Blog

  • Maarave Aasaipadugiren மாறவே ஆசைப்படுகிறேன்

    மாறவே ஆசைப்படுகிறேன்
    என்னை மாற்றிவிடும்
    கருணை நேசரே – 2

    1. என் சிந்தை மாறணும்
      என் செயல்கள் மாறணும்
      என் பேச்சு மாறணும்
      என் பெருமை மாறணும்
      – மாறவே ஆசை
    2. என் நடை மாறணும்
      என் உடை மாறணும்
      என் உள்ளம் மாறணும்
      ஐயா உம்மை போலவே
      – மாறவே ஆசை
    3. என் ஜெபம் மாறணும்
      என் துதி மாறணும்
      என் சுயம் சாகணும்
      ஐயா உம்மை போலவே
      – மாறவே ஆசை

    Maarave Aasaipadugiren Lyrics in English

    Maarave Aasaipadugiren
    maaravae aasaippadukiraen
    ennai maattividum
    karunnai naesarae – 2

    1. en sinthai maaranum
      en seyalkal maaranum
      en paechchu maaranum
      en perumai maaranum
    • maaravae aasai
    1. en natai maaranum
      en utai maaranum
      en ullam maaranum
      aiyaa ummai polavae
    • maaravae aasai
    1. en jepam maaranum
      en thuthi maaranum
      en suyam saakanum
      aiyaa ummai polavae
    • maaravae aasai
  • Maaratha naal visuvaasiyea மாறாத நல் விசுவாசம்

    மாறாத நல் விசுவாசம் பரன்
    நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
    அகன்றிடும் மலைகளும்
    அதிசயம் வெளிப்படும்

    விசுவாச வார்த்தையினால்
    இதயம் நிரம்பி அழிந்திடுமே
    அகமதினில் விசுவாசம்
    என்றும் ஜெயம் தாரும் -2

    கிரியை இல்லா விசுவாசம்
    ஏதும் செய்திட உதவாது
    செயல்படுமே விசுவாசம்
    என்றும் ஜெயம் தாரும் -2

    லோகமதின் இன்பங்களை
    விரும்பி மனதில் தொடராமல்
    விசுவாசத்தால் பெலன் அடைவோம்
    நல் தேவன் தாங்குவார் -2


    Maaratha naal visuvaasiyea Lyrics in English

    maaraatha nal visuvaasam paran
    nam Yesu thaevanil vaiththiduvom
    akantidum malaikalum
    athisayam velippadum

    visuvaasa vaarththaiyinaal
    ithayam nirampi alinthidumae
    akamathinil visuvaasam
    entum jeyam thaarum -2

    kiriyai illaa visuvaasam
    aethum seythida uthavaathu
    seyalpadumae visuvaasam
    entum jeyam thaarum -2

    lokamathin inpangalai
    virumpi manathil thodaraamal
    visuvaasaththaal pelan ataivom
    nal thaevan thaanguvaar -2

  • Maaranum Manam Maaranum மாறணும் மனம் மாறணும்

    மாறணும் மனம் மாறணும்
    மனம் இன்றே மாறணும்
    அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
    தடுமாறியே சிறையாகிடும்
    மனம் இன்றே மாறணும்
    அடியோடு மாறணும்
    மனம் மனம் கல்மனம் மாறணும்
    வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
    ஆவியின் அலை புரண்டோடணும்
    சத்திய வசனம் பதிக்கணும்
    கனிந்த இதயம் காணணும்!

