Category: Tamil Worship Songs Lyrics

  • Anbin Uruvaanavaray Alpha அன்பின் உருவானவரே அல்பா

    அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
    உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
    உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே

    ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
    ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்

    1. மகிமை விடுத்து மரணம் சகித்து
      மந்தை காத்த மேய்ப்பன் நீரே
      உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே
    2. துயரம் நிறைந்து அழகை இழந்து
      காயப்பட்ட தெய்வம் நீரே
      பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே
    3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
      வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
      கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே

    Anbin Uruvaanavaray Alpha Lyrics in English

    anpin uruvaanavarae alpaa omaekaavae
    unnatharae uththamarae ullam kavarnthavarae
    ummaith thaanae thaeti vanthom unnmaiyotae

    aiyaa sthothram aiyaa sthothram
    aiyaa ennaalum umakkae sthothram

    1. makimai viduththu maranam sakiththu
      manthai kaaththa maeyppan neerae
      uyirodelunthu enakkaay parinthu paesum theyvamae
    2. thuyaram nirainthu alakai ilanthu
      kaayappatta theyvam neerae
      piriyaathiruntha paranai pirinthu paadupattirae
    3. vanjam illaamal kodumai illaamal
      vaalnthu kaattiya theyvam neerae
      kadamai unarnthu siluvai sumanthu paavam theerththeerae
  • Anbin Paliyai Yerpai அன்பின் பலியாய் ஏற்பாய்

    அன்பின் பலியாய் ஏற்பாய் – உன்னை

    அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்

    புண்படும் மனதின் துயர் தணிப்பாய் – எமைப் – 2

    புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

    வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள்

    வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் – 2

    முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் – 2 – எமைத்

    திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

    படைப்பின் மீதே பரிவிருக்க – அந்தப்

    பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க – 2

    படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க – 2 – உனில்

    படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க


    Anbin Paliyai Yerpai Lyrics in English
    anpin paliyaay aerpaay – unnai

    anukidum eliyavar vaennduthal kaetpaay

    punnpadum manathin thuyar thannippaay – emaip – 2

    punnnniya vaalvil nilaiperach seyvaay

    vaalvin kotaikal perukintom – arul

    vallalun karunnaiyil vaalkintom – 2

    mulumuthal thalaivaa irainjukintom – 2 – emaith

    thiruppalip porulaayth tharukintom

    pataippin meethae parivirukka – anthap

    parivaal un makan uyir kodukka – 2

    pataippae unnaal makilnthirukka – 2 – unil

    pataiththom thooymai nirainthirukka

  • Anbin Naadha அன்பின் நாதா

    Anbin Naadha
    அன்பின் நாதா எனக்கென்று
    ஒன்றையும் நான் விரும்பவில்லை (2)
    தமக்கென்று ஒன்றுமின்றி
    தந்தீரே நீர் எனக்காக (2)

    1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
      நாடி வந்தீர் ஏனோ என்னை (2)
      அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
      அன்பே இல்லா எந்தனின் மேல் (2)
    2. உன் இதய பாரம் தாரும்
      உம்மைப் போல என்னை மாற்றும் (2)
      எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
      உள்ளம் என்றும் மகிழ வேண்டும் (2)
    3. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
      எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் (2)
      எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
      உந்தன் பணி சேவைக்கல்லோ (2)

    Anbin Naadha – அன்பின் நாதா Lyrics in English

    Anbin Naadha
    anpin naathaa enakkentu
    ontaiyum naan virumpavillai (2)
    thamakkentu ontuminti
    thantheerae neer enakkaaka (2)

    1. nanmai ontum ennil illai
      naati vantheer aeno ennai (2)
      anpae aeno naesam konnteer
      anpae illaa enthanin mael (2)
    2. un ithaya paaram thaarum
      ummaip pola ennai maattum (2)
      enthan vaalvai ennnni unthan
      ullam entum makila vaenndum (2)
    3. unthan anpin aalam kanntaen
      enthan vaalvai arppanniththaen (2)
      enthan naeram enthan ellaam
      unthan panni sevaikkallo (2)
  • Anbin Mugathai Andru அன்பின் முகத்தை அன்று

    அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

    கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்
    எல்லை அன்று நான் கண்டேன்
    கொல்கொதா மலை மேல்

    தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
    கருனையின் முகங்கண்டேன்
    கல்வாரி மலைமேல் அன்று

    தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
    பாடுகள் ஏற்றதினால்
    மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
    சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..

    இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
    இரத்தம் சிந்தினதால்
    திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
    துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….


    Anbin Mugathai Andru Lyrics in English

    anpin mukaththai antu naan kanntaen

    kalvaari malai mael – thaeva anpin

    ellai antu naan kanntaen

    kolkothaa malai mael

    thiyaakaththin nal osaiyaik kaettaen

    karunaiyin mukanganntaen

    kalvaari malaimael antu

    thaeva thirusuthan antu ammalai mael

    paadukal aettathinaal

    manukkula paavam theerththidavae avar

    sithainthu maanndathinaal o….o..

    iratchakar Yesu antu ammalai mael

    iraththam sinthinathaal

    thirukkaal karangal moontannikalaal

    thulaikkath thonginathaal o…o….

