Category: Tamil Worship Songs Lyrics

  • Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது

    இந்த காலம் பொல்லாதது
    உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
    நீ வாழும் உலகம் தான்
    அது வாடகை வீடு தான்

    1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
      என்று வாக்கு அளித்தவர்
      இன்னும் காத்து வருகிறார்
    2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
      சாத்தான் களத்தினில் போராட
      ஜெய வீரனாய் திகழ வா
    3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
      சத்திய தேவனின் கிருபையோ
      நித்திய ஜீவனை அருளுமே
    4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
      மனம் திரும்பி நீ வாழவே
      மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

    Intha Kaalam Pollathathu Lyrics in English

    intha kaalam pollaathathu
    unnaik karththar alaikkiraar
    nee vaalum ulakam thaan
    athu vaadakai veedu thaan

    1. unnai ratchikka un koodavae irukkiraen
      entu vaakku aliththavar
      innum kaaththu varukiraar
    2. vaalipa naatkalil un thaevanaith thaetivaa
      saaththaan kalaththinil poraada
      jeya veeranaay thikala vaa
    3. paavaththin sampalam erinarakam thaan thinnnamae
      saththiya thaevanin kirupaiyo
      niththiya jeevanai arulumae
    4. kaalamo mutiyuthae thaeva raajjiyam nerunguthae
      manam thirumpi nee vaalavae
      mannan Yesunnai alaikkiraar
  • Intha Arul Kaalathil இந்த அருள் காலத்தில்

    1. இந்த அருள் காலத்தில்
      கர்த்தரே உம் பாதத்தில்
      பணிவோம் முழந்தாளில்
    2. தீர்ப்பு நாள் வருமுன்னே
      எங்கள் பாவம் உணர்ந்தே
      கண்ணீர் சிந்த ஏவுமே
    3. மோட்ச வாசல், இயேசுவே
      பூட்டுமுன் எம் பேரிலே
      தூய ஆவி ஊற்றுமே
    4. உந்தன் ரத்த வேர்வையால்
      செய்த மா மன்றாட்டினால்
      சாகச் சம்மதித்ததால்
    5. சீயோன் நகர்க்காயக் கண்ணீர்
      விட்டதாலும் தேவரீர்
      எங்கள்மேல் இரங்குவீர்
    6. நாங்கள் உம்மைக் காணவே
      அருள் காலம் போமுன்னே
      தஞ்சம் ஈயும் இயேசுவே

    Intha Arul Kaalathil Lyrics in English

    1. intha arul kaalaththil
      karththarae um paathaththil
      pannivom mulanthaalil
    2. theerppu naal varumunnae
      engal paavam unarnthae
      kannnneer sintha aevumae
    3. motcha vaasal, Yesuvae
      poottumun em paerilae
      thooya aavi oottumae
    4. unthan raththa vaervaiyaal
      seytha maa mantattinaal
      saakach sammathiththathaal
    5. seeyon nakarkkaayak kannnneer
      vittathaalum thaevareer
      engalmael iranguveer
    6. naangal ummaik kaanavae
      arul kaalam pomunnae
      thanjam eeyum Yesuvae
  • Inru Muthal Naan Unnai இன்று முதல் நான் உன்னை

    இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
    எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

    1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
      உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
      ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
    2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்
      சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்
      நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
    3. பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே
      நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
      வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
    4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
      வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
      இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
    5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
      பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்
      உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்
    6. வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
      கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
      எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
    7. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
      மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
      பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்
    8. மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும்
      பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு
      கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்
    9. கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து
      பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால்
      வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்
    10. உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்
      மலடு இருப்பதில்லை கருக்கலைப்பு ஆவதில்லை
      ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்

    Inru Muthal Naan Unnai Lyrics in English

    intu muthal naan unnai aaseervathippaen
    ellaiyillaa nanmaikalaal nirappiduvaen

