்
    காப்பவரே
    எந்தன் தாயும் தகப்பன் நீரே
    எந்தன் நண்பன் நீரே
    எல்லாமும் நீரே
    நான் உம்மை மறந்தாலும்
    என்னை மறவா தேவனே
    உம்மையே நம்புவேன்
    உம்மையே விசுவாசிப்பேன்
    அசைக்கப்படுவதில்லை


    Neere enthan kanmalai Lyrics in English

    neerae enthan kanmalai
    naan ummai nampuvaen
    neerae enthan maraividam
    entum ummil thanguvaen

    thunpamaana naeramo
    inpamaana kaalamo
    tholviyin maththiyil
    pukalchchiyin uchchaththil
    ellaa soolnilaiyilum
    maaraatha thaevanae
    ummaiyae nampuvaen
    ummai visuvaasippaen
    asaikkapaduvathillai

    manusharai nampitaen
    pirapukalaiyum nampitaen
    panam pathavi nampitaen
    en pelanaiyum naan
    nampitaen
    naan ummai maranthaalum
    ennai maravaa thaevanae
    ummaiyae nampuvaen
    ummai visuvaasippaen
    asaikkappaduvathillai

    enthan vaalvin oliyum neerae
    valiyum neerae valuvaamal
    kaappavarae
    enthan thaayum thakappan neerae
    enthan nannpan neerae
    ellaamum neerae
    naan ummai maranthaalum
    ennai maravaa thaevanae
    ummaiyae nampuvaen
    ummaiyae visuvaasippaen
    asaikkappaduvathillai