  • Anbin Devan Yesu Unnai Alaikirar அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்

    அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
    கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
    உன்னை எண்ணி உள்ளம் நொந்து
    அணைக்க ஏசு துடிக்கிறார்
    கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்

    சரணங்கள்

    1. மனிதர்கள் அன்பு மாறலாம்
      மறைவாக தீது பேசலாம்
      அன்பு காணா இதயமே
      அன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின்
    2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
      வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
      கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
      கலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின்
    3. வேலை வசதிகள் இல்லையோ
      வீட்டினில் வறுமை தொல்லையோ
      மரண பயமும் நெருங்குதோ
      மரணம் வென்ற ஏசு பார் — அன்பின்

    Anbin Devan Yesu Unnai Alaikirar Lyrics in English

    anpin thaevan aesu unnai alaikkiraar
    kalvaariyin maettinil kalangum karththar unndallo
    unnai ennnni ullam nonthu
    annaikka aesu thutikkiraar
    kavalaiyaen kalakkamaen karththar aesu alaikkiraar

    saranangal

    1. manitharkal anpu maaralaam
      maraivaaka theethu paesalaam
      anpu kaannaa ithayamae
      anpin thaevanai anntikkol — anpin
    2. viyaathikal thollaiyo tholviyo
      vaalkkaiyil enna aekkamo
      kannnneerthaan unthan padukkaiyo
      kalangaathae mannan aesu paar — anpin
    3. vaelai vasathikal illaiyo
      veettinil varumai thollaiyo
      marana payamum nerungutho
      maranam venta aesu paar — anpin
  • Anbin Deva Narkarunaiyile அன்பின் தேவ நற்கருணையிலே

    அன்பின் தேவ நற்கருணையிலே
    அழியாப் புகழோடு வாழ்பவரே
    அன்புப் பாதையின் வழி நடந்தே
    அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

    1. அற்புதமாக எமைப் படைத்தீர்
      தற்பரன் நீரே எமை மீட்டீர்
      பொற்புடன் அப்ப குண ரசத்தில்
      எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
      எத்தனை வழிகளில் உமதன்பை
      எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
    2. கல்வாரி மலையின் சிகரமதில்
      கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
      நற் கருணை விஸ்வாசமதில்
      நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
      இளமையின் பொலிவால் திருச்சபையும்
      யாவரும் வாழ தயை புரிவீர்

    Anbin Deva Narkarunaiyile Lyrics in English

    anpin thaeva narkarunnaiyilae
    aliyaap pukalodu vaalpavarae
    anpup paathaiyin vali nadanthae
    atiyor vaalnthida thunnai seyveer

    1. arputhamaaka emaip pataiththeer
      tharparan neerae emai meettir
      porpudan appa kuna rasaththil
      eppoluthum vaal iraivanaaneer
      eththanai valikalil umathanpai
      ennpiththemai neer aatkonnteer
    2. kalvaari malaiyin sikaramathil
      kanivudan thinam emmai nilai niruththum
      nar karunnai visvaasamathil
      nampikkaiyootti valarththiduveer
      ilamaiyin polivaal thiruchchapaiyum
      yaavarum vaala thayai puriveer

  • Anbin deivame ennai அன்பின் தெய்வமே என்னை

    அன்பின் தெய்வமே என்னை
    நடத்தும் தெய்வமே – நன்றியோடு
    உம்மைப் பாடுவேன் -நான்

    பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
    எத்தனையோ நன்மை செய்தீரே
    ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

    சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
    அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
    இது அதிசயம் அதிசயம் தானே

    புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
    புதிய வழியில் நடத்துகின்றீரே
    இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே

    பரம குயவனே உமது கரங்களில்
    என்னையும் கொடுத்து விட்டேனே
    உம் சித்தம் போல என்னை நடத்துமே


    Anbin deivame ennai Lyrics in English

    anpin theyvamae ennai
    nadaththum theyvamae – nantiyodu
    ummaip paaduvaen -naan

    pirantha naalmuthal inthanaal varai
    eththanaiyo nanmai seytheerae
    aiyaa eththanaiyo nanmai seytheerae

    sirumaiyaanavanaith thookki eduththeerae
    alavillaamal aaseervathiththeerae
    ithu athisayam athisayam thaanae

    puthiya kirupaiyaal ennai thaangukinteerae
    puthiya valiyil nadaththukinteerae
    ithu aachchariyam aachchariyam thaanae

    parama kuyavanae umathu karangalil
    ennaiyum koduththu vittaenae

  • Anbin Deivam அன்பின் தெய்வம்

    அன்பின் தெய்வம் இயேசு
    ஆறுதல் தருபவர்
    மார்பில் சாய்கின்றேன்
    மகிழ்ந்து பாடுவேன்

    பாதை இழந்த ஆடாய்
    பாரினில் ஓடினேன்
    சிலுவை அன்பினாலே
    திசையும் புரிந்தது
    வாழ்வது நானல்ல
    இயேசு வாழ்கின்றார் என்னில்

