Category: Tamil Worship Songs Lyrics

  • Nee Malaimel Ulla Pattanam நீ மலைமேல் உள்ள பட்டணம்

    நீ மலைமேல் உள்ள பட்டணம்
    மறைந்து வாழாதே
    நீ மறைந்திருக்கும் காலமல்ல
    எழும்பிப் பிரகாசி – 2
    நீ மலைமேல் உள்ள பட்டணம்
    மறைந்து வாழாதே
    நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழுந்து ஒளி வீசு – 2

    1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
      அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
      கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
      சாட்சியாய் நீ வாழ்வாய்
      நீ மலைமேல் உள்ள பட்டணம்
      மறைந்து வாழாதே
      நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2

    1. அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
      திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
      அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
      தேவ ஊழியம் செய்வாய்
      நீ மலைமேல் உள்ள பட்டணம்
      மறைந்து வாழாதே
      நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2

    1. இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
      பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
      பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
      திறவுகோல் உனக்களித்தார்
      நீ மலைமேல் உள்ள பட்டணம்
      மறைந்து வாழாதே
      நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழும்பிப் பிரகாசி – 2
    நீ மலைமேல் உள்ள பட்டணம்
    மறைந்து வாழாதே
    நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழுந்து ஒளி வீசு – 2


    Nee Malaimel Ulla Pattanam Lyrics in English

    nee malaimael ulla pattanam
    marainthu vaalaathae
    nee marainthirukkum kaalamalla
    elumpip pirakaasi – 2
    nee malaimael ulla pattanam
    marainthu vaalaathae
    nee marainthirukkum kaalamalla

    elunthu oli veesu – 2

    1. ulakin oliyaay vaala thaevan unnai alaiththaar
      avarkkaay saatchiyaay vaala thaevan unnai alaiththaar
      karththarae thaevan entu jaathikal arinthida
      saatchiyaay nee vaalvaay
      nee malaimael ulla pattanam
      marainthu vaalaathae
      nee marainthirukkum kaalamalla

    elumpip pirakaasi (elunthu oli veesu) – 2

    1. alikinta janangalai meetka thaevan unnai alaiththaar
      thirappin vaasalil nirka thaevan unnai alaiththaar
      aruvatai mikuthi vaelaiyaal kuraivu
      thaeva ooliyam seyvaay
      nee malaimael ulla pattanam
      marainthu vaalaathae
      nee marainthirukkum kaalamalla

    elumpip pirakaasi (elunthu oli veesu) – 2

    1. irulin athikaaram utaikka vallamai unakkaliththaar
      poomiyil akkiniyai irakka varangalai unakkaliththaar
      paathaalaththai verumaiyaakki paralokaththai nirappa
      thiravukol unakkaliththaar
      nee malaimael ulla pattanam
      marainthu vaalaathae
      nee marainthirukkum kaalamalla

    elumpip pirakaasi – 2
    nee malaimael ulla pattanam
    marainthu vaalaathae
    nee marainthirukkum kaalamalla

    elunthu oli veesu – 2

  • Nee Illatha Ullam Oor Palaivanam நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்

    நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்

    எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2)

    இறைவா இறைவா இறைவா இறைவா

    மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்

    ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்

    விடிவில்லா இரவாகினேன் (2)

    உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ

    வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) –இறைவா

    கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்

    தவிக்கின்றேன் உனைத் தேடியே

    போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்

    அழுகின்றேன் துணை நாடியே (2)

    எதனாலும் நிறையாத வெறுமையிது – உன்

    அருளின்றி துயிலாத இதயம் இது (2) –இறைவா


    Nee Illatha Ullam Oor Palaivanam Lyrics in English

    nee illaatha ullam or paalaivanam

    ennaalum unakkaaka aengum manam (2)

    iraivaa iraivaa iraivaa iraivaa

    malaiyaaka vanthum manam meethu nintum nanaiyaatha nilamaakinaen

    oliyaaka nirainthum vaalvodu innainthum

    vitivillaa iravaakinaen (2)

    uyiroottum arulmaekam enaich soolumo

    vaalvaettum olivellam enai aalumo (2) –iraivaa

    kannnneeril moolki poraadum nilaipol

    thavikkinten unaith thaetiyae

    por vantha kaalam thutikkinta puvipol

    alukinten thunnai naatiyae (2)

    ethanaalum niraiyaatha verumaiyithu – un

    arulinti thuyilaatha ithayam ithu (2) –iraivaa

  • Nee Enthan Paarai En நீ எந்தன் பாறை என்

    நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
    நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
    அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

    ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ
    உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2
    தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2
    ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது
    போனாலும் உனில் தஞ்சம் உண்டு
    இயேசுவே இயேசுவே – 2

    இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
    முடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2
    தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2
    என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்
    நல்வாழ்வை கண்முன்னே கண்டு
    இயேசுவே இயேசுவே -2


    Nee Enthan Paarai En Lyrics in English

    nee enthan paarai en arannaana Yesuvae
    nee enthan ullaththin annaiyaatha theepamae
    annaiyaatha theepamae Yesuvae Yesuvae

    olikonndu thaetinaal irul nillumo
    unthunnaiyil vaalkkaiyil thuyarvellumo-2
    thataikoti varalaam ullam thaviththoti vidalaam -2
    aanaalum un vaarththai unndu – ethu
    ponaalum unil thanjam unndu
    Yesuvae Yesuvae – 2

    iravukkum ellai or vitiyal anto
    mutivaaka velvathum nanmaiyanto-2
    thalaraathu vaalvom arul annaiyaathu kaappom – 2
    ententum un aasi konndu – varum
    nalvaalvai kannmunnae kanndu
    Yesuvae Yesuvae -2

  • Natha Um Thirukarathil நாதா உம்திருக் கரத்தில்

    நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
    நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

    1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
      அனுதினம் ஓடி வந்தேன்
      ஆனந்தமே ஆனந்தமே – 2
    2. எங்கே நான் போக உம் சித்தமோ
      அங்கே நான் சென்றிடுவேன்
      உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
    3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
      பரவசமாகிடுவேன்
      எக்காளம் நான் ஊதிடுவேன்
    4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
      துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
      கிருபை ஒன்றே போதுமைய்யா
    5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
      உம் நாமம் உயர்த்திடுவேன்
      சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

    Natha Um Thirukarathil Lyrics in English

    naathaa umthiruk karaththil isaikkaruvi naan
    naalthorum payanpaduththum unthan siththam pol

    1. aiyaa um paatham en thanjamae
      anuthinam oti vanthaen
      aananthamae aananthamae – 2
    2. engae naan poka um siththamo
      angae naan sentiduvaen
      um naamaththil jeyam eduppaen
    3. puthuppaadal thanthu aaseervathiyum
      paravasamaakiduvaen
      ekkaalam naan oothiduvaen
    4. ninthaikal nerukkam thunpangalil
      thuthi paati makilnthiruppaen
      kirupai onte pothumaiyyaa
    5. oorellaam selvaen paraisaattuvaen
      um naamam uyarththiduvaen
      saaththaan kottaை thakarththiduvaen
  • Natha Natha Intha Jeeviyam நாதா நாதா நாதா

    நாதா.. நாதா.. நாதா…
    இந்த ஜீவியமே வெறும் மாயையோ
    இது சஞ்சலம் நிறைந்ததோ

    காரிருள் சூழும் நேரமதில்- என்
    கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
    மாராவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
    ஆதரவே என் தேற்றரவாளனே
    உம் கிருபையன்றி யாதொன்றுமியலேன்
    வனாந்திரப் பாதையில் ஆருயிர் நாதா

    நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
    வாக்குத்தத்தம் தந்து நடத்திடும் நாதன்
    என் கன்மைலையே என் அடைக்கலமே
    தகர்ந்த என் ஜீவியம் வனைந்த என் பரனே
    நீர் அல்லால் ஆசை இப்பூவினில் இல்லை
    உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா


    Natha natha intha jeeviyam Lyrics in English

    naathaa.. naathaa.. naathaa…
    intha jeeviyamae verum maayaiyo
    ithu sanjalam nirainthatho

    kaarirul soolum naeramathil- en
    karam pitiththennai nadaththiya naathan
    maaraavin mathuramaam irulil velichchamaam
    aatharavae en thaettaravaalanae
    um kirupaiyanti yaathontumiyalaen
    vanaanthirap paathaiyil aaruyir naathaa

    ninthaikal palikal perukidum pothu
    vaakkuththaththam thanthu nadaththidum naathan
    en kanmailaiyae en ataikkalamae
    thakarntha en jeeviyam vanaintha en paranae
    neer allaal aasai ippoovinil illai
    ummil naan saaruvaen ententum naathaa

  • Natchaththiram Natchaththiram Natchaththiram நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்

    நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
    ஒழி வீசும் நட்சத்திரம் } 2
    வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்
    விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் – நட்சத்திரம்

    1. இயேசு பாலனை கண்டிடவே
      சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2
      அது ஜொலித்திடும் நட்சத்திரம் — நட்சத்திரம்
    2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்
      மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2
      அது மின்னிடும் நட்சத்திரம் — நட்சத்திரம்
    3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம்
      மெய் வழி காண உதவிடுவோம் } 2
      நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய் – நட்சத்திரம்

    ஒழி வீசும் நட்சத்திரம் (4)


    Natchaththiram Natchaththiram Natchaththiram Lyrics in English

    natchaththiram natchaththiram natchaththiram
    oli veesum natchaththiram } 2
    vali kaattum natchaththiram irul neekkum natchaththiram
    vitivelli natchaththiram oru ataiyaala natchaththiram – natchaththiram

    1. Yesu paalanai kanntidavae
      saasthrikalukku vali kaattiyathae } 2
      athu joliththidum natchaththiram — natchaththiram
    2. irulil irukkum maantharkkellaam
      mey oli Yesuvai kanntidavae } 2
      athu minnidum natchaththiram — natchaththiram
    3. theyva anpinaik kooriduvom
      mey vali kaana uthaviduvom } 2
      naam pirakaasippom natchaththiramaay – natchaththiram

    oli veesum natchaththiram (4)

  • Natchathiram Vanthathu நட்சத்திரம் வந்தது

    நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
    உலகில் வெளிச்சம் தந்தது
    வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
    வாழ்க்கையிலே ஒளி தந்தது

    இம்மானுவேல் தேவனை
    மண்ணில் வந்த வேந்தனை
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
    தேவனை மண்ணில் வந்த ராஜனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

    உயிரை தந்த தேவனே
    உயிரோடு கலந்த தேவனே

    அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
    இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்


    Natchathiram vanthathu Lyrics in English

    natchaththiram vanthathu vaanil uthiththelunthathu
    ulakil velichcham thanthathu
    vaalkkaiyilae vanthathu valikaatta vanthathu
    vaalkkaiyilae oli thanthathu

    immaanuvael thaevanai
    mannnnil vantha vaenthanai
    makilvudan paadiduvaen naan thaevaathi
    thaevanai mannnnil vantha raajanai
    vaalnaalellaam paadiduvaen naan

    uyirai thantha thaevanae
    uyirodu kalantha thaevanae

    anpaana thaevanae aaruyir nannpanae
    makilvudan paadiduvaen naan
    ivvulaka raajanai eekaiyin mannanai
    vaalnaalellaam paadiduvaen naan

  • Natanthathellaam Nanmaikkae நடந்ததெல்லாம் நன்மைக்கே

    நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
    நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
    நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
    நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி

    1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
      துன்பங்களை இன்பமாக மாற்றினீர் – நன்றி
    2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
      சிந்தைதனை மாற்றினீர் நன்றி
    3. உள்ளான மனிதனை புதிதாக்கி
      உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
    4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
      பெலவீனத்திலே பெலன் என்றீர்
    5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
      தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி
    6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
      பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
    7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
      மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

    Natanthathellaam Nanmaikkae Lyrics in English

    nadanthathellaam nanmaikkae nanmaikkae
    nanti solli makilvaen intaikkae
    nadappathellaam nanmaikkae nanmaikkae
    nanti solli makilvaen intaikkae
    nanti (2) ellaam nanmaikkae nanti

