Blog

  • Kuur Aani Thaekam Paaya கூர் ஆணி தேகம் பாய

    1. கூர் ஆணி தேகம் பாய
      மா வேதனைப்பட்டார்
      பிதாவே, இவர்கட்கு
      மன்னிப்பீயும் என்றார்
    2. தம் ரத்தம் சிந்தினோரை
      நல் மீட்பர் நிந்தியார்
      மா தெய்வ நேசத்தோடு
      இவ்வாறு ஜெபித்தார்.
    3. எனக்கே அவ்வுருக்கம்
      எனக்கே அச்செபம்
      அவ்வித மன்னிப்பையே
      எனக்கும் அருளும்

    Kuur Aani Thaekam Paaya Lyrics in English

    1. koor aanni thaekam paaya
      maa vaethanaippattar
      pithaavae, ivarkatku
      mannippeeyum entar
    2. tham raththam sinthinorai
      nal meetpar ninthiyaar
      maa theyva naesaththodu
      ivvaatru jepiththaar.
    3. enakkae avvurukkam
      enakkae achchepam
      avvitha mannippaiyae
      enakkum arulum
  • Kutram Neega Kaluvineere குற்றம் நீங்க கழுவினீரே

    குற்றம் நீங்க கழுவினீரே
    சுற்றி வருவேன் உம்மையே
    பற்றிக் கொண்டேன் உம் வசனம்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன்
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    1.இரக்கம் கண்முன்னே
    உம் வாக்கு என் நாவில்
    நான் ஏன் கலங்கணும்
    நன்றி கூறுவேன்
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    2.மகிமை மேகத்திற்குள்
    மறைந்து நான் வாழ்கிறேன்
    இரட்சகர் இயேசு தான்
    எப்போதும் என்முன்னே
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்

    3.உம்மையே நம்பியுள்ளேன்
    உம்மோடு தான் நடப்பேன்
    தடுமாற்றம் எனக்கில்லை
    தள்ளாடுவதும் இல்லை
    நீர்தானே யெஹோவா ராஃப்பா
    சுகமானேன் கல்வாரி காயங்களால்
    குற்றம் நீங்க கழுவினீரே
    சுற்றி வருவேன் உம்மையே
    பற்றிக் கொண்டேன் உம் வசனம்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன்


    Kutram Neega Kaluvineere Lyrics in English

    kuttam neenga kaluvineerae
    sutti varuvaen ummaiyae
    pattik konntaen um vasanam
    vetti mael vetti kaannpaen
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal

    1.irakkam kannmunnae
    um vaakku en naavil
    naan aen kalanganum
    nanti kooruvaen
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal

    2.makimai maekaththirkul
    marainthu naan vaalkiraen
    iratchakar Yesu thaan
    eppothum enmunnae
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal

    3.ummaiyae nampiyullaen
    ummodu thaan nadappaen
    thadumaattam enakkillai
    thallaaduvathum illai
    neerthaanae yehovaa raaqppaa
    sukamaanaen kalvaari kaayangalaal
    kuttam neenga kaluvineerae
    sutti varuvaen ummaiyae
    pattik konntaen um vasanam
    vetti mael vetti kaannpaen

  • Kuthookalam Niraintha Nannaal குதூகலம் நிறைந்த நன்னாள்

    குதூகலம் நிறைந்த நன்னாள்
    நடுவானில் மின்னிடுமே
    இதுவரை இருந்த துன்பமில்லை
    இனி என்றுமே ஆனந்தம்

    1. தள கர்த்தனாம் இயேசு நின்று
      யுத்தம் செய்திடுவார் நன்று
      அவர் ஆவியினால் புது பெலனடைந்து
      ஜெயகீதங்கள் பாடிடுவோம் — குதூகலம்
    2. புவி மீதினில் சரீர மீட்பு
      என்று காண்போம் என ஏங்கும்
      மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
      மணவாட்டியாய்ச் சேர்த்திடவே — குதூகலம்
    3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
      அவர் வருகையை எதிர் நோக்கி
      நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
      நாம் ஆயத்தமாகிடுவோம் — குதூகலம்
    4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
      சீயோன் நகர்தனிலே சேர்க்க
      அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
      அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் — குதூகலம்
    5. தேவ தூதர்கள் கானமுடன்
      ஆரவார தொனி கேட்கும்
      அவர் கிருபையினால் மறுரூபமாக
      நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் — குதூகலம்