    இயேசு பேசும்போது என்
    உள்ளம் உருகுதே அவர்
    வார்த்தை படிக்கும்போது என்
    வாழ்வு மாறுதே
    வேதம் ஏந்துவேன்
    வெல்வேன் அலகையை தினம்

    கண்ணீர் சிந்தும்போது மனக்
    கண்ணில் தெரிகின்றார்
    கவலை நெருக்கும்போது அவர்
    கரத்தால் அணைக்கின்றார்
    ஆவி பொழிகின்றார்
    ஆற்றல் தருகின்றார் எனக்கு


    Anbin Deivam Lyrics in English

    anpin theyvam Yesu
    aaruthal tharupavar
    maarpil saaykinten
    makilnthu paaduvaen

    paathai ilantha aadaay
    paarinil otinaen
    siluvai anpinaalae
    thisaiyum purinthathu
    vaalvathu naanalla
    Yesu vaalkintar ennil

    Yesu paesumpothu en
    ullam urukuthae avar
    vaarththai patikkumpothu en
    vaalvu maaruthae
    vaetham aenthuvaen
    velvaen alakaiyai thinam

    kannnneer sinthumpothu manak
    kannnnil therikintar
    kavalai nerukkumpothu avar
    karaththaal annaikkintar
    aavi polikintar
    aattal tharukintar enakku

  • Anbin Aandavare Aathma Amaithi Thantheer அன்பின் ஆண்டவரே

    அன்பின் ஆண்டவரே
    ஆத்ம அமைதி தந்தீர்
    அன்பில் இறுக்கம்
    பண்பில் ஒழுக்கம்
    என்றும் காத்திடுவீர் – இயேசுவே -(2)

    1. சொந்தப் பிள்ளையாக
      எட்டிக் காயுமான
      இந்தப் பாவியையும்
      பங்கம் பாசம் காட்டி

    அன்பிதோ துதிப்பேன்
    அன்பிதோ மகிழ்வேன்
    ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவே
    ஆத்ம அமைதி தந்தீர் – அன்பின்

    1. வாழ்நாள் முடிவுவரை
      தேவ பணிபுரிவேன்
      கள்ளம் கபடு இன்றி
      கர்த்தர் வழியில் செல்வேன்

    அன்பிதோ துதிப்பேன்
    அன்பிதோ மகிழ்வேன்
    ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவே
    ஆத்ம அமைதி தந்தீர் – அன்பின்


    Anbin Aandavare Aathma Amaithi Thantheer Lyrics in English
    anpin aanndavarae

    aathma amaithi thantheer

    anpil irukkam

    pannpil olukkam

    entum kaaththiduveer – Yesuvae -(2)

    1. sonthap pillaiyaaka

    ettik kaayumaana

    inthap paaviyaiyum

    pangam paasam kaatti

    anpitho thuthippaen

    anpitho makilvaen

    aathma amaithi thantheer – Yesuvae

    aathma amaithi thantheer – anpin

    1. vaalnaal mutivuvarai

    thaeva pannipurivaen

    kallam kapadu inti

    karththar valiyil selvaen

    anpitho thuthippaen

    anpitho makilvaen

    aathma amaithi thantheer – Yesuvae

    aathma amaithi thantheer – anpin

  • Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

    அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
    உம்மைக் கொண்டு சகலத்தையும்
    உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
    தந்தை நோக்கம் அநாதியன்றோ

    என் இயேசுவே நேசித்தீரோ
    எம்மாத்திரம் மண்ணான நான்
    இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

    மரித்தோரில் முதல் எழுந்ததினால்
    புது சிருஷ்டியின் தலையானீரே
    சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
    ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை

    முன்னறிந்தே என்னை அழைத்தீரே
    முதற்பேராய் நீர் இருக்க
    ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
    உம் சாயலில் நான் வளர

    வருங்காலங்களில் முதற்பேராய்
    நீர் இருக்க நாம் சோதரராய் உம்
    கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
    ஆளுவோம் புது சிருஷ்டியிலே

    நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
    நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
    உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
    என்னை தந்தேன் நடத்திடுமே


    Anbil Ennai Parisuthanaaka Lyrics in English

    anpil ennaip parisuththanaakka
    ummaik konndu sakalaththaiyum
    uruvaakkiyae neer mutharpaeraaneero
    thanthai Nnokkam anaathiyanto

    en Yesuvae naesiththeero
    emmaaththiram mannnnaana naan
    innum nantiyudan thuthippaen

    mariththoril muthal elunthathinaal
    puthu sirushtiyin thalaiyaaneerae
    sapaiyaam um sareeram seer porunthidavae
    eevaay aliththeer apposthalarai

    munnarinthae ennai alaiththeerae
    mutharpaeraay neer irukka
    aaviyaal apishaekiththeer ennaiyumae
    um saayalil naan valara

    varungaalangalil mutharpaeraay
    neer irukka naam sothararaay um
    kirupaiyin vaarththaiyai velippaduththi
    aaluvom puthu sirushtiyilae

    nantiyaal en ullam nirainthiduthae
    naan itharkenna pathil seykuvaen
    ummakaa Nnokkam muttumaay niraivaerida
    ennai thanthaen nadaththidumae