Category: Tamil Worship Songs Lyrics

  • Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்

    1. கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்
      கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்
      கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
      கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ
    2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே
      லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ
      உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
      யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ
    3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
      அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்
      ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்
      ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ
    4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்
      நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோ
      என்னே இப்பாரங்கள் ன்னே இக்கிலேசங்கள்
      கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ
    5. எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை
      கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே
      என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர்
      என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே

    Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam Lyrics in English

    1. kiristhava jeeviyam sela paakkiya jeeviyam
      kiristhuvin makkatkor aanantha jeeviyam
      kashdangal vanthaalum nashdangal vanthaalum
      kiristhaesu naayakan koottali allavo
    2. pooloka inpangal maarippoyvidumae
      lokaththaarellaarum kaividuvaarallo
      uttaாr uravinar thalli veruththaalum
      yoseppin theyvamen koottali allavo
    3. nampum sakotharar vampu seythiduvaar
      appam pusiththittaோr kuthing kaalaith thookkiduvaar
      aaraaththuyarilum maaraak kannnneerilum
      aattidum theyvamen koottali allavo
    4. Yesu en nal maeyppar, Yesu en sinaekithar
      nithyamaay raajaa en koottali allavo
      ennae ippaarangal nnae ikkilaesangal
      kiristhaesu iraajaa en koottali allavo
    5. ekkaala naatham naan kaetdidum vaelaiyai
      kashdangal yaavumae neengidum naeramae
      entu neer varuveer eppo neer varuveer
      en kannnneer thutaikka en naesak koottaliyae
  • Kiristhava Illaramae கிறிஸ்தவ இல்லறமே

    கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
    கிருபை செய்வீர், பரனே!

    பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
    பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ

    1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
      திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
      சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
      சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ
    2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
      உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
      நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
      நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ
    3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
      அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
      துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
      தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து — கிறிஸ்தவ
    4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
      மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
      கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
      கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் — கிறிஸ்தவ

    Kiristhava Illaramae Lyrics in English

    kiristhava illaramae – siranthidak
    kirupai seyveer, paranae!

    parisuththa mariyannai, paalan yaesu, yoseppup
    pannpaay nadaththivantha inpakkudumpampola — kiristhava

    1. jepamennum thoopamae thinam vaanam aeravum,
      thiruvaetha vaakkiyam sevikalil kaetkavum,
      supa njaanakgeerththanai thuththiyam paadavum,
      sutha naesu thalaimaiyil thooya veedaakavum — kiristhava
    2. ooliyam puriyavum oothiyam virumpaamal,
      uvantha peththaaniyaa oorin kudumpampola,
      naalum yaesu piraanai nalvirunthaali yaakki,
      naatiyavar paathaththil kootiyamarnthu kaettuk — kiristhava
    3. anpodaaththuma thaakam ariya paropakaaram,
      arumaiyaaka niraintha ayalaark kolivilakkaayth,
      thunpanj seykira palathoththu viyaathikalaith,
      thooranthuraththum vakai sollich sevaiyaich seythu — kiristhava
    4. malaiyathin maelulla maalikaiyaip polavae,
      mattavarkalukku mun maathiriyaay nintu,
      kalaiutai unavilum, kalvi muyarsiyilum,
      karththaruk kaetta parisuththak kudumpamaakak — kiristhava
  • Kilakkile Oru Natchathiram Kilambiyathum கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும்

    கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்
    வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

    1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
      தூது சொன்னது அற்புதம் அற்புதம்
      பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
      மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே
    2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
      மன்னன் வரவு அற்புதம்
      அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
      உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே
    3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
      தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
      சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
      விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே
    4. இயேசுவின் சன்னிதி அடைக்கலம் தேடுவோர்
      வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
      மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
      அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

    Kilakkile Oru Natchathiram Kilambiyathum Lyrics in English

    kilakkilae oru natchaththiram kilampiyathum or arputham
    vaanilae athan thaer valam nadantha alaku arputham!