    1. சத்திய ஒளிப் பார்வையில்
      தன் நிலை உணரனும்
      பரமனுக்கெதிராய் செய்த குற்றம்
      ஒப்புக்கொள்ளணும் – 2
      திருமகன் சிலுவை பிராயச்சித்தம்
      சொந்தம் கொண்டாடனும்
      பிதா வழங்கும் மன்னிப்பை
      ஆரத் தழுவணும் – அவர்
      அன்புக்குச் சரணாகணும்!
    2. ஆவியின் தின ஊட்டத்திலே
      தனிவேறாய் துலங்கணும்
      ஜெப வசனப் பயிற்சியினால்
      திருவார்ப்பாய் மாறணும் – 2
      பூரண வெற்றிப்பாட்டாக
      வாழ்வைத் தொடரணும்
      கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்
      நித்தம் பின் செல்லணும்
      புகழ் ஆராதனை செய்யணும்!
    3. தேவ அன்பினில் அசைவின்றி
      நிலை உறுதி காக்கணும்
      சகமனிதருடன் நல்லுறவை
      கட்டியெழுப்பணும் – 2
      தூய ஆவியின் மெருகேற்றம்
      இயேசுவைக் காட்டணும்
      தேவன் அழைத்த பந்தயத்தின்
      இலக்கை அடையணும்
      என்றும் பரலோகம் பூரிக்கணும்!

    Maaranum Manam Maaranum Lyrics in English

    maaranum manam maaranum
    manam inte maaranum
    alai paaynthidum manam maaranum
    thadumaariyae siraiyaakidum
    manam inte maaranum
    atiyodu maaranum
    manam manam kalmanam maaranum
    vakkira silaikalai olikkanum
    aaviyin alai puranntoodanum
    saththiya vasanam pathikkanum
    kanintha ithayam kaananum!

    1. saththiya olip paarvaiyil
      than nilai unaranum
      paramanukkethiraay seytha kuttam
      oppukkollanum – 2
      thirumakan siluvai piraayachchiththam
      sontham konndaadanum
      pithaa valangum mannippai
      aarath thaluvanum – avar
      anpukkuch sarannaakanum!
    2. aaviyin thina oottaththilae
      thanivaeraay thulanganum
      jepa vasanap payirsiyinaal
      thiruvaarppaay maaranum – 2
      poorana vettippaattaka
      vaalvaith thodaranum
      kiristhuvin thooya atichchuvattil
      niththam pin sellanum
      pukal aaraathanai seyyanum!
    3. thaeva anpinil asaivinti
      nilai uruthi kaakkanum
      sakamanitharudan nalluravai
      kattiyeluppanum – 2
      thooya aaviyin merukaettam
      Yesuvaik kaattanum
      thaevan alaiththa panthayaththin
      ilakkai ataiyanum
      entum paralokam poorikkanum!
  • Maara Naatha மாராநாதா

    மாராநாதா அல்லேலூயா
    இயேசுராஜா வரப்போகிறார்
    அல்லேலூயா பாடி துதித்திடு
    ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு

    கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே
    ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே
    ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே
    ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே

    கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது
    கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது

    பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே
    பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே
    பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்
    பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்

    இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே
    இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே
    சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே
    ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே


    Maara Naatha Lyrics in English

    maaraanaathaa allaelooyaa
    Yesuraajaa varappokiraar
    allaelooyaa paati thuthiththidu
    aaravaaram seythu makilnthidu

    kotik koti thootharodu paadiduvomae
    jeevan mooppar koottaththodu thuthiththiduvomae
    jeevan thanthu meettavaraik kanndiduvomae
    jeevanullor thaesaththilae makilnthiduvomae

    kavalaiyillaa thaesamathu, kannnneerillaa thaesamathu
    karththarodu vaalkinta thaesamathu

    palingu nathiyin oraththilae paadiduvomae
    parisuththar koottaththodu aaraathippomae
    paasamulla naesar maarpil ilaippaaruvom
    paadukalai maranthu angae aatippaaduvom

    Yesuvukkaay vaalnthavarkku palan kitaikkumae
    Yesuvodu vaalvatharku kirupai kitaikkumae
    sooriyanum santhiranum angae illaiyae
    jeeva thaevan oliyaaka pirakaasippaarae

  • Maaperum Aruvatai Onru மாபெரும் அறுவடை ஒன்று

    ஏறெடுத்துப் பாருங்கள்

    மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது
    காத்திருக்கும் சபை சாட்சி பெறும் .. இயேசு
    வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்

