Author: admin

  • Sankarippaen Sankarippaen சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

    சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
    சாத்தானின் கிரியைகளை
    கர்த்தர் நாமத்தினால்
    கல்வாரி இரத்தத்தினால்

    ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
    திருவசனம் அறிக்கை செய்வேன்

    வேதனையில் கூப்பிட்டேன்
    பதில் தந்து விடுவித்தார்
    என் பக்கம் இருக்கின்றார்
    எதற்கும் பயமில்லையே

    சுற்றி வரும் சோதனைகள்
    முற்றிலும் எரிகின்றன
    எரியும் முட்செடி போல்
    சாம்பலாய்ப் போகின்றன

    கர்த்தரின் வலது கரம்
    பராக்கிரமம் செய்கின்றது
    மிகவும் உயர்ந்துள்ளது
    மிராக்கிள் நடக்கின்றது

    சாகாமல் பிழைத்திருப்பேன்
    சரித்திரம் படைத்திடுவேன்
    கர்த்தர் செய்தவற்றை
    காலமெல்லாம் அறிவிப்பேன்


    Sankarippaen sankarippaen Lyrics in English
    sangarippaen sangarippaen
    saaththaanin kiriyaikalai
    karththar naamaththinaal
    kalvaari iraththaththinaal

    jeyameduppaen thorkatippaen
    thiruvasanam arikkai seyvaen

    vaethanaiyil kooppittaen
    pathil thanthu viduviththaar
    en pakkam irukkintar
    etharkum payamillaiyae

    sutti varum sothanaikal
    muttilum erikintana
    eriyum mutchedi pol
    saampalaayp pokintana

    karththarin valathu karam
    paraakkiramam seykintathu
    mikavum uyarnthullathu
    miraakkil nadakkintathu

    saakaamal pilaiththiruppaen
    sariththiram pataiththiduvaen
    karththar seythavattaை
    kaalamellaam arivippaen

  • Samayamithu Nalla Samayam சமயமிது நல்ல சமயம்

    சமயமிது நல்ல சமயம் , உமதாவி
    தரவேனுமே

    அனுபல்லவி
    அமையுஞ் சத்துவங்குன்றி,
    அருள் ஞானத் துயிரின்றி ,
    அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
    அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

    சரணங்கள்
    யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
    வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
    வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
    மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
    கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

    ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
    செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
    தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
    தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
    உந்தையையினுற் சாகநல்லாவியை, – சம

    ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
    ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
    ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
    எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
    போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், – சம

    பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
    உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
    விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
    வேதனே உமதருளி னுயிர்பெறப்
    பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம


    Samayamithu Nalla Samayam Lyrics in English

    samayamithu nalla samayam , umathaavi
    tharavaenumae

    anupallavi

    amaiyunj saththuvangunti,
    arul njaanath thuyirinti ,
    amarnthu sernthelumpaa thurangidum
    atiyanmee thanalmootti yuyir thara ,-

    saranangal

    yaesukiristhuvinmael naesam paththiyumvisu
    vaasam nampikkai samaathaanam mangidalaachchaே ,
    veesungiranaththaavi naesachchuvaalai mootti
    minjunjaீva narkanikaleengumaik
    kenjuthaasanin manathilongida -sama

    jepamo thavamo thaevathiyaanamo vaanjaiyo
    seyyunjuyamuyarsi thoyyung kaaranamaeno?
    thavanam njaanaamuthin mael sattumillaathathaeno?
    thanthaiyaeyuyir thanthenaith thaangida
    unthaiyaiyinur saakanallaaviyai, – sama

    othum pirasangamum osaikkaiththaalampola
    olikkuthallaamal palan palikkuthillai , thaakkul
    aethumattidum pallaththelumpu uyirththelumpa
    esekkiyaelurai vaakkilu yirarul
    pokkiyae seytha aaviyae ingngnam, – sama

    penthekosthinil kootivantha seedaraiyantu
    unthanaaviyinaip polinthapishaekanj seytha
    vinthaipolemathidam vanthem vaelaikal muttum
    vaethanae umatharuli nuyirperap
    poothalar umaip potta nin seyaraayp , sama