    1. thootharkal koottam geetha pavaniyaay
      thoothu sonnathu arputham arputham
      paamarar, maeyppar, thaetiyae vanthathum arputham arputhamae
      maethaiyar silaraayp panninthidach sentathum arputham arputhamae
    2. kanniyin vayittil unnathar aaviyaal
      mannan varavu arputham
      akilam muluvathum thaevan pataiththathu arputham arputhamae
      ulakinil thammai velippadach seythathum arputham arputhamae
    3. paava nivaaranam kitaiththidum valithanai
      thaevan amaiththathu arputham arputham
      siluvaiyil thammuyir thaanamaayp pataiththathum arputham arputhamae
      viduthalai perumvali thuvakkiyae vaiththathum arputham arputhamae
    4. Yesuvin sannithi ataikkalam thaeduvor
      vaalvu malarnthidum arputham arputham
      meenndum piranthavar kootiyo vaalnthidum arputham arputhamae
      alakiya maanudam ulakengum vitiyum arputham arputhamae
  • Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல

    கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
    கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்
    கேடகத்தைப் பிடி நீ.

    வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
    வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
    நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
    நிச்சயமான பரிசை அறிந்து நீ. – கிஞ்சிதமும்

    1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
      பத்தியில் தெளிக்கவும், – நித்ய
      ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
      திறமை அளிக்கவும்,
      சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
      ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
      தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
      செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். – கிஞ்சிதமும்
    2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
      கண்டடைந்தார் பேறு? – நல்ல
      தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
      தொகுத்து வெ வ்வேறு
      விண்டுரைக்கில் பெருகும்@ தீ அணைத்ததும்,
      வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
      கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
      காரியங்களையும் பார் இது மா ஜெயம்.– கிஞ்சிதமும
    3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
      உன் செயல் மா பேதம் – அதின்
      தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
      துணை அவர் பாதம்
      ஏற்றர வணைக்கவே பணிவாக
      இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
      ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
      ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ. – கிஞ்சிதமும்

    Kignsithamum Nenjaee, Agnsitaathae – Nalla Lyrics in English

    kinjithamum nenjae, anjidaathae – nalla
    kaedakaththaip piti nee – visuvaasak
    kaedakaththaip piti nee.

    vanjanaiyaakavae paey ethirththuntanai
    vannik kannaithoduth theykinta vaelaiyil,
    nenjil padaamal thadukka athu nalla
    nichchayamaana parisai arinthu nee. – kinjithamum

    1. paavaththai verukka, aapaththaich sakikka,
      paththiyil thelikkavum, – nithya
      jeevanaip pitikka, lokaththai jeyikka,
      thiramai alikkavum,
      saavae un koor engae? paathaalamae, un
      jeyam engae? entu nee koovik kalikkavum,
      thaevan ukanthunaith thaan angaீkarikka,
      seyyavumae athu thivya nal aayutham. – kinjithamum
    2. panntaiyar anthap parisaiyinaal allo,
      kanndatainthaar paeru? – nalla
      thonndan aapael muthalaana vaitheekaraith
      thokuththu ve vvaeru
      vinnduraikkil perukum@ thee annaiththathum,
      veeriya singaththin vaayai ataiththathum,
      kanntithamaay vetti konndathu maampala
      kaariyangalaiyum paar ithu maa jeyam.- kinjithamuma
    3. oottamudan ipparisaip pitiththida
      un seyal maa paetham – athin
      thottamum mutivum aesuparan seyal,
      thunnai avar paatham
      aettara vannaikkavae pannivaaka
      iranthu mantati avar moolamaakavae,
      aattal sey thaettaravaali parisuththa
      aavi uthaviyai maevi, atainthu, nee. – kinjithamum
  • Kereeth Aatruneer Vattrinaalum கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்

    1. கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
      தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
      பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
      காக்கும் தேவன் உனக்கு உண்டு

