Category: Tamil Worship Songs Lyrics

  • Ulagam Taratha Anbai உலகம் தராத அன்பை

    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா

    1. வானோர்கள் சேனை பாட
      மேய்ப்பர்கள் தேடி சென்றார்
      மாமன்னர் பொன்னும் தந்தார்
      நான் என் செய்வேன் தேவ பாலா
      என் உள்ளம் உன் சொந்தம் பாலா
    2. கரைகாணா துன்ப வெள்ளம்
      புரண்டோடும் வேளை வந்தீர்
      திருக் கைகள் மீட்டி என்னை
      உம் அருகில் அணைத்து கொண்டீர்
      உம் அருகில் அணைத்து கொண்டீர்

    Ulagam Taratha Anbai Lyrics in English

    ulakam tharaatha anpai
    tharuvaay Yesu paalaa
    palam illai enta nenjil
    arul koorum thaeva paalaa

    1. vaanorkal senai paada
      maeypparkal thaeti sentar
      maamannar ponnum thanthaar
      naan en seyvaen thaeva paalaa
      en ullam un sontham paalaa
    2. karaikaannaa thunpa vellam
      puranntoodum vaelai vantheer
      thiruk kaikal meetti ennai
      um arukil annaiththu konnteer
      um arukil annaiththu konnteer
  • Ulagam Maari Pogalaam உலகம் மாறி போகலாம்

    உலகம் மாறி போகலாம்
    நம்பினோர் மாறி போகலாம்
    உம் அன்பு மாறாதே

    தாயின் அன்பும் மாறலாம்
    தந்தையின் அன்பும் மாறலாம்
    உம் அன்பு மாறாதே

    இயேசுவே இயேசுவே
    உம் அன்பு மாறாதே
    இயேசுவே இயேசுவே
    உம் அன்பு போதுமே

    தோல்விகள் என்னை சூழலாம்
    கஷ்டங்கள் என்னை நெருக்கலாம்
    உம் அன்பு தாங்குமே
    வேதனை வந்து சேரலாம்
    சோதனை வந்து சேரலாம்
    உம் அன்பு தாங்குமே

    உற்றார் என்னை வெறுக்கலாம்
    நன்பனும் என்னை வெறுக்கலாம்
    உம் அன்பு போதுமே
    பிள்ளையின் அன்பும் மாறலாம்
    நேசித்தோர் அன்பும் மாறலாம்
    உம் அன்பு மாறாதே


    Ulagam Maari Pogalaam Lyrics in English
    ulakam maari pokalaam
    nampinor maari pokalaam
    um anpu maaraathae

    thaayin anpum maaralaam
    thanthaiyin anpum maaralaam
    um anpu maaraathae

    Yesuvae Yesuvae
    um anpu maaraathae
    Yesuvae Yesuvae
    um anpu pothumae

    tholvikal ennai soolalaam
    kashdangal ennai nerukkalaam
    um anpu thaangumae
    vaethanai vanthu seralaam
    sothanai vanthu seralaam
    um anpu thaangumae

    uttaாr ennai verukkalaam
    nanpanum ennai verukkalaam
    um anpu pothumae
    pillaiyin anpum maaralaam
    naesiththor anpum maaralaam
    um anpu maaraathae

  • Ulagai Ratchippavarae Unnatha உலகை இரட்சிப்பவரே உன்னத

    உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
    உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

    1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
      பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
      வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
      உமக்கு கடினமில்லை
      மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
      உமக்கு நிகருமில்லையே
      உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
      அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே
    2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
      ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
      கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
      அன்பினை அறிவிக்கத்தான்
      அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
      பேரன்பை நிரூபிக்கத்தானே
      உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
      எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

    Ulagai Ratchippavarae Unnatha Lyrics in English
    ulakai iratchippavarae unnatha theyvam neerae
    uyarntha ataikkalamae neer uyirin uraividamae

    1. kaalangal thodangidum mun karththaraay irunthavarae
      poomiyai sulalach solli kattalai koduththavarae
      vaanaththai virippathum ishdampola matippathum
      umakku katinamillai
      minnalai kaikalukkul mooti vaiththu nadakkireer
      umakku nikarumillaiyae
      ummidam anumathi kaettae anuvum asaikintathae
      anndasaraasaram yaavum umakkul adangiduthae
    2. engalai kiristhuvukkullae therinthukonndavarum neer
      ratchippin thittangalellaam munnarae arinthiruntheer
      kiristhuvai engalukkaay saapamaaka maattiyathu
      anpinai arivikkaththaan
      antadam vettipera parisuththa aavi unndu
      paeranpai niroopikkaththaanae
      umathu makimaikkuththaanae engalai pataiththuvittir
      engalai makimaiyil serkka anpudan alaiththuvittir
  • Ulagai Kalakkum உலகைக் கலக்கும் உத்தம சீடர்