  • Samathanam Venduma சமாதானம் வேண்டுமா

    சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
    சங்கடங்கள் நீங்கவே
    ஜெபம் செய்திடுவோம்
    நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
    மனம் மாற வேண்டுமா
    ஜெபம் செய்திடுவோம்

    முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
    முடியாது என்று ஒன்றுமில்லை
    வாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால்
    வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

    வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
    வெற்றி வாழ்க்கை வாழவே
    ஜெபம் செய்திடுவோம்

    எலியாவும் ஒரு மனிதன் தான்
    ஜெபித்திட மழை மறைந்ததே
    மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
    நின்ற மழை அன்று பொழிந்ததே

    விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
    கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

    வானவரே விண்ணப்பம் செய்யும் போது
    மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
    கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
    சித்தப்படி என்றும் நடந்திட

    மனத்தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
    உயிருள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்


    Samathanam venduma Lyrics in English
    samaathaanam vaenndumaa jepam seyvom
    sangadangal neengavae
    jepam seythiduvom
    nilai maara vaenndumaa jepam seyvom
    manam maara vaenndumaa
    jepam seythiduvom

    mulangaalil naam nintuvittal
    mutiyaathu entu ontumillai
    vaakkuthaththam naam pattik konndaal
    vaalvil ini oru tholviyillai

    vaethanaikal neengavae jepam seyvom
    vetti vaalkkai vaalavae
    jepam seythiduvom

    eliyaavum oru manithan thaan
    jepiththida malai marainthathae
    meenndum avan vanthu jepikkaiyil
    ninta malai antu polinthathae

    visuvaasaththodu naam jepam seyvom
    karuththaaka yaavarum jepam seythiduvom

    vaanavarae vinnnappam seyyum pothu
    maanidar naam jepikka thayangalaakumo
    kattuth thanthaar naamum jepiththida – avar
    siththappati entum nadanthida

    manaththaalmaiyodu naam jepam seyvom
    uyirulla naal varai jepam seythiduvom

  • Samaathaanam Othum Aesukiristhu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

    சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
    இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

    1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
      அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம்
    2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
      பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம்
    3. ஆதி நரர் செய்த தீதறவே,
      அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம்
    4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
      அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம்
    5. மெய்யாகவே மே சியாவுமே,
      நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே — சமாதானம்
    6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
      நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே — சமாதானம்

    Samaathaanam Othum Aesukiristhu Lyrics in English
    samaathaanam othum aesukiristhu
    ivar thaam, ivar thaam, ivar thaam

    1. naama thaathi pithaavin thirup paalar ivar,
      anukoolar ivar, manuvaelar ivar — samaathaanam
    2. naeya kirupaiyin oru seyar ivar,
      parama raayar ivar, naama thaayar ivar — samaathaanam
    3. aathi narar seytha theetharavae,
      arulaananthamaay, atiyaar sonthamaay — samaathaanam
    4. aaranam paati vinnnnor aadavae,
      arinjor thaedavae, aayarum koodavae — samaathaanam
    5. meyyaakavae mae siyaavumae,
      nammai naatinaarae, kirupai koorinaarae — samaathaanam
    6. arulaanantha motcha vali kaattinaarae,
      nilai naattinaarae, muti soottinaarae — samaathaanam
  • Samaathaanam Nalkum Naamam Yesu Naamamae சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

    சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
    மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே

    இயேசு நாமமே, இயேசு நாமமே
    கிறிஸ்தேசு நாமமே (2)

    1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே

    தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

    1. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே
      உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே
    2. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே
      ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே
    3. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே
      என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