    1. periya inamaakki aaseervathippaen
      unathu peyarai naan uyarththiduvaen
      aaseervaatha vaaykkaalaay nee iruppaay
    2. sellum idamellaam kaavalaay naan iruppaen
      sonnathai seythiduvaen kaividavaemaattaen
      nee vaalum intha thaesam unakku thanthiduvaen
    3. paravi paayakinta aarukal neethaanae
      nathiyoram valarukinta thottamum neethaanae
      vaasanai tharukinta santhanamum neethaanae
    4. paththil oru pangu nee koduththaal
      vaanaththin palakanikal thiranthiduvaen
      idam kollaathamattum nirappiduvaen
    5. enathu saayalaay uruvaakki nadaththukiraen
      paluki perukidungal poomiyellaam nirampidungal
      uyir vaalum anaiththin mael aalukai seythidungal
    6. vaanaththu vinnmeen pola olik koduppaay
      kadarkarai manalai pola perukiduvaay
      ethiriyin vaasalkalai urimai aakkiduvaay
    7. neeranntai valarukinta setiyum neethaanae
      mathil mael aerukinta kotiyum neethaanae
      pakai niraintha ulakaththil anpu karam neetdiduvaay
    8. maaraavin kasantha kannnneer mathuramaakidum
      pannirenndu neerattum aeleemum unakku unndu
      kalvaari nilalathanilae kaalamellaam vaalnthiduvaay
    9. karththarin kuralukku kavanamaay sevikoduththu
      paarvaikku nallathaiyae seythu nee vaalnthuvanthaal
      viyaathi varuvathillai kunamaakkum aanndavar naan
    10. unavaiyum thannnneeraiyum aaseervathippaen
      maladu iruppathillai karukkalaippu aavathillai
      aaviyilum unnmaiyilum aaraathanai seythidungal
  • Inpa Keetham Thunpa இன்ப கீதம் துன்ப

    இன்ப கீதம் துன்ப நேரம்
    ஈந்தீரே என் இயேசுவே
    கொல்கதா பாதை சிலுவை சுமந்தே
    கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

    பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே
    பெரும் கன்மலை நிழலே
    வீசிடும் கொண்டல் நிழலே
    வற்றாத நீரூற்றும் நீரே – இன்ப

    ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
    ஊக்கமுடன் என்னைத் தேடி
    கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
    கண்ணின் மணிபோலக் காத்தீர் – இன்ப

    போராட்டமான போன வாழ்நாளில்
    நீரோட்டம் மோதும் இன்னலில்
    முற்று முடிய வெற்றி அளித்தீர்
    குற்றம் குறை நீக்கி காத்தீர் – இன்ப

    உந்தன் சரீர பெலவீன நேரம்
    எந்தன் கிருபையே போதும்
    என்று உரைத்து என்னை அனைத்து
    எத்தனையோ நன்மை செய்தீர் – இன்ப

    கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
    கர்த்தாவே முன்னோடி நீரே
    உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
    உன்னத வீட்டை அடைவேன் – இன்ப

    அழைத்தவரே உண்மையுள்ளோரே
    அப்படியே ஜெயம் ஈவார்
    இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
    எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் – இன்ப


    Inpa Keetham Thunpa Lyrics in English

    inpa geetham thunpa naeram
    eentheerae en Yesuvae
    kolkathaa paathai siluvai sumanthae
    karththaavae ummanntai vanthaen

    peru vellaththin pukalidam neerae
    perum kanmalai nilalae
    veesidum konndal nilalae
    vattaாtha neeroottum neerae – inpa

    oolaiyidum or paalum nilaththil
    ookkamudan ennaith thaeti
    kanndu unarththi kaithaangi nadaththi
    kannnnin mannipolak kaaththeer – inpa

    poraattamaana pona vaalnaalil
    neerottam mothum innalil
    muttu mutiya vetti aliththeer
    kuttam kurai neekki kaaththeer – inpa

    unthan sareera pelaveena naeram
    enthan kirupaiyae pothum
    entu uraiththu ennai anaiththu
    eththanaiyo nanmai seytheer – inpa

    kalvaarip paathai tholviyillaiyae
    karththaavae munnoti neerae
    umpin nadanthae ummaith thodarnthae
    unnatha veettaை ataivaen – inpa

    alaiththavarae unnmaiyullorae
    appatiyae jeyam eevaar
    Yesuvae ummaal jeyam arulum
    engal pithaavukku sthoththiram – inpa

  • Innum Naam Azhiyala இன்னும் நான் அழியல

    இன்னும் நான் அழியல
    இன்னும் தோற்று போகல
    ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
    போராட்டங்கள் முடியல
    பாடுகளும் தீரல
    ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

    கிருப கிருப கிருப கிருப – 4
    நான் இல்ல என் பெலன் இல்ல
    என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

    1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
      ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
      நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
      ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
    2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
      வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
      பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
      பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

    Innum Naam Azhiyala Lyrics in English

    innum naan aliyala
    innum thottu pokala
    aanaalum vaalkiraenae aen aen aen
    poraattangal mutiyala
    paadukalum theerala
    aanaalum nirkiraenae aen aen aen } – 2

    kirupa kirupa kirupa kirupa – 4
    naan illa en pelan illa
    en thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa

    1. patikkala uyarala pattathaari aakala
      aanaalum vaalkiraenae aen aen aen
      nirkiraen nirmoolam aakaamalae irukkiraen
      aanaalum nirkiraenae aen aen aen – kirupa
    2. arputhangal nadakkuthu athisayangal nadakkuthu
      viyaathi ellaam maarinathu aen aen aen – 2
      paavamellaam marainthathu saapamellaam utainthathu
      parisuththamaay maarinathu aen aen aen – kirupa
  • Innor Aandu Mutrumaai இன்னோர் ஆண்டு முற்றுமாய்