    உலகைக் கலக்கும் உத்தம சீடர்
    நம்மில் யாரு? இங்கே யாரு?
    உயிரை கொடுத்தும்
    உண்மையைக் காக்கும்
    உத்தமசீலர் நம்மில் யாரு?
    தலைநகர் முதலாய்
    தொலைவிடம் எங்கும்
    இனமொழி நிறங்கள் வேலி கடந்தும்
    எல்லைகள்எங்கும்இயேசுவைச்சொல்லி
    உள்ளங்கள்தோறும் விடுதலை
    முழங்கி…

    1. மலிவுச் சுகங்கள் தேடாமல்
      அடிமைத் தளைகளை
      முறித்தவர்கள் கிரயம்
      செலுத்த அஞ்சாமல்
      துணிவுடன் சிலுவை
      சுமப்பவர்கள்-2 நெஞ்சில்
      வேதம் ஆழம் பதித்து
      ஆவியின் நிறைவை நித்தமும்
      காத்து சபைகள் மலர்ச்சி
      காணும் ஆசையால்
      பொறுப்புடன் ஓடி
      உழைப்பவர்கள்-2
    2. இயேசுவின் அன்பால்
      தூண்டப்பட்டு எல்லை
      எங்கிலும் செல்பவர்கள்
      உயிர்த்தெழுந்தவர் பெலத்தோடே
      மனங்களைக் கொள்ளை
      கொள்பவர்கள் – 2
      ஜாதி ஜனங்கள் இயேசுவின் அன்பால்
      கூட்டிச் சேர்ப்பதே சேவை நோக்கமாய்
      முடிவில்லாத விண் தொழுகைக்காகவே
      சீடரின் திரளணி சேர்ப்பவர்கள் – 2
    3. தேசிய எல்லைக்கு அப்பாலும்
      நற்செய்தி சுமந்து செல்பவர்கள்
      சிதறுண்ட இந்தியர் விடுதலைக்காய்
      தீவிரத்தோடு உழைப்பவர்கள் – 2
      தேவ பெலனுடன் தியாகம் புரிந்தே
      நாடுகள் தோறும் சபைகள் பெருகவே
      சுடர் விடும் ஜோதி நட்சத்திரங்களாய்

    தேவனுக்காக ஜொலிப்பவர்கள் – 2


    Ulagai Kalakkum Lyrics in English
    ulakaik kalakkum uththama seedar
    nammil yaaru? ingae yaaru?
    uyirai koduththum
    unnmaiyaik kaakkum
    uththamaseelar nammil yaaru?
    thalainakar muthalaay
    tholaividam engum
    inamoli nirangal vaeli kadanthum
    ellaikalengumYesuvaichchaொlli
    ullangalthorum viduthalai
    mulangi…

    1. malivuch sukangal thaedaamal
      atimaith thalaikalai
      muriththavarkal kirayam
      seluththa anjaamal
      thunnivudan siluvai
      sumappavarkal-2 nenjil
      vaetham aalam pathiththu
      aaviyin niraivai niththamum
      kaaththu sapaikal malarchchi
      kaanum aasaiyaal
      poruppudan oti
      ulaippavarkal-2
    2. Yesuvin anpaal
      thoonndappattu ellai
      engilum selpavarkal
      uyirththelunthavar pelaththotae
      manangalaik kollai
      kolpavarkal – 2
      jaathi janangal Yesuvin anpaal
      koottich serppathae sevai Nnokkamaay
      mutivillaatha vinn tholukaikkaakavae
      seedarin thiralanni serppavarkal – 2
    3. thaesiya ellaikku appaalum
      narseythi sumanthu selpavarkal
      sitharunnda inthiyar viduthalaikkaay
      theeviraththodu ulaippavarkal – 2
      thaeva pelanudan thiyaakam purinthae
      naadukal thorum sapaikal perukavae
      sudar vidum jothi natchaththirangalaay
      thaevanukkaaka jolippavarkal – 2
  • Ulaga Gana Magimai Yellam உலக கன மகிமை எல்லாம்

    உலக கன மகிமை எல்லாம்
    துதி கன மகிமை எல்லாம்
    இயேசு உமக்கே தானே!
    என்றென்றும் துதித்திடுவேன்-2
    நீர் நல்லவர்
    நீர் வல்லவர்
    நீர் மகத்துவமானவர்-2
    இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை

    1. உம் கண்களின் வெளிச்சம்
      சூரிய ஒளியைப் போல்
      என்றென்றும் ஜொலித்திடுதே
      நீர் நல்லவர் – இயேசு ராஜா
    2. உம் பாதங்கள் வெண்கலம்
      உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
      எங்கெங்கும் தொனித்திடுதே
      நீர் நல்லவர் – இயேசு ராஜா