    1. theemaikalai nanmaiyaaka maattineer
      thunpangalai inpamaaka maattineer – nanti
    2. siluvaithanai anumathiththeer nanti
      sinthaithanai maattineer nanti
    3. ullaana manithanai puthithaakki
      utaiththu urumaatti nadaththukireer
    4. en kirupai unakkup pothum enteer
      pelaveenaththilae pelan enteer
    5. thaangidum pelan thantheer nanti
      thappich sella vali seytheer nanti
    6. visuvaasappudamittir nanti
      ponnaaka vilangach seytheer nanti
    7. kasappukkalai maatti vittir nanti
      mannikkum manam thantheer nanti
  • Natanamaati Sthoeththarippaen நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

    நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
    நாதா நான் உம்மைத் துதிப்பேன்
    கைத்தாள ஓசையுடன்
    கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா

    1. காண்பவரே காப்பவரே
      கருணை உள்ளவரே
      காலமெல்லாம் வழி நடத்தும்
      கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
    2. வல்லவரே நல்லவரே
      கிருபை உள்ளவரே
      வரங்களெல்லாம் தருபவரே
      வாழ்வது உமக்காக – ஐயா
    3. ஆண்டவரே உம்மைப்
      பிரிந்து யாரிடத்தில் போவோம்
      வாழ்வு தரும் வசனமெல்லாம்
      உம்மிடம்தான் உண்டு – ஐயா
    4. அற்புதமே அதிசயமே
      ஆலோசனைக் கர்த்தரே
      அண்டி வந்தோம் ஆறுதலே
      அடைக்கலமானவரே

    Natanamaati Sthoeththarippaen Lyrics in English

    nadanamaati sthoththarippaen
    naathaa naan ummaith thuthippaen
    kaiththaala osaiyudan
    karththaa naan ummaith thuthippaen – allaelooyaa

    1. kaannpavarae kaappavarae
      karunnai ullavarae
      kaalamellaam vali nadaththum
      kanmalaiyae sthoththiram – aiyaa
    2. vallavarae nallavarae
      kirupai ullavarae
      varangalellaam tharupavarae
      vaalvathu umakkaaka – aiyaa
    3. aanndavarae ummaip
      pirinthu yaaridaththil povom
      vaalvu tharum vasanamellaam
      ummidamthaan unndu – aiyaa
    4. arputhamae athisayamae
      aalosanaik karththarae
      annti vanthom aaruthalae
      ataikkalamaanavarae
  • Narpathu Naal Raapagal நாற்பது நாள் ராப் பகல்

    1. நாற்பது நாள் ராப் பகல்
      வனவாசம் பண்ணினீர்;
      நாற்பது நாள் ராப் பகல்
      சோதிக்கப்பட்டும் வென்றீர்.
    2. ஏற்றீர் வெயில் குளிரை
      காட்டு மிருகத் துணை;
      மஞ்சம் உமக்குத் தரை,
      கல் உமக்குப் பஞ்சணை.
    3. உம்மைப்போல நாங்களும்
      லோகத்தை வெறுக்கவும்,
      உபவாசம் பண்ணவும்
      ஜெபிக்கவும் கற்பியும்.
    4. சாத்தான் சீறி எதிர்க்கும்
      போதெம் தேகம் ஆவியை
      சோர்ந்திடாமல் காத்திடும்,
      வென்றீரே நீர் அவனை.
    5. அப்போதெங்கள் ஆவிக்கும்
      மா சமாதானம் உண்டாம்;
      தூதர் கூட்டம் சேவிக்கும்
      பாக்கியவான்கள் ஆகுவோம்.

    Narpathu Naal Raapagal Lyrics in English

    1. naarpathu naal raap pakal
      vanavaasam pannnnineer;
      naarpathu naal raap pakal
      sothikkappattum venteer.
    2. aettaீr veyil kulirai
      kaattu mirukath thunnai;
      manjam umakkuth tharai,
      kal umakkup panjannai.
    3. ummaippola naangalum
      lokaththai verukkavum,
      upavaasam pannnavum
      jepikkavum karpiyum.
    4. saaththaan seeri ethirkkum
      pothem thaekam aaviyai
      sornthidaamal kaaththidum,
      venteerae neer avanai.
    5. appothengal aavikkum
      maa samaathaanam unndaam;
      thoothar koottam sevikkum
      paakkiyavaankal aakuvom.