    Samaathaanam Nalkum Naamam Yesu Naamamae Lyrics in English
    samaathaanam nalkum naamam Yesu naamamae
    manachchaாnthi tharum iniya naamam Yesu naamamae

    Yesu naamamae, Yesu naamamae
    kiristhaesu naamamae (2)

    1. annai thanthai sontham yaavum Yesu naamamae

    thannai thantha inpa naamam Yesu naamamae

    1. paavamara kaluvum naamam Yesu naamamae
      uyar pakthithanai valarkkum naamam Yesu naamamae
    2. paava irul pokkum naamam Yesu naamamae
      jeeva oli veesum naamam Yesu naamamae
    3. pon velli pukal porulum Yesu naamamae
      en ullil vaalum aesu naamam Yesu naamamae
  • Salamen Raja சாலேம் ராஜா

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
    சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

    1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
      என் உள்ளத்தில் வாருமே
      ஆமென் ஆமென் ஆமென்
    2. பேரானந்தம் உம் பிரசன்னம்
      மாறாததுந்தன் வசனம்
      கேருபீன்கள் உம் வாகனம்
      உம் சரீரமே என் போஜனம்
    3. பூலோகத்தின் நல் ஒளியே
      மேலோகத்தின் மெய் வழியே
      பக்தரை காக்கும் வேலியே
      குற்றம் இல்லாத பலியே
    4. நீர் பேசினால் அது வேதம்
      உம் வார்த்தையே பிரசாதம்
      உம் வல்ல செயல்கள் பிரமாதம்
      போதும் போதும் நீர் போதும்
    5. கண்ணோக்கி எம்மை பாரும்
      தீமை விலக்கி எமை காரும்
      இன்றே எம் பந்தியில் சேரும்
      வாரும் நீர் விரைவில் வாரும்

    Saalem raja saaron roja pallathaakin leele neer
    Singaasanam veetrirukkum yoodha raja singam neer

    1. Dhevaadhi dhevanaamae
      Raajaadhi raaajanaamay
      Ennullathil vaarumay
      Amen amen amen
    2. Saalem raja saaron roja
      Pallathaakin leele neer
      Singaasanam veetrirukkum
      Yoodha raja singam neer
    3. Peraanandham um prasannam
      Maaraadhadhundhan vasanam
      Kaeroobeengal um vaaganam
      Um sareeramay en boejanam
    4. Neer paesinaal adhu vedham
      Um vaarthaiyae prasaadham
      Um valla seyalgal pramaadham
      Podhum podhum neer podhum
    5. Kannoeki emmai paarum
      Theemai vilakki emmai kaarum
      Indray em pandhiyil saerum
      Vaarum neer viraivil vaarum
  • Sahaya Thayin Sitthiram Nokku சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

    சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

    அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு

    எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு

    வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு

    குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்

    கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு – 2

    தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை

    சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ – 2

    அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் – 2

    இம்மாநிலத்தில் இவள் போல் – 2

    இரங்கும் தாயும் உளரோ – 2


    Sahaya Thayin Sitthiram Nokku Lyrics in English
    sakaayaththaayin siththiram Nnokku

    apaayam neekkum annaiyin vaakku

    eththunnaik kanivu eththunnaith thelivu

    vaenndidum manathukku varum niraivu

    kuththip pilanthidum eettiyum aanniyum

    kotoorach siluvaiyum kanndu miranndu – 2

    thaththiththaay mael saaynthidum Yesuvai

    sathaa un ninaivil pathiththiduvaay nee – 2

    ammaa entu koova apayam thanthu varuvaal – 2

    immaanilaththil ival pol – 2

    irangum thaayum ularo – 2

  • Sagothirar Orumitthu சகோதரர்க ளொருமித்துச்

    1. சகோதரர்க ளொருமித்துச்
      சஞ்சரிப்பதோ எத்தனை
      மகா நலமும் இன்பமும்
      வாய்த்த செயலாயிருக்குமே
    2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
      அபிஷேகத்தின் தைலந்தான்
      ஊறித் தாடியில் அங்கியில்
      ஒழுகுமானந்தம் போலவே
    3. எர்மோன் மலையின் பேரிலும்
      இசைந்த சீயோன் மலையிலும்
      சேர்மானமாய்ப் பெய்கின்ற
      திவலைப் பனியைப் போலவே
    4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
      சேனை எகோவா தருகிற
      ஆசீர்வாதம் சீவனும்
      அங்கே என்றுமுள்ளதே