    Ulaga Gana Magimai Yellam Lyrics in English
    ulaka kana makimai ellaam
    thuthi kana makimai ellaam
    Yesu umakkae thaanae!
    ententum thuthiththiduvaen-2
    neer nallavar
    neer vallavar
    neer makaththuvamaanavar-2
    Yesu raajaa! makimai umakkae! – thuthi kana makimai

    1. um kannkalin velichcham
      sooriya oliyaip pol
      ententum joliththiduthae
      neer nallavar – Yesu raajaa
    2. um paathangal vennkalam
      unthan kural peruvellampol
      engaெngum thoniththiduthae
      neer nallavar – Yesu raajaa
  • Uirththeyzhunthaarey உயிர்த்தெழுந்தாரே

    உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
    ஜெயித்த தெழுந்தாரே
    உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
    சொந்த மானாரே

    கல்லறை திறந்திடவே
    கடும் சேவகர் பயந்திடவே
    வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
    வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே

    1.மரித்தவர் மத்தியிலே
    ஜீவ தேவனைத் தேடுவாரோ?
    நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
    நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே

    2.எம்மா ஊர் சீஷர்களின்
    எல்லா மன இருள் நீக்கினாரே
    எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
    எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே

    3.மரணமுன் கூர் எங்கே?
    பாதாள முன் ஜெயங்மெங்கே
    சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
    சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே

    4.ஆவியால் இன்றும் என்றும்
    ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
    ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரே
    அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

    5.பரிசுத்த மாகுதலை
    பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
    எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
    எழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே


    Uirththeyzhunthaarey Lyrics in English
    uyirththelunthaarae allaelooyaa
    jeyiththa thelunthaarae
    uyirudan eluntha meetpar iyaesen
    sontha maanaarae

    kallarai thiranthidavae
    kadum sevakar payanthidavae
    vallavar Yesu uyirththelunthaarae
    valla pithaavin seyalithuvae – uyirththelunthaarae

    1.mariththavar maththiyilae
    jeeva thaevanaith thaeduvaaro?
    neethiyin athipathi uyirththelunthaarae
    niththiya nampikkai perukiduthae – uyirththelunthaarae

    2.emmaa oor seesharkalin
    ellaa mana irul neekkinaarae
    emmanak kalakkangal neekkinathaalae
    ellaiyillaap paramaananthamae – uyirththelunthaarae

    3.maranamun koor engae?
    paathaala mun jeyangmengae
    saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar
    sapaiyorae thuthi saattiduvom – uyirththelunthaarae

    4.aaviyaal intum entum
    aa! emmaiyum uyirppikkavae
    aaviyin achchaாram emakkaliththaarae – uyirththelunthaarae
    allaelooyaa thuthi saattiduvom

    5.parisuththa maakuthalai
    payaththodentum kaaththuk kolvom
    ekkaalam thonikkaiyil maruroopamaaka
    elumpuvomae makimaiyilae – uyirththelunthaarae

  • Uganda Kanikkai உகந்த காணிக்கையாய்

    உகந்த காணிக்கையாய்
    ஒப்புக் கொடுத்தேனைய்யா
    சுகந்த வாசனையாய்
    முகர்ந்து மகிழுமைய்யா

    தகப்பனே உம் பீடத்தில்
    தகனப்பலியானேன்
    அக்கினி இறக்கிவிடும்
    முற்றிலும் எரித்துவிடும்

    வேண்டாத பலவீனங்கள்
    ஆண்டவா முன் வைக்கின்றேன்
    மீண்டும் தலை தூக்காமல்
    மாண்டு மடியட்டுமே

    கண்களை தூய்மையாக்கும்
    கர்த்தா உமைப் பார்க்கணும்
    காதுகள் திறந்தருளும்
    கர்த்தர் உம் குரல் கேட்கணும்

    அப்பா உம் சமுகத்தில்
    ஆர்வமாய் வந்தேனைய்யா
    தப்பாமல் வனைந்து கொள்ளும்
    உப்பாக பயன்படுத்தும்


    Uganda kanikkai Lyrics in English
    ukantha kaannikkaiyaay
    oppuk koduththaenaiyyaa
    sukantha vaasanaiyaay
    mukarnthu makilumaiyyaa

    thakappanae um peedaththil
    thakanappaliyaanaen
    akkini irakkividum
    muttilum eriththuvidum

    vaenndaatha palaveenangal
    aanndavaa mun vaikkinten
    meenndum thalai thookkaamal
    maanndu matiyattumae

    kannkalai thooymaiyaakkum
    karththaa umaip paarkkanum
    kaathukal thirantharulum
    karththar um kural kaetkanum

    appaa um samukaththil
    aarvamaay vanthaenaiyyaa
    thappaamal vanainthu kollum
    uppaaka payanpaduththum

