Category: Tamil Worship Songs Lyrics

  • Anbarin Nesam Aar அன்பரின் நேசம் ஆர்

    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

    துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்

    இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
    எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே

    பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
    வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே

    வியாழனிரவினில் வியாகுலத் தோடே
    விளம்பின போதகம் மறந்திடலாமோ

    செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
    முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே

    பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
    மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்


    Anbarin Nesam Aar Lyrics in English

    anparin naesam aar sollalaakum-athisaya
    anparin naesam aar sollalaakum

    thunpa akoram thodarnthidum naeram

    ithuven sareeram ithuventan raththam
    enai ninainthidumpati arunthumentarae

    pirinthidum vaelai nerungina thaalae
    varunthina seesharkkaay maruki nintarae

    viyaalaniravinil viyaakulath thotae
    vilampina pothakam maranthidalaamo

    setiyum kotiyum pol sernthu thammotae
    mutivu pariyantham nilaippeerentarae

    paktharkatkaakap paramanai Nnokki
    meththavum ookkamaay vaenntik konndaarae
    anparin naesam aar sollalaakum-athisaya
    anparin naesam aar sollalaakum

  • Anbaram Yesuvin Anbinai அன்பராம் இயேசுவின் அன்பினை

    அன்பராம் இயேசுவின்
    அன்பினை எண்ணியே
    அளவில்லா துதிகளுடன்
    சந்தோஷ கீதங்களால்
    எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
    பரமனை ஸ்தோத்தரிப்பேன்

    1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
      கவலை எனக்கு இல்லையே
      புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
      என்னை நடத்திச் செல்லுவார்

    காலம் மாறினாலும்
    பூமி அழிந்தாலும்
    இயேசு என்றும் மாறிடார்

    எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
    போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்
    —- அன்பராம் இயேசுவின்

    1. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
      உமக்கே நிகரே இல்லையே
      சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
      என்னை நடத்திச் செல்லுவீர்

    நல்ல தேவனின்
    வல்ல வார்த்தைகளால்
    எந்தன் வாழ்வு மலரும்

    எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
    புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்
    —- அன்பராம் இயேசுவின்

    1. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
      மேகமீதில் ஒரு நாள்
      மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
      மணவாளன் வந்திடுவார்
      ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
      பரிசுத்தர் கூட்டத்தோடு
      அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
      செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்
      —- அன்பராம் இயேசுவின்

    Anbaram Yesuvin Anbinai Lyrics in English

    anparaam Yesuvin

    anpinai ennnniyae

    alavillaa thuthikaludan

    santhosha geethangalaal

    ennaalumae paatiyae pottiduvaen

    paramanai sthoththarippaen

    1. jeevanullavarai Yesu enthan maeyppar

    kavalai enakku illaiyae

    pullulla idangalilum amarntha thannnneeranntaiyum

    ennai nadaththich selluvaar

    kaalam maarinaalum

    poomi alinthaalum

    Yesu entum maaridaar

    enthan naesarae enthan ataikkalamaanavar

    pokkilum varaththilum ennaik karampatti nadaththuvaar

                                                                              —- anparaam Yesuvin
    1. ularntha elumpukalai uyirkkach seythavarae

    umakkae nikarae illaiyae

    sivantha samuththiraththai iranndaay pilakkach seythu

    ennai nadaththich selluveer

    nalla thaevanin

    valla vaarththaikalaal

    enthan vaalvu malarum

    enthan thaevanae enthan parikaari aanavar

    puthiya kirupaikal anuthinamum tharupavar

                                                                              —- anparaam Yesuvin
    1. vaana senaikal soola ekkaalach saththam mulanga

    maekameethil oru naal

    maasatta jothiyaaka makimai iraajanaaka

    manavaalan vanthiduvaar

    aayaththamaakiduvaen anparai santhiththida

    parisuththar koottaththodu

    antha naal sameepamae enthan ithayam poorikkuthae

    selvaen anparodu vaalvaen niththiyamaay
    —- anparaam Yesuvin

  • Anbaram Yesuvai Parthu Konde அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

    அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
    இன்பமாக அவர் பாதையோடே
    தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)

    துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
    அன்பர் அறியாமல் வந்திடாதே
    கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே

    1. முட்செடி போலே பற்றிடுவேன்
      மோசம் அடையாய் நீ முற்றீலுமே
      ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
    2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
      வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
      ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
    3. மாயையான இந்த லோகமதில்
      மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
      நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே