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. இல்லை என்ற நிலை வந்தாலும்
      இருப்பதைப்போல் அழைக்கும் தேவன்
      உயிர்ப்பிக்கும் ஆவியினால்
      உருவாக்கி நடத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. முடியாததென்று நினைக்கும் நேரம்
      கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
      அளவற்ற நன்மையினால்
      ஆண்டு நடத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. இருளான பாதை நடந்திட்டாலும்
      வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
      மகிமையின் பிரசன்னத்தால்
      மூடி நடத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. வழியில்லையென்று கலங்கும் நேரம்
      புதுவழி ஒன்று திறந்திடுவார்
      தாங்கிடும் கரத்தினால்
      தூக்கி சுமந்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    1. வேதனையால் நீ வாடும் நேரம்
      இருக்கிறேன் என்றவர் வந்திடுவார்
      அளவற்ற அன்பினால்
      கண்ணீர் துடைத்திடுவார்

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு

    கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்
    தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
    பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
    காக்கும் தேவன் உனக்கு உண்டு

    கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
    தூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு


    Kereeth Aatruneer Vattrinaalum Lyrics in English

    1. kaereeth aattuneer vattinaalum
      thaesam panjaththil vaatinaalum
      paanaiyil maa ennnney kurainthittalum
      kaakkum thaevan unakku unndu

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. illai enta nilai vanthaalum
      iruppathaippol alaikkum thaevan
      uyirppikkum aaviyinaal
      uruvaakki nadaththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. mutiyaathathentu ninaikkum naeram
      karththarin karam unnil thontidumae
      alavatta nanmaiyinaal
      aanndu nadaththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. irulaana paathai nadanthittalum
      velichchamaay thaevan vanthiduvaar
      makimaiyin pirasannaththaal
      mooti nadaththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. valiyillaiyentu kalangum naeram
      puthuvali ontu thiranthiduvaar
      thaangidum karaththinaal
      thookki sumanthiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    1. vaethanaiyaal nee vaadum naeram
      irukkiraen entavar vanthiduvaar
      alavatta anpinaal
      kannnneer thutaiththiduvaar

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

    kaereeth aattuneer vattinaalum
    thaesam panjaththil vaatinaalum
    paanaiyil maa ennnney kurainthittalum
    kaakkum thaevan unakku unndu

    karththar unndu vaarththai unndu
    thoothar unndu avar arputham unndu

  • Kel Jenmitha Raayarke கேள்! ஜென்மித்த ராயர்க்கே

    1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
      விண்ணில் துத்தியம் ஏறுதே;
      அவர் பாவ நாசகர்,
      சமாதான காரணர்,
      மண்ணோர் யாரும் எழுந்து
      விண்ணோர்போல் கெம்பீரித்து
      பெத்லெகேமில் கூடுங்கள்,
      ஜென்ம செய்தி கூறுங்கள்.
      கேள்! ஜென்மித்த ராயர்க்கே
      விண்ணில் துத்தியம் ஏறுதே.
    2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
      லோகம் ஆளும் நாதரே,
      ஏற்ற காலம் தோன்றினீர்,
      கன்னியிடம் பிறந்தீர்.
      வாழ்க நர தெய்வமே,
      அருள் அவதாரமே!
      நீர், இம்மானுவேல், அன்பாய்
      பாரில் வந்தீர் மாந்தனாய்.
    3. வாழ்க, சாந்த பிரபுவே!
      வாழ்க, நீதி சூரியனே!
      மீட்பராக வந்தவர்,
      ஒளி, ஜீவன் தந்தவர்;
      மகிமையை வெறுத்து,
      ஏழைக் கோலம் எடுத்து,
      சாவை வெல்லப் பிறந்தீர்,
      மறு ஜென்மம் அளித்தீர்.