    Sagothirar Orumitthu Lyrics in English

    1. sakothararka lorumiththuch
      sanjarippatho eththanai
      makaa nalamum inpamum
      vaayththa seyalaayirukkumae
    2. aaron sirasil vaarththa nal
      apishaekaththin thailanthaan
      oorith thaatiyil angiyil
      olukumaanantham polavae
    3. ermon malaiyin paerilum
      isaintha seeyon malaiyilum
      sermaanamaayp peykinta
      thivalaip paniyaip polavae
    4. thaesam maarkkam iranntirkum
      senai ekovaa tharukira
      aaseervaatham seevanum
      angae entumullathae
  • Sagala Janegale Kaikotti Devanai சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

    சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
    கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே

    1. உன்னதமானவராகிய கர்த்தர்
      எந்நாளும் அதிசயமானவராமே
      மண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம்
      மகிழ்ந்து பாடிடுவோம்
    2. போற்றி போற்றி பாடிடுவோமே
      தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
      ஊற்றிடுவாரே ஆவிதனையே
      சாற்றிடுவோம் துதியே
    3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
      வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
      துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
      துதித்து உயர்த்திடுவோம்
    4. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடே
      கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
      பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
      எழுந்தருளி வருவார்
    5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
      அதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணி
      அழைக்கவே வருவார் அனுதினமும்
      அல்லேலூயா பாடுவோம்

    Sagala Janegale Kaikotti Devanai Lyrics in English

    sakala janangalae kaikotti thaevanai
    kempeera saththaththotae aarppariththiduvomae

    1. unnathamaanavaraakiya karththar
      ennaalum athisayamaanavaraamae
      mannnnengum makaththuvamaana iraajaavaam
      makilnthu paadiduvom
    2. potti potti paadiduvomae
      thaetti nammaik kaaththidum thaevanai
      oottiduvaarae aavithanaiyae
      saattiduvom thuthiyae
    3. thaalvil nammai ninaiththa thaevanai
      vaalnaal muluvathum vaalththiyae thuthippom
      thuthikalin paaththirar thooyaathi thooyonai
      thuthiththu uyarththiduvom
    4. thaevaathi thaevan aarpparippotae
      karththaathi karththan ekkaalaththodum
      pirathaana thoothanutaiya saththaththodum
      eluntharuli varuvaar
    5. anaeka sthalangal angaeyum unndu
      athilontu namakkaay aayaththam pannnni
      alaikkavae varuvaar anuthinamum
      allaelooyaa paaduvom
  • Saerrilirunthu Thuukkinaar சேற்றிலிருந்து தூக்கினார்

    சேற்றிலிருந்து தூக்கினார்
    கண்மலை மேல் நிறுத்தினார்
    பாவமான வாழ்க்கை
    மாற்றித் தந்தாரே
    துன்பமான வாழ்க்கையில்
    இன்பம் தந்தாரே

    அவர் எந்தன் கன்மலை(2)

    அவர் எந்தன் கன்மலை ஆனார்


    Saerrilirunthu Thuukkinaar Lyrics in English
    settilirunthu thookkinaar
    kannmalai mael niruththinaar
    paavamaana vaalkkai
    maattith thanthaarae
    thunpamaana vaalkkaiyil
    inpam thanthaarae

    avar enthan kanmalai(2)

    avar enthan kanmalai aanaar