  • Udharith Thallu Thooki உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

    உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
    அழுத்தும் சுமைகளை (தினம்)
    பற்றும் பாரங்களை – உன்னை

    பொறுமையுடன் நீ ஒடு
    நேசரின் மேல் கண் வைத்து ஓடு

    மேகம் போன்ற திரள் கூட்டம்
    பரிசு பெற்று நிற்கின்றனர்
    முகம் மலர்ந்து கை அசைத்து
    வா வா வா என்கின்றனர்

    அவமானத்தை எண்ணாமல்
    சுமந்தாரே சிலுவைதனை
    அமர்ந்து விட்டார் அரியணையில்
    அதிபதியாய் அரசனாய்

    தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
    தாங்கிக் கொண்ட இரட்சகரை
    சிந்தையில் நாம் நிறுத்தினால்
    சோர்ந்து நாம் போவதில்லை


    Udharith thallu thooki Lyrics in English
    utharith thallu thookki erinthidu
    aluththum sumaikalai (thinam)
    pattum paarangalai – unnai

    porumaiyudan nee odu
    naesarin mael kann vaiththu odu

    maekam ponta thiral koottam
    parisu pettu nirkintanar
    mukam malarnthu kai asaiththu
    vaa vaa vaa enkintanar

    avamaanaththai ennnnaamal
    sumanthaarae siluvaithanai
    amarnthu vittar ariyannaiyil
    athipathiyaay arasanaay

    thamakku vantha ethirppellaam
    thaangik konnda iratchakarai
    sinthaiyil naam niruththinaal
    sornthu naam povathillai

  • Udavi Varum உதவி வரும்

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
    வானமும் வையமும் படைத்தவரை
    நான் பார்க்கின்றேன்

    கால்கள் தள்ளாட விட மாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ரவேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார்

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும் இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
    விலக்கி என்னைக் காத்திடுவார்
    அவர் எனது ஆத்துமாவை
    அனுதினம் காத்திடுவார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும் எப்போதும்
    எந்நாளும் காக்கின்றார்


    Udavi Varum Lyrics in English
    uthavi varum kanmalai Nnokkip paarkkinten
    vaanamum vaiyamum pataiththavarai
    naan paarkkinten

    kaalkal thallaada vida maattar
    kaakkum thaevan uranga maattar
    isravaelaik kaakkiravar
    ennaalum thoonga maattar

    karththar ennaik kaakkintar
    enathu nilalaay irukkintar
    pakalinilum iravinilum
    paathukaakkintar

    karththar ellaath theengirkum
    vilakki ennaik kaaththiduvaar
    avar enathu aaththumaavai
    anuthinam kaaththiduvaar

    pokum pothum kaakkintar
    thirumpum pothum kaakkintar
    ippothum eppothum
    ennaalum kaakkintar

  • Udalai Kodu Ullathai Kodu உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்

    உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
    உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
    இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
    இதிலே தான் மகிமை அடைகிறார்

    1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
      உன்னை தேவன் உயர்த்துவாரு
      பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
      கடனில்லாமல் நடத்துவாரு
    2. நன்றிப்பாடல் தினமும் பாடு
      நல்ல தேவன் வருவார் உன்னோடு
      என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
      தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
    3. தேசத்திற்காக தினம் மன்றாடு
      பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
      ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
      அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
    4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
      விசுவாசி என்றும் பதறான் பதறான்
      அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
      செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
    5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
      வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
      சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
      இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

    Udalai Kodu Ullathai Kodu Lyrics in English
    udalaikkodu ullaththaik kodu ursaakamaay
    unnaik kodu oppukkodu santhoshamaay
    ithilae thaevan piriyamaay irukkiraar
    ithilae thaan makimai ataikiraar

    1. oru manninaeram koduththuppaaru
      unnai thaevan uyarththuvaaru
      paththil oru pangu koduththuppaaru
      kadanillaamal nadaththuvaaru
    2. nantippaadal thinamum paadu
      nalla thaevan varuvaar unnodu
      enna nadanthaalum nanti kooridu
      theemaiyai nanmaiyaal thinamumventidu
    3. thaesaththirkaaka thinam mantadu
      pirarukkaaka piraarththanai seythidu
      aalum thalaivarkalai jepath;thil ninaiththidu
      amaithi pongidum vanmurai neengidum
    4. visuvaasam thaanae ulakaththai jeyikkum
      visuvaasi entum patharaan patharaan
      arikkai seythiduvom eriko pitiththiduvom
      sengadal vilakidum yorthaan pirinthidum
    5. naadengum sentidu narseythi sollidu
      veedukal thorum viduthalai kooridu
      sapaikalai nirappidu saatchikal eluppidu
      iratchakar varukaikku aayaththamaakkidu