    Kel Jenmitha Raayarke Lyrics in English

    1. kael! jenmiththa raayarkkae
      vinnnnil thuththiyam aeruthae;
      avar paava naasakar,
      samaathaana kaaranar,
      mannnnor yaarum elunthu
      vinnnnorpol kempeeriththu
      pethlekaemil koodungal,
      jenma seythi koorungal.
      kael! jenmiththa raayarkkae
      vinnnnil thuththiyam aeruthae.
    2. vaanor pottum kiristhuvae,
      lokam aalum naatharae,
      aetta kaalam thontineer,
      kanniyidam pirantheer.
      vaalka nara theyvamae,
      arul avathaaramae!
      neer, immaanuvael, anpaay
      paaril vantheer maanthanaay.
    3. vaalka, saantha pirapuvae!
      vaalka, neethi sooriyanae!
      meetparaaka vanthavar,
      oli, jeevan thanthavar;
      makimaiyai veruththu,
      aelaik kolam eduththu,
      saavai vellap pirantheer,
      matru jenmam aliththeer.
  • Keethankal Paatiyae Poerrituvoem கீதங்கள் பாடியே போற்றிடுவோம்

    பாடி போற்றுவோம்

    1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – சங்
      கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – 2

    கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!
    அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் – 2

    அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்
    மகிமை படுத்திடுவோம்
    யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்
    உயர்த்தி மகிழ்ந்திடுவோம்
    அல்லேலூயா – 8

    1. இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார்
      கேடகமும் கிருபையும் பெலனுமானார்
      மாராவை மதுரமாக்கினார்
      மாறாத பரிகாரி அவரேயாவார் – 2
    2. நீதியின் தேவனை உயர்த்திடுவோம்
      நித்திய பாதையில் நடத்திடுவோம்
      நிதம் மாறாத அவர் அன்பினை நாம்
      சிதறி எங்குமே கூறிடுவோம் – 2

    Keethankal Paatiyae Poerrituvoem Lyrics in English

    paati pottuvom

    1. geethangal paatiyae pottiduvom – sang
      geethangal paatiyae pottiduvom – 2

    karththar periyavar makaa unnathar!
    avar thayavai ennnniyae thuthiththiduvom – 2

    arputhangal seypavar parisuththamaanavar
    makimai paduththiduvom
    yuththaththil vallavar iratchippumaanavar
    uyarththi makilnthiduvom
    allaelooyaa – 8

    1. isravael janangalai meettu vanthaar
      kaedakamum kirupaiyum pelanumaanaar
      maaraavai mathuramaakkinaar
      maaraatha parikaari avaraeyaavaar – 2
    2. neethiyin thaevanai uyarththiduvom
      niththiya paathaiyil nadaththiduvom
      nitham maaraatha avar anpinai naam
      sithari engumae kooriduvom – 2
  • Keetham Keetham Jeya Jeya Keetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
    கை கொட்டிப் பாடிடுவோம்

    இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ!

    1.பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
    புரண்டுருண்டோடுது பார் – அங்கு
    போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ!

    2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுங்கள் – தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ!


    Keetham Keetham Jeya Jeya Keetham Lyrics in English

    geetham geetham jeya jeya geetham
    kai kottip paadiduvom

    Yesu raajan uyirththelunthaar allaelooyaa
    jeyam entu aarpparippom – aa! aa!

    1.paar atho kallarai mootina perungal
    puranndurunntooduthu paar – angu
    potta muththiraik kaaval nirkumo
    thaeva puththirar sannithimun – aa! aa!

    2.vaenndaam vaenndaam aluthida vaenndaam
    oti uraiththidungal – thaam
    koorina maamarai vittanar kallarai
    pongal kalilaeyaavukku – aa! aa!