    1. கோடிக்கோடியாக மக்கள் உண்டு
      உடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு!
      ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
      பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
    2. சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்
      சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்?
      தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டு
      பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

    3.அன்பெனும் சங்கிலி கைகள் கட்ட
    சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
    இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
    பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

    4.மிஷனெரிச் சபைகள் தோன்றும் காலம்
    சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
    தயங்கினால் சந்தர்ப்பம் கைநழுவும்
    பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

    5.உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!
    உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க!
    அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
    பெரும் பாரதம்! பெரும் பாரதம்!


    Maaperum Aruvatai Onru Lyrics in English

    aeraெduththup paarungal

    maaperum aruvatai ontu kann ethir therikintathu
    kaaththirukkum sapai saatchi perum .. Yesu
    veettirukkum sapai saatchi sollum

    1. kotikkotiyaaka makkal unndu
      udal ullam iranntilum thaevaikonndu!
      oti otich seyya idamum unndu
      perum paaratham! perum paaratham!
    2. saththiyam pettavar kooraavittal
      supaniththiya paakkiyam yaar peruvaar?
      thonnnnoottu aatru ainthu koti unndu
      perum paaratham! perum paaratham!

    3.anpenum sangili kaikal katta
    sapai sangaththin palakaikal otivida
    Yesuvin naamam uyarththappadum
    perum paaratham! perum paaratham!

    4.mishanerich sapaikal thontum kaalam
    suvisesham solla ithu vasantha kaalam
    thayanginaal santharppam kainaluvum
    perum paaratham! perum paaratham!

    5.umakkaaka ulaiththidum pakthar vaalka!
    um pannikkaakak koduththidum makkal vaalka!
    anaiththu ullaththilum Yesu vaalka
    perum paaratham! perum paaratham!

  • Maanuvel Thondare மானுவேல் தொண்டரே

    மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்து
    மகிழ்ந்து பூரிப்போம்

    மானிலமீது சமாதானமா மென்ற
    வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
    நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
    நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
    நாடுவோம் – அதைத் தேடுவோம் – இனி
    நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்

    தீர்க்க ருரைப்படியே – உலகெங்கும்
    தீங்கீலாக் காலம் வரும்
    தாக்கும் படைக்கலங்கள் – கிருஷிகச்
    சாதனமாகி விடும்
    மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்
    மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
    வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்
    நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
    நிலைத்து – அன்பு – வளர்த்துக் – கரங்
    கொடுத்து – உற – வடுத்துமதிப்பர்

    போன காலங்களிலே – நடந்திட்ட
    பொல்லாங்கும் பாடுகளும்
    ஈனத் துரோகங்களும் – விளைவித்த
    ஈங்கிசை போதும் இனி
    வானபரனின் மலரடிக் கண்ணுற்று
    வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று
    மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு
    மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
    மாட்சியாய் – அவர் – சாட்சியாய் – இந்த
    மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே

    சர்வ ஜனநேசம் – நிறைவுறத்
    தாமதமானாலும்
    கர்வம் பொறாமை பகை – தடை செய்யக்
    காலம் நீடித்தாலும்,
    அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால்
    ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
    இருளகல விடிவெள்ளி தோணுது
    எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
    யேசுவே – இக – மாசுடர் – அவர்
    நேசமே – புவித் – தோஷமகற்றிடும்