    Kuthookalam Niraintha Nannaal Lyrics in English

    kuthookalam niraintha nannaal
    naduvaanil minnidumae
    ithuvarai iruntha thunpamillai
    ini entumae aanantham

    1. thala karththanaam Yesu nintu
      yuththam seythiduvaar nantu
      avar aaviyinaal puthu pelanatainthu
      jeyageethangal paadiduvom — kuthookalam
    2. puvi meethinil sareera meetpu
      entu kaannpom ena aengum
      mana makilnthidavae avar vanthiduvaar
      manavaattiyaaych serththidavae — kuthookalam
    3. jepa vilippudan vaanjaiyaaka
      avar varukaiyai ethir Nnokki
      nava erusalaemaay thooyaalangirthamaay
      naam aayaththamaakiduvom — kuthookalam
    4. jeeva oli veesum karkalaaka
      seeyon nakarthanilae serkka
      arul suranthirunthaar naamam varainthirunthaar
      avar makimaiyil aarpparippom — kuthookalam
    5. thaeva thootharkal kaanamudan
      aaravaara thoni kaetkum
      avar kirupaiyinaal maruroopamaaka
      nammai inithudan serththiduvaar — kuthookalam
  • Kuthookalam Konndaattamae குதூகலம் கொண்டாட்டமே

    குதூகலம் கொண்டாட்டமே
    என் இயேசுவின் சந்நிதானத்தில்
    ஆனந்தம் ஆனந்தமே
    என் அப்பாவின் திருப்பாதத்தில்

    1. பாவமெல்லாம் பறந்தது
      நோய்களெல்லாம் தீர்ந்தது
      இயேசுவின் இரத்தத்தினால்
      கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
      பரிசுத்த ஆவியினால்
    2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
      தேவாலயம் நாமே
      ஆவியான தேவன் அச்சாரமானார்
      அதிசயம் அதிசயமே
    3. வல்லவர் என் இயேசு
      வாழ வைக்கும் தெய்வம்
      வெற்றிமேலே வெற்றி தந்தார்
      ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
      ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
    4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
      நேசர் வருகின்றார்
      ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
      மகிமையில் பிரவேசிப்போம்

    Kuthookalam Konndaattamae Lyrics in English

    kuthookalam konndaattamae
    en Yesuvin sannithaanaththil
    aanantham aananthamae
    en appaavin thiruppaathaththil

    1. paavamellaam paranthathu
      Nnoykalellaam theernthathu
      Yesuvin iraththaththinaal
      kiristhuvukkul vaalvu kirupaiyaal meetpu
      parisuththa aaviyinaal
    2. thaevaathi thaevan thinamthorum thangum
      thaevaalayam naamae
      aaviyaana thaevan achchaாramaanaar
      athisayam athisayamae
    3. vallavar en Yesu
      vaala vaikkum theyvam
      vettimaelae vetti thanthaar
      orumanamaay kooti osannaa paati
      oorellaam kotiyaettuvom
    4. ekkaala saththam, thootharkal koottam
      naesar varukintar
      orunoti poluthil maruroopamaavom
      makimaiyil piravaesippom
  • Kurusinmel kurusinmel குருசின்மேல் குருசின்மேல்

    குருசின்மேல் குருசின்மேல்
    காண்கின்றதாரிவர்
    பிராணநாதன் பிராணநாதன்
    என் பேர்க்காய்ச் சாகின்றார்

    பாவத்தின் காட்சியை
    ஆத்துமாவே பார்த்திடாய்
    தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

    இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
    இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

    பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
    தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

    கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
    குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

    சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
    சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

    இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
    இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்


    Kurusinmel kurusinmel Lyrics in English

    kurusinmael kurusinmael
    kaannkintathaarivar
    piraananaathan piraananaathan
    en paerkkaaych saakintar

    paavaththin kaatchiyai
    aaththumaavae paarththidaay
    thaevakumaaran maa saapaththilaayinaar

    intha maa naesaththai ninthaiyaay thallinaen
    immakaa paavaththai enthaiyae mannippeer

    paavaththai naesikka naan inich selvaeno
    thaevanin pillaiyaay jeevippaen naanitho

    kashdangal vanthaalum nashdangal naernthaalum
    kurusin kaatchiyai tharisiththuth thaeruvaen

    sooraavaliyaip pol soolnthidum aapaththil
    siluvaiyin naesaththai sinthiththu Nnokkuvaen

    immakaa naesaththai aathmaavae sinthippaay
    immaanuvaelae neer ennaiyum naesiththeer