  • Keelaakaamal unnai melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே

    கீழாக்காமல் உன்னை மேலாக்கியே
    உன்னை நான் அபிஷேகிப்பேன்
    வாலாக்காமல் உன்னை தலையாக்கியே
    புது நாமம் தந்திடுவேன்
    எல்லையை பெரிதாக்கி விஸ்திகரித்து
    உன்னை நான் உயர்த்திடுவேன்

    மறவாமல் என்றும் நான் உன்னோடு இருந்து
    தாயை போல் பரிபாலிப்பேன்
    உன்னை என் கண்மணி போல் நான் காத்து
    புது நாமம் தந்திடுவேன்

    பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை காத்து
    கண்ணிமையாய் காத்திடுவேன்
    என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்தி
    கோட்டையாய் காத்திடுவேன்

    பகலில் பறக்கும் அம்பிற்க்கு உன்னை
    விடுவித்து காத்துக் கொள்வேன்
    பொலாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்து
    எல்லையை காத்திடுவேன்


    Keelaakaamal unnai melaakkiye Lyrics in English

    geelaakkaamal unnai maelaakkiyae
    unnai naan apishaekippaen
    vaalaakkaamal unnai thalaiyaakkiyae
    puthu naamam thanthiduvaen
    ellaiyai perithaakki visthikariththu
    unnai naan uyarththiduvaen

    maravaamal entum naan unnodu irunthu
    thaayai pol paripaalippaen
    unnai en kannmanni pol naan kaaththu
    puthu naamam thanthiduvaen

    paalaakkum kollai Nnoykku unnai kaaththu
    kannnnimaiyaay kaaththiduvaen
    en settaைyin geel ataikkalappaduththi
    kottaைyaay kaaththiduvaen

    pakalil parakkum ampirkku unnai
    viduviththu kaaththuk kolvaen
    polaappu unakku naeridaamal paarththu
    ellaiyai kaaththiduvaen

  • Kearupin serapingal கேரூபீன் சேராபீன்கள்

    கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி
    உம்மைப் போற்றுதே
    பூலோக திருச்சபையெல்லாம்
    ஓவின்றி உம்மை போற்றிட

    நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர் எங்கள்
    பரலோக ராஜாவே இந்த
    வானம் பூமியுள்ள யாவும் உங்கள்
    நாமத்தை உயர்த்தட்டுமே

    பூமியனைத்திலும் உந்தன் மகிமை
    நிறைந்து வழிகின்றதே
    ஆலயத்திலும் உந்தன் மகிமை
    அலையலையாய் அசைகின்றதே
    துதிகன மகிமைக்குப் பாத்திரர்
    எல்லா புகழும் உமக்குத்தானே

    வானம் உமது சிங்காசனம்
    பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன்
    தேவ ஆலயம் நீர் தங்கும் தூய ஸ்தலம்
    சகலமும் படைத்த என் தேவா
    நீர் நித்திய சிருஷ்டிகரே

    பரலோகத்தில் உம்மையல்லால்
    யாருண்டு தேவனே பூலோகத்தில்
    உம்மைத்தவிர வேறொரு விருப்பமில்லை
    என்றும் உம்மோடு வாழ என்னை
    உமக்காய் தெரிந்தெடுத்தீர்


    Kearupin serapingal Lyrics in English

    kaeroopeen seraapeenkal oyvinti
    ummaip pottuthae
    pooloka thiruchchapaiyellaam
    ovinti ummai pottida

    neer parisuththar,neer parisuththar,neer parisuththar engal
    paraloka raajaavae intha
    vaanam poomiyulla yaavum ungal
    naamaththai uyarththattumae

    poomiyanaiththilum unthan makimai
    nirainthu valikintathae
    aalayaththilum unthan makimai
    alaiyalaiyaay asaikintathae
    thuthikana makimaikkup paaththirar
    ellaa pukalum umakkuththaanae

    vaanam umathu singaasanam
    poomi unthan paathapati naangal unthan
    thaeva aalayam neer thangum thooya sthalam
    sakalamum pataiththa en thaevaa
    neer niththiya sirushtikarae

    paralokaththil ummaiyallaal
    yaarunndu thaevanae poolokaththil
    ummaiththavira vaeroru viruppamillai
    entum ummodu vaala ennai
    umakkaay therintheduththeer