    Maanuvel Thondare Lyrics in English

    maanuvael thonndarae – aarpparinthu
    makilnthu poorippom

    maanilameethu samaathaanamaa menta
    vaanavar vaalththuvaraa thenanampum
    naanilamengum sakothara aikkiyam
    nannnum pakalarunnothayam aakuthae
    naaduvom – athaith thaeduvom – ini
    naamumuyarsi kaiyaaduvom paaduvom

    theerkka ruraippatiyae – ulakengum
    theengaீlaak kaalam varum
    thaakkum pataikkalangal – kirushikach
    saathanamaaki vidum
    maakka lelaamorae thanthaiyin makkalaay
    mannan yaesuvukku lantana tholaraay
    vaakkuvaathangal valakkukal yuththangal
    neekki yinakkam porumai narkunangal
    nilaiththu – anpu – valarththuk – karang
    koduththu – ura – vaduththumathippar

    pona kaalangalilae – nadanthitta
    pollaangum paadukalum
    eenath thurokangalum – vilaiviththa
    eengisai pothum ini
    vaanaparanin malaratik kannnuttu
    valla parisuthth anpinaavi pettu
    maanuvaelae saiyar naamamae munnittu
    mattumavar seykai maathiri naam kattu
    maatchiyaay – avar – saatchiyaay – intha
    mannnnilaththaar oththu vaalach sepiththumae

    sarva jananaesam – niraivurath
    thaamathamaanaalum
    karvam poraamai pakai – thatai seyyak
    kaalam neetiththaalum,
    arul nampikkai konndarpa menu nammaal
    aanathaich seykuvom munthoothar polavae
    irulakala vitivelli thonuthu
    engum naduppakal mangalanaal varum
    yaesuvae – ika – maasudar – avar
    naesamae – puvith – thoshamakattidum

  • Maanitarae! Poerrunkalae! மானிடரே! போற்றுங்களே!

    இயேசு மேலானவர்

    மானிடரே! போற்றுங்களே!
    மாநிலத்தில் பறைசாற்றுங்களே!

    மேலானவர் இயேசு மேலானவர்
    ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2

    1. இருளில் ஒளியும் இயேசு – நம்
      இதய விளக்கும் இயேசு
      மருள்வோர் வழியும் இயேசு – அவர்
      மனதின் உறுதி இயேசு
      அருளின் சுனையும் இயேசு – உயர்
      அன்பின் பொருளும் இயேசு
    2. உலகம் அவரால் வாழும் – அதில்
      உயிர்கள் புனிதம் ஆகும்
      பலரின் வாழ்வு மாறும் – பாவப்
      பழிகள் யாவும் தீரும்
      நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி
      நிறையக் குடும்பம் தோறும்
    3. அலைகள் வாழ்வில் மோதும் – பலர்
      அழிவைக் காண நேரும்
      மலைகள் பெயர்ந்து போகும் – பலர்
      மனங்கள் பயந்து சாகும்
      நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை
      நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்

    Maanitarae! Poerrunkalae! Lyrics in English

    Yesu maelaanavar

    maanidarae! pottungalae!
    maanilaththil paraisaattungalae!

    maelaanavar Yesu maelaanavar
    aakaayam poomikkum maelaanavar – 2

    1. irulil oliyum Yesu – nam
      ithaya vilakkum Yesu
      marulvor valiyum Yesu – avar
      manathin uruthi Yesu
      arulin sunaiyum Yesu – uyar
      anpin porulum Yesu
    2. ulakam avaraal vaalum – athil
      uyirkal punitham aakum
      palarin vaalvu maarum – paavap
      palikal yaavum theerum
      nilavum makilchchi naalum – ini
      niraiyak kudumpam thorum
    3. alaikal vaalvil mothum – palar
      alivaik kaana naerum
      malaikal peyarnthu pokum – palar
      manangal payanthu saakum
      nilaiyaayk karangal korppaar – nammai
      nijamaayk karaiyil serppaar
  • Maanida Uruvil மானிட உருவில்

    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

    ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
    அவனியிலே உனக்காய் உதித்தார்
    அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
    அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

    கூவி அழைப்பது தேவ சத்தம்
    குருசில் வடிவது தூய ரத்தம்
    பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
    பாக்கியம் நல்கிட அவரே வழி

    இயேசுவின் நாமத்தில் வல்லமையே
    இதை நாடுவோர்க்கு விடுதலையே
    துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
    இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

    அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
    அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
    உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
    உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

    கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
    கடைசி வரை தளராதே நம்பு
    என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
    இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்


    Maanida Uruvil Lyrics in English

    maanida uruvil avathariththa
    maasudar oliyae kiristhaesuvae

    aaththuma meetpaiyum aerpaduththa
    avaniyilae unakkaay uthiththaar
    annti varuvaay vaennti ataivaay
    annnalae aaththuma vinai neekkuvaar

    koovi alaippathu thaeva saththam
    kurusil vativathu thooya raththam
    paava mannippu aathma iratchippu
    paakkiyam nalkida avarae vali

    Yesuvin naamaththil vallamaiyae
    ithai naaduvorkku viduthalaiyae
    thunpa kattukal kaaval siraikal
    intu akattuvaar neeyum nampi vaa

    arputhangal karththar seythiduvaar
    athisayangal avar kaatdiduvaar
    unnmai niraintha ullam thiranthu
    un karththar Yesuvai visuvaasippaay

    karththar unnai ini kaividaarae
    kataisi varai thalaraathae nampu
    entum nallavar karththar vallavar
    Yesuvidam vanthaal purampae thallaar

  • Maangal neerodai vaanjithu மான்கள் நீரோடை வாஞ்சித்து

    மான்கள் நீரோடை வாஞ்சித்து
    கதறும்போல் தேவனே
    எந்தன் ஆத்துமா உம்மையே
    வாஞ்சித்துக் கதறுதே
    தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
    கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

    தேவன் மேல் ஆத்துமாவே
    தாகமாயிருக்கிறதே
    தேவனின் சந்நிதியில் நின்றிட
    ஆத்துமா வாஞ்சிக்குதே

    ஆத்துமா கலங்குவதேன்
    நேசரை நினைத்திடுவாய்
    அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
    துதித்துப் போற்றிடுவோம்

    யோர்தான் தேசத்திலும்
    எர்மோன் மலைகளிலும்
    சிறுமலைகளிலிருந்தும் உம்மை
    தினமும் நினைக்கின்றேன்

    கன்மலையாம் தேவன்
    நீர் என்னை ஏன் மறந்தீர்
    எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
    துக்கத்தால் திரிவதேனோ

    தேவரீர் பகற்காலத்தில்
    கிருபையைத் தருகின்றீர்
    இரவினில் பாடும் பாட்டு எந்தன்
    வாயினிலிருக்கிறது


    Maangal neerodai vaanjithu Lyrics in English

    maankal neerotai vaanjiththu
    katharumpol thaevanae
    enthan aaththumaa ummaiyae
    vaanjiththuk katharuthae
    thanjam neer ataikkalam neer
    kottaைyum neer entum kaappeer

    thaevan mael aaththumaavae
    thaakamaayirukkirathae
    thaevanin sannithiyil nintida
    aaththumaa vaanjikkuthae

    aaththumaa kalanguvathaen
    naesarai ninaiththiduvaay
    anparin iratchippinaal thinamum
    thuthiththup pottiduvom

    yorthaan thaesaththilum
    ermon malaikalilum
    sirumalaikalilirunthum ummai
    thinamum ninaikkinten

    kanmalaiyaam thaevan
    neer ennai aen marantheer
    ethirikalaal otingi atiyaen
    thukkaththaal thirivathaeno

    thaevareer pakarkaalaththil
    kirupaiyaith tharukinteer
    iravinil paadum paattu enthan
    vaayinilirukkirathu

  • Maa Thooya Aavi! Irangum மா தூய ஆவி! இறங்கும்

    மா தூய ஆவி! இறங்கும்
    விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
    ஞானாபிஷேக தைலம் நீர்
    நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன்.


    Maa Thooya Aavi! Irangum Lyrics in English
    maa thooya aavi! irangum
    vinn theepam nenjil aettidum
    njaanaapishaeka thailam neer
    nal varam aelum eekireer. aamaen.