  • Kurusinil Thongiyae குருசினில் தொங்கியே

    குருசினில் தொங்கியே குருதியும் வடிய
    கொல்கதா மலைதனிலே – நம்
    குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
    கொள்ளாய் கண் கொண்டு

    1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
      சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
      திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
      சேனைத்திரள் சூழ — குருசினில்
    2. பாதகர் நடுவில் பாவியினேசன்
      பாதகன் போல் தொங்க – யூத
      பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
      படுத்திய கொடுமைதனை — குருசினில்
    3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
      சகியாமல், நாணுதையோ! – தேவ
      சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
      துடிக்கா நெஞ்சுண்டோ? — குருசினில்
    4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
      இறைவன் விலாவதிலே – அவர்
      தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
      திறந்தூறோடுது பார் — குருசினில்
    5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
      ஏங்கிப் புலம்பலையோ? – நின்
      எருசலையதிபன் இள மணவாளன்
      எடுத்த கோல மிதோ? — குருசினில்

    Kurusinil Thongiyae Lyrics in English

    kurusinil thongiyae kuruthiyum vatiya
    kolkathaa malaithanilae – nam
    kuruvaesu suvaami kodun thuyar paavi,
    kollaay kann keாnndu

    1. sirasinil munnmuti uruththida, arainthae
      siluvaiyil serththaiyo! – theeyar
      thirukkarang kaalkalil aannikalatiththaar,
      senaiththiral soola — kurusinil
    2. paathakar naduvil paaviyinaesan
      paathakan pol thonga – yootha
      paathakar parikaasangal pannnnip
      paduththiya kodumaithanai — kurusinil
    3. santhira sooriya sasala vaan senaikal
      sakiyaamal, naanuthaiyo! – thaeva
      sunthara maintha nuyir vidukaatchiyaal
      thutikkaa nenjunntoo? — kurusinil
    4. eettiyaal sevakan ettiyae kuththa
      iraivan vilaavathilae – avar
      theettiya thitchaைk kuruthiyum jalamum
      thiranthooroduthu paar — kurusinil
    5. erusalaem maathae, maruki neeyaluthu
      aengip pulampalaiyo? – nin
      erusalaiyathipan ila manavaalan
      eduththa kola mitho? — kurusinil
  • Kuritha kalathirku குறித்த காலத்திற்கு

    குறித்த காலத்திற்கு என்னில்
    தரிசனம் வைத்தவரே
    அது முடிவிலே விளங்கும்
    பொய் சொல்லாது
    அதில் தாமதம் இல்லை என்றீர்

    துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
    துவங்கின இயேசுவை துதிப்போம்
    அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    ஏறிட்டு பார் என்று தேசங்கள்
    அனைத்தையும்
    என் கையில் கொடுத்தீரே
    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    மேலான இலக்கை எதிர் நோக்கி
    ஓட புது பெலன் தந்தீரே

    முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
    போகின்ற தூரம் வெகுதூரம் என்று
    புறப்பட செய்தீரே

    அந்நியனாக கால் வைத்த இடத்தை
    கரங்களில் கொடுத்தீரே
    தேவைகள் எல்லாம் அற்புதமாக
    சந்தித்து நடத்தினீரே


    Kuritha kalathirku levi-4 Lyrics in English

    kuriththa kaalaththirku ennil
    tharisanam vaiththavarae
    athu mutivilae vilangum
    poy sollaathu
    athil thaamatham illai enteer

    thuthippom Yesuvai thuthippom
    nammil tharisanam vaiththaar thuthippom
    thuvangina Yesuvai thuthippom
    athai niraivaetti mutippaar thuthippom

    ennudan vanthor pirinthu sentum
    thodarnthu sumantheerae
    aerittu paar entu thaesangal
    anaiththaiyum
    en kaiyil koduththeerae
    ennudan vanthor pirinthu sentum
    thodarnthu sumantheerae
    maelaana ilakkai ethir Nnokki
    oda puthu pelan thantheerae

    mutiyaathu entu oti olinthum thaeti vantheerae
    pokinta thooram vekuthooram entu
    purappada seytheerae

    anniyanaaka kaal vaiththa idaththai
    karangalil koduththeerae
    thaevaikal ellaam arputhamaaka
    santhiththu nadaththineerae