    Anbaram Yesuvai Parthu Konde Lyrics in English

    anparaam Yesuvai paarththukkonntae
    inpamaaka avar paathaiyotae
    thaamae valiyum saththiyamum jeevanumae(2)

    thunpa perukkilae sornthidaathae
    anpar ariyaamal vanthidaathae
    kann vilipol naan kaaththiduvaen entanarae

    1. mutchedi polae pattiduvaen
      mosam ataiyaay nee muttaீlumae
      aengidaathae nee naesar athil thontuvaarae
    2. suttilum saththuru soolnthitinum
      viyaakulam unnai nerukkitinum
      aa.. naesarae tham inpa saththam eentheeduvaar
    3. maayaiyaana intha lokamathil
      maaynthaliyum immaanthar antu
      naettum intentum maaridaarae un naesarae
  • Anbana Mantharae Koodungalae அன்பான மாந்தரே கூடுங்களே

    அன்பான மாந்தரே கூடுங்களே

    ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

    கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே

    நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (2)

    மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே

    மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (2)

    முப்பொழுதும் அவள் கன்னியம்மா

    எப்பொழுதும் நம் அன்னையம்மா

    வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே

    வேதங்கள் அறியாத தத்துவமே (2)

    தேவாதி தேவனின் தாயகமே

    திருமறை போற்றிடும் நாயகமே (2) –முப்பொழுதும்

    தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே

    தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (2)

    உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே

    ஊமைகள் பேசிட மொழியும் நீயே (2) –முப்பொழுதும்


    Anbana Mantharae Koodungalae Lyrics in English
    anpaana maantharae koodungalae

    aarokkiya maathaavaip paadungalae

    geethangal aval peyarai sollattumae

    naathangal engaெngum olikkattumae (2)

    mannnnaalum maathaavai vaalththattumae

    mariyaalin pukalkoorip pottattumae (2)

    muppoluthum aval kanniyammaa

    eppoluthum nam annaiyammaa

    vaanorkal arinthitta arputhamae

    vaethangal ariyaatha thaththuvamae (2)

    thaevaathi thaevanin thaayakamae

    thirumarai pottidum naayakamae (2) –muppoluthum

    thaevaikal theerkkinta thaevathaayae

    theemaikal kalaikinta anpuththaayae (2)

    ulakinar kannnukku oliyum neeyae

    oomaikal paesida moliyum neeyae (2) –muppoluthum

  • Anbae Pirathanam அன்பே பிரதானம்

    அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்.

    1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
      இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம்
    2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
      கலகல வென்னும் – கைம்மணியாமே
    3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
      அன்பில்லையானால் – அதிற்பயனில்லை
    4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
      பணிய அன்பில்லால் – பயனதிலில்லை
    5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
      போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
    6. புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,
      பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா
    7. சினமடையாது, – தீங்கு முன்னாது,
      தினமழியாது, – தீமை செய்யாது
    8. சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும்,
      மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்

    Anbae Pirathanam Lyrics in English

    anpae pirathaanam, – sakothara anpae pirathaanam.

    1. pannputru njaanam,- parama nampikkai,
      inpa visvaasam, – ivaikalilellaam
    2. palapala paashai – patiththarinthaalum,
      kalakala vennum – kaimmanniyaamae
    3. en porul yaavum – eenthaliththaalum,
      anpillaiyaanaal – athirpayanillai
    4. thunnivuda nudalaich – sudakkoduththaalum,
      panniya anpillaal – payanathilillai
    5. saanthamum thayavum – sakala narkunamum
      pontha saththiyamum – porumaiyumulla
    6. pukalitru maappu, – polivu poraamai,
      pakaiya niyaayap – paavamunj seyyaa
    7. sinamataiyaathu, – theengu munnaathu,
      thinamaliyaathu, – theemai seyyaathu
    8. sakalamun thaangum, – sakalamum nampum,
      mikaipada ventum – maenmai pettaோngum
  • Anbae Entranava En Ennam அன்பே என்றானவா என் எண்ணம்

    அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா

    உன் மேன்மை வானம் என்றாகினாலும்

    என் ஏழ்மை குறை தீர்த்தவா – 2

    வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்

    வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்

    பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்

    எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்

    மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் – 2

    என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் – 2

    உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்

    உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்

    கண் பார்வை அருள் போதும் என நாடினேன்

    என் பாதை வழி செல்லும் துணையாகினாய்

    மண்மீது காலூன்றும் தொடுவானமாய் – 2

    என்மீது நீ வந்து நானாகிறாய் – 2


    Anbae Entranava En Ennam Lyrics in English

    anpae entanavaa en ennnam niraivaanavaa
    un maenmai vaanam entakinaalum
    en aelmai kurai theerththavaa – 2

    valam kaaynthu nilal thaedum naerangalil

    valamodu enaich soolum nathiyaakiraay

    pirinthoti manam vaadum vaelaikalil

    enaith thaettum puthu vaalvu malaiyaakiraay

    malai ponta un anpu munnaalaethaan – 2

    en thaalvai un maannpai naan kaannkiraen – 2

    un paathanilal pothum ena aenginaen

    un nenjamalaraalae enai mootinaay

    kann paarvai arul pothum ena naatinaen

    en paathai vali sellum thunnaiyaakinaay

    mannmeethu kaaloontum thoduvaanamaay – 2

    enmeethu nee vanthu naanaakiraay – 2

  • Anbaai Nadathum Aaviye அன்பாய் நடத்தும் ஆவியே

    அன்பாய் நடத்தும் ஆவியே
    ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
    வல்லமையின் ஆவியே
    விடுதலையின் ஆவியே
    வந்து எம்மை அபிஷேகியும்

    1. அற்புதங்கள் நடக்கணும்
      அதிசயத்த பாக்கணும்
      ஆத்துமாக்கள் பெருகிடணும்
      அஸ்திபாரம் அசையணும்
      அந்தகாரம் ஒழியணும்
      இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்
    2. யோசுவாக்கள் எழும்பணும்
      எலியாக்கள் பெருகணும்
      கிதியோன்கள் புறப்படணும்
      எஸ்தர்கள் எழும்பணும்
      எரிகோக்கள் உடையணும்
      ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்

    Anbaai Nadathum Aaviye Lyrics in English

    anpaay nadaththum aaviyae
    aathi apposthalar mael polintha
    vallamaiyin aaviyae
    viduthalaiyin aaviyae
    vanthu emmai apishaekiyum

    1. arputhangal nadakkanum
      athisayaththa paakkanum
      aaththumaakkal perukidanum
      asthipaaram asaiyanum
      anthakaaram oliyanum
      Yesuvaiyae ariyavaenndum – aravannaikkum
    2. yosuvaakkal elumpanum
      eliyaakkal perukanum
      kithiyonkal purappadanum
      estharkal elumpanum
      erikokkal utaiyanum
      aesu thaevan entu mulanganum – aravannaikkum
  • Anathiyaana Karthare அநாதியான கர்த்தரே

    1. அநாதியான கர்த்தரே,
      தெய்வீக ஆசனத்திலே
      வானங்களுக்கு மேலாய் நீர்
      மகிமையோடிருக்கிறீர்.
    2. பிரதான தூதர் உம்முன்னே
      தம் முகம் பாதம் மூடியே
      சாஷ்டாங்கமாகப் பணிவார்,
      ‘நீர் தூய தூயர்’ என்னுவார்.
    3. அப்படியானால், தூசியும்
      சாம்பலுமான நாங்களும்
      எவ்வாறு உம்மை அண்டுவோம்?
      எவ்விதமாய் ஆராதிப்போம்?
    4. நீரோ உயர்ந்த வானத்தில்,
      நாங்களோ தாழ்ந்த பூமியில்
      இருப்பதால், வணங்குவோம்,
      மா பயத்தோடு சேருவோம்.

    Anathiyaana Karthare Lyrics in English

    1. anaathiyaana karththarae,
      theyveeka aasanaththilae
      vaanangalukku maelaay neer
      makimaiyotirukkireer.
    2. pirathaana thoothar ummunnae
      tham mukam paatham mootiyae
      saashdaangamaakap pannivaar,
      ‘neer thooya thooyar’ ennuvaar.
    3. appatiyaanaal, thoosiyum
      saampalumaana naangalum
      evvaatru ummai annduvom?
      evvithamaay aaraathippom?
    4. neero uyarntha vaanaththil,
      naangalo thaalntha poomiyil
      iruppathaal, vananguvom,
      maa payaththodu seruvom.
  • Anathi Snegathal Ennai Nesitheeraiyah அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா

    1. அநாதி சிநேகத்தால்
      என்னை நேசித்தீரைய்யா
      காருண்யத்தினால்
      என்னை இழுத்துக் கொண்டீரே

    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது

    1. அனாதையாய் அலைந்த
      என்னை தேடி வந்தீரே
      அன்பு காட்டி அரவணைத்து
      காத்துக் கொண்டீரே – உங்க
    2. நிலையில்லாதா உலகத்தில்
      அலைந்தேனய்யா
      நிகரில்லாத இயேசுவே
      அனைத்துக் கொண்டீரே – உங்க
    3. தாயின் கருவில் தோன்றுமுன்னே
      தெரிந்துக் கொண்டீரே
      தாயைப் போல ஆற்றி தேற்றி
      அரவணைத்தீரே – உங்க
    4. நடத்தி வந்த பாதைகளை
      நினைக்கும் போதெல்லாம்
      கண்ணீரோடு நன்றி சொல்லி
      துதிக்கிறேனைய்யா – உங்க
    5. கர்த்தர் செய்ய நினைத்தது
      தடைபடவில்லை
      சகலத்தையும் நன்மையாக
      செய்து முடித்தீரே – உங்க

    Anathi Snegathal Ennai Nesitheeraiyah Lyrics in English

    1. anaathi sinaekaththaal
      ennai naesiththeeraiyyaa
      kaarunnyaththinaal
      ennai iluththuk konnteerae
      unga anpu periyathu
      unga irakkam periyathu
      unga kirupai periyathu
      unga thayavu periyathu
    2. anaathaiyaay alaintha
      ennai thaeti vantheerae
      anpu kaatti aravannaiththu
      kaaththuk konnteerae – unga
    3. nilaiyillaathaa ulakaththil
      alainthaenayyaa
      nikarillaatha Yesuvae
      anaiththuk konnteerae – unga
    4. thaayin karuvil thontumunnae
      therinthuk konnteerae
      thaayaip pola aatti thaetti
      aravannaiththeerae – unga
    5. nadaththi vantha paathaikalai
      ninaikkum pothellaam
      kannnneerodu nanti solli
      thuthikkiraenaiyyaa – unga
    6. karththar seyya ninaiththathu
      thataipadavillai
      sakalaththaiyum nanmaiyaaka
      seythu mutiththeerae – unga
  • Ananthamai Inba Kaanan Yegiduven ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்

    ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

    அனுபல்லவி

    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    நாதன் இயேசு என்னோடிருப்பார்

    சரணங்கள்

    1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
      மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
      கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
      கண்டு நன்றியுடன் பாடிடுவேன் — ஆனந்தமாய்
    2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
      வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
      எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
      இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் — ஆனந்தமாய்
    3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
      தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
      இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
      என்றும் எனக்கவர் ஆதரவே — ஆனந்தமாய்
    4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
      உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
      தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
      கண் பாரும் என்றும் நான் உம் அடிமை — ஆனந்தமாய்
    5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
      ஆற்றிடுதே உந்தன் சமூகமே
      பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
      பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் — ஆனந்தமாய்

    Ananthamai Inba Kaanan Yegiduven Lyrics in English

    aananthamaay inpak kaanaan aekiduvaen
    thooya pithaavin mukam tharisippaen

    anupallavi

    naalukku naal arputhamaay ennaith thaangidum
    naathan Yesu ennotiruppaar

    saranangal

    1. settinintennaith thookkiyeduththu
      maatti ullam puthithaakkinaarae
      kallaana en ullam urukkina kalvaariyaik
      kanndu nantiyudan paadiduvaen — aananthamaay
    2. vaalipa naalil Yesuvaik kanntaen
      vaanjaiyudan ennaith thaeti vanthaar
      etharkumae uthavaa ennaiyum kanndeduththaar
      Yesuvin anpai naan en solluvaen — aananthamaay
    3. karththarin siththam seythida niththam
      thaththam seythae ennai arppanniththaen
      Yesu allaal aasai ippoovinil vaetae illai
      entum enakkavar aatharavae — aananthamaay
    4. ummaip pin sentu ooliyam seythu
      umpaatham sera vaanjikkiraen
      thaarum thaevaa aelaikkum maaraatha um kirupai
      kann paarum entum naan um atimai — aananthamaay
    5. thaettiduthae um vaakkukal ennai
      aattiduthae unthan samookamae
      pelaththin mael pelanatainthu naan seruvaen
      paerinpa seeyonil vaalnthiduvaen — aananthamaay