    1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்
      எங்களை மகா அன்பாய்
      காத்து வந்தீர் இயேசுவே;
      உம்மைத் துதி செய்வோமே.
    2. நீரே இந்த ஆண்டிலும்
      எங்கள் துணையாயிரும்;
      எந்தத் துன்பம் தாழ்விலும்
      கூடத் தங்கியருளும்.
    3. யாரேனும் இவ்வாண்டினில்
      சாவின் பள்ளத்தாக்கினில்
      செல்லின், உந்தன் கோலாலே
      தேற்றும், நல்ல மேய்ப்பரே.
    4. நாங்கள் உந்தன் தாசராய்
      தூய்மை பக்தி உள்ளோராய்
      சாமட்டும் நிலைக்க நீர்
      காத்து கிரீடம் ஈகுவீர்.
    5. ஏசு கர்த்தராம் நீரே
      மன்னர் மன்னன் எனவே
      என்றும் உம்மைப் போற்றுவோம்
      உந்தன் வீட்டில் வாழுவோம்.

    Innor Aandu Mutrumaai Lyrics in English

    1. innor aanndu muttumaay
      engalai makaa anpaay
      kaaththu vantheer Yesuvae;
      ummaith thuthi seyvomae.
    2. neerae intha aanntilum
      engal thunnaiyaayirum;
      enthath thunpam thaalvilum
      koodath thangiyarulum.
    3. yaaraenum ivvaanntinil
      saavin pallaththaakkinil
      sellin, unthan kolaalae
      thaettum, nalla maeypparae.
    4. naangal unthan thaasaraay
      thooymai pakthi ulloraay
      saamattum nilaikka neer
      kaaththu kireedam eekuveer.
    5. aesu karththaraam neerae
      mannar mannan enavae
      entum ummaip pottuvom
      unthan veettil vaaluvom.
  • Innamum naam இன்னமும் நாம்

    இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
    என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே

    தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
    தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு.

    தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
    தாங்கித் தயவோடு காப்பாரே!
    இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
    இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து

    ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல்
    சீருடனே கர்த்தர் காப்பாரே!
    பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
    பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து

    ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
    ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
    நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
    நீண்ட காலமாக உன்னை நேசித்துப் பரிபாலித்து


    Innamum naam Lyrics in English

    innamum naam yaesu paathaththil santhikkum varai
    entum karththarunnaik kaappaarae

    thannutaiya kaavalunmael thappaamal vaiththuththarkaaththuth
    thannirukaraththaal unnaich thaangiyae kaaththukkonndu.

    thanniru sirakukalin geel unnai maraiththuth
    thaangith thayavodu kaappaarae!
    innamum thirumannaavai entum unakkaliththae
    inpamotae unnaith thaangi ellaath theengukkun tharkaaththu

    jeeviyaththin paaram unnaiyae vathaithidaamal
    seerudanae karththar kaappaarae!
    paava sothanaikal unmael padarnthu pitiththidaamal
    paaliththannaiththae unnaiyae patchamotae paathukaaththu

    aanndavanin anpin kotithaan unmael paranthu
    aada, makiln thaananthangaொlvaay!
    neenndidum aayulaliththu nithamum sukaththaith thanthu
    neennda kaalamaaka unnai naesiththup paripaaliththu

  • Innal radsippu kerra இந்நாள் ரட்சிப்புக் கேற்ற

    இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்
    ஏற்ற நல் நாள் ஏற்ற நல் நாள்

    சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

    சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் -தேவ
    சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்

    வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்
    மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே

    உலகச் சிநேகம் வெகு கேடு அதற்
    குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு

    இன்றுன் இரட்சகரிடம் திரும்பு – அவர்
    இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு

    இனிமேலாகட்டும் என் றெண்ணாதே -பவ
    இச்சைக் குட்பட்டால் திரும்ப ஒண்ணாதே

    கிறிஸ் தேசுவை உற்றுப் பாரு – அவர்
    கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு

    பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் – உனைப்
    பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார்

    மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி – நித்திய
    வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி

    ஏசுபெருமானை நீ நம்பு – அவர்
    என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு


    Innal radsippu kerra Lyrics in English

    innaal ratchippuk kaetta nal naal
    aetta nal naal aetta nal naal

    sonnaar kiristhunakkuk kirupaiyaich sorinthu

    santhoshanthanaich solla vanthaen -thaeva
    samaathaana vaarththaiyaip pelanaakath thanthaen

    vaatith thikaiththup pulampaathae – unthan
    manathil avisuvaasam vaiththuk kalangaathae

    ulakach sinaekam veku kaedu athar
    kudanthaip padaamal jeeva maarkkaththaith thaedu

    intun iratchakaridam thirumpu – avar
    iyattum sampoorana jeevanai virumpu

    inimaelaakattum en raெnnnnaathae -pava
    ichchaைk kutpattal thirumpa onnnnaathae

    kiris thaesuvai uttup paaru – avar
    kirupaiyaaych sinthina raththaththaich seru

    paavangal arach suththikarippaar – unaip
    parisuththa vasthiraththaal alangarippaar

    makimai niraintha kireedanj sooti – niththiya
    vaalvai arulvaar unakkinpang konndaati

    aesuperumaanai nee nampu – avar
    ententaikkum unak kiratchippin kompu

  • Innaalvaraikkum Karththarae இந்நாள்வரைக்கும் கர்த்தரே

    1. இந்நாள்வரைக்கும் கர்த்தரே
      என்னைத் தற்காத்து வந்தீரே
      உமக்குத் துதி ஸ்தோத்திரம்
      செய்கின்றதே என் ஆத்துமம்
    2. ராஜாக்களுக்கு ராஜாவே
      உமது செட்டைகளிலே
      என்னை அணைத்துச் சேர்த்திடும்
      இரக்கமாகக் காத்திடும்.
    3. கர்த்தாவே, இயேசு மூலமாய்
      உம்மோடு சமாதானமாய்
      அமர்ந்து தூங்கும்படிக்கும்,
      நான் செய்த பாவம் மன்னியும்.
    4. நான் புதுப் பலத்துடனே
      எழுந்து உம்மைப் போற்றவே,
      அயர்ந்த துயில் அருளும்;
      என் ஆவியை நீர் தேற்றிடும்.
    5. நான் தூக்கமற்றிருக்கையில்,
      அசுத்த எண்ணம் மனதில்
      அகற்றி, திவ்விய சிந்தையே
      எழுப்பிவிடும், கர்த்தரே.
    6. பிதாவே, என்றும் எனது
      அடைக்கலம் நீர் உமது
      முகத்தைக் காணும் காட்சியே
      நித்தியானந்த முத்தியே
    7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
      பிதா குமாரன் ஆவியை
      துதியும், வான சேனையே,
      துதியும், மாந்தர் கூட்டமே.

    Innaalvaraikkum Karththarae Lyrics in English

    1. innaalvaraikkum karththarae
      ennaith tharkaaththu vantheerae
      umakkuth thuthi sthoththiram
      seykintathae en aaththumam
    2. raajaakkalukku raajaavae
      umathu settaைkalilae
      ennai annaiththuch serththidum
      irakkamaakak kaaththidum.
    3. karththaavae, Yesu moolamaay
      ummodu samaathaanamaay
      amarnthu thoongumpatikkum,
      naan seytha paavam manniyum.
    4. naan puthup palaththudanae
      elunthu ummaip pottavae,
      ayarntha thuyil arulum;
      en aaviyai neer thaettidum.
    5. naan thookkamattirukkaiyil,
      asuththa ennnam manathil
      akatti, thivviya sinthaiyae
      eluppividum, karththarae.
    6. pithaavae, entum enathu
      ataikkalam neer umathu
      mukaththaik kaanum kaatchiyae
      niththiyaanantha muththiyae
    7. arulin oottaாm svaamiyai
      pithaa kumaaran aaviyai
      thuthiyum, vaana senaiyae,
      thuthiyum, maanthar koottamae.
  • Innaalil Aesunaathar Uyirththaar இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்

    1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
      இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

    மகிழ் கொண்டாடுவோம்,
    மகிழ் கொண்டாடுவோம்.

    1. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
      புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க
    2. அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
      அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட
    3. பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
      பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
    4. இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ
      எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்

    Innaalil Aesunaathar Uyirththaar Lyrics in English

    1. innaalil aesunaathar uyirththaar, kampeeramaay
      ikal alakai saavum ventathika veeramaay,

    makil konndaaduvom,
    makil konndaaduvom.

    1. porchchaேvakar samaathi soolnthu kaavalirukka,
      pukalaarnthelunthanar, thoothan vanthu kalmootip pirikka
    2. athi kaalaiyil seemonodu yovaanum otida,
      akkallaraiyin raekinar ivar aaynthu thaetida
    3. pari suththanai alivukaana vottir, entu mun
      pakar vaethachchaொrpati paethamattelunthaar thiruchchuthan
    4. ivvannnamaayp paran seyalai ennnni naaduvomloo
      ellaarumae kali koornthinithudan sernthupaaduvom