  • Kuraiyatha Anbu Kadal Pola Vanthu குறையாத அன்பு கடல் போல வந்து

    குறையாத அன்பு கடல் போல வந்து

    நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த

    அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

    பலகோடி கீதம் உருவாகுதே – 2

    கண்மூடி இரவில் நான் தூங்கும் போது

    கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2

    உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

    மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2

    அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

    தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2

    மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

    துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2

    இருள் வந்து சூழ பயமேவும் காலை

    அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2

    தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை

    சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2


    Kuraiyatha Anbu Kadal Pola Vanthu Lyrics in English

    kuraiyaatha anpu kadal pola vanthu

    niraivaaka ennil alaimothuthae – antha

    alaimeethu Yesu asainthaati varavae

    palakoti geetham uruvaakuthae – 2

    kannmooti iravil naan thoongum pothu

    kannnnaana Yesu enaik kaakkintay – 2

    unnai ennnnaatha ennai ennaalum ennnni

    mannmeethu vaala vali seykintay aa…. naan – 2

    ativaanam thontum vitivelli entum

    thodarkinta iravin mutivaakumae – 2

    mannnnil thutikkinta aelai vatikkinta kannnneer

    thutaikkinta Yesu arasaakumae – 2

    irul vanthu soola payamaevum kaalai

    arul thanthu ennai annaiththaaluvaay – 2

    theemai sirai konndu enthan ulamennum paravai

    sirai meenndu vaala valikaattinaay aa… naan – 2

  • Kuppayana Ennai குப்பையான என்னை

    குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
    உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
    நீங்கதான் எல்லாம் இயேசப்பா
    என் இயேசப்பா
    உம்மை விட யாருமில்லப்பா

    1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
      கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
      சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
      என் இயேசப்பா
      சோகங்கள் தீர்த்தீரப்பா
    2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
      ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
      தாகத்தால் தவித்தேனப்பா
      என் இயேசப்பா
      ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

    Kuppayana Ennai Lyrics in English

    Kuppayana Ennai
    kuppaiyaana ennai kopuraththil vaiththeerae
    uthavaatha ennai umakkaay therintheerae
    neengathaan ellaam iyaesappaa
    en iyaesappaa
    ummai vida yaarumillappaa

    1. kalangina enakku aaruthal aliththeerae
      kannnneeril enakku kirupai thantheerae
      sornthup poy irunthaenappaa
      en iyaesappaa
      sokangal theerththeerappaa
    2. thanimaiyil enakku thunnaiyaay neenteerae
      aanaathai enakku ataikkalam thantheerae
      thaakaththaal thaviththaenappaa
      en iyaesappaa
      jeeva thannnneer thantheerappaa
  • Kumbidugiren Naan Kumbidugiren Engal கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்

    கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்

    குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

    சரணங்கள்

    1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை

    ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்

    நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ

    நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்

    தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய

    சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்

    உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்

    தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு

    1. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்

    ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்

    திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது

    சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்

    குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்

    குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்

    அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என

    தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு


    Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics in English

    kumpidukiraen naan kumpidukiraen – engal
    kuruvaesunaathar pathang kumpidukiraen

    saranangal

    1. ampuvi pataiththavanaik kumpidukiraen – enai

    aanndavanai, meenndavanaik kumpidukiraen

    nampumati yaarkkarulaik kumpidukiraen – pava

    naasanaik krupaasanaik kumpidukiraen

    thampamenak kaanavanaik kumpidukiraen – niththiya

    saruva thayaaparanaik kumpidukiraen

    umpar tholum vasthuvaiyae kumpidukiraen – thonith

    thosannaa vosannaaventu kumpidukiraen — kumpidu

    1. oru saruvaesuranaik kumpidukiraen – ontum

    oppathillaa meypporulaik kumpidukiraen

    thiruvuruvaanavanaik kumpidukiraen – thavithu

    simmaasanaathipanaik kumpidukiraen

    kuruvena vanthavanaik kumpidukiraen – yoothar

    kurukula vaenthanaik kumpidukiraen

    arumai ratchakanaik kumpidukiraen – ena

    thaaththumaavin naesarthanaik kumpidukiraen — kumpidu