Author: admin

  • பொல்லாத மனுஷன் புரிஞ்சு Pollatha manushan purinysu

    பொல்லாத மனுஷன் புரிஞ்சு
    கொள்ளவில்லையே நம்
    நல்லாயன் இயேசுவை
    அறிஞ்சு கொள்ளவில்லையே இதை

    காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
    மலராய் வாழ்கிறான் தினம்
    பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
    பூவாய் வாழ்கிறான்
    ஜீவனும் மரணமும் வாழ்வும்
    தாழ்வும் தேவனின் கையிலே
    எது நடந்தாலும் செய்வோம் நாமும்
    தேவனின் சித்தமே

    மனம் போன போக்கில் தினமொரு
    திசையில் அலைந்து திரிகிறான்
    பணம் பத்தும் செய்யும் என்று
    பகுடி பேரி ஆணவப்படுகிறான்
    செல்வம் கல்வி ஞானம் உயர்வு
    தேவனின் கையிலே
    உயர்த்தும் தேவனின்
    கையினில் அடங்கினால்
    உயர்வு நிச்சயமே


    Pollatha manushan purinysu
    kollavillaiye nam
    nallayan iyesuvai
    arinysu kollavillaiye ithai

    kalaiyil malarnthu malaiyil uthirum
    malaray vazhkiran thinam
    puththuk kulungki vatip pokum
    puvay vazhkiran
    jivanum maranamum vazhvum
    thazhvum thevanin kaiyile
    ethu natanthalum seyvom namum
    thevanin siththame

    manam pona pokkil thinamoru
    thisaiyil alainthu thirikiran
    panam paththum seyyum enru
    pakuti peri aanavappatukiran
    selvam kalvi nyanam uyarvu
    thevanin kaiyile
    uyarththum thevanin
    kaiyinil atangkinal
    uyarvu nissayamE


  • போற்று போற்று Porru porru

    போற்று போற்று போற்று நாம்
    இயேசுவின் நாமத்தைப் போற்று
    வாழ்த்து .வாழ்த்து வாழ்த்து நம்மை
    வாழ வைக்கும் தேவனை வாழ்த்து
    திசையெங்கும் சுவிசேஷமே
    பரவட்டும் இயேசு நாமமே

    எங்க ராஜா இயேசு ராஜா
    எங்கக் கொடி தான் சிலுவைக்கொடி தான்
    நாங்க போடும் கோஷம் அல்லேலூயா
    நாங்க போடும் கோஷம் அல்லேலூயா
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

    இந்தியா இரட்சிப்படைய வேண்டும்
    இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்
    பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம்
    பரிசுத்த தேசமாய் வேண்டும்

    மாம்சமான யாவர் மேலும்
    தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும்
    சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்து
    ஜீவப் பரலோகம் நிரம்பிட வேண்டும்


    Porru porru porru nam
    iyesuvin namaththaip porru
    vazhththu vazhththu vazhththu nammai
    vazha vaikkum thevanai vazhththu
    thisaiyengkum suviseshame
    paravattum iyesu namame

    engka raja iyesu raja
    engkak koti than siluvaikkoti than
    nangka potum kosham alleluya
    nangka potum kosham alleluya
    alleluya oosanna alleluya oosanna

    inthiya iratsippataiya ventum
    iyesuve theyvam enru solla ventum
    pavaththin irulellam akanru thesam
    parisuththa thesamay ventum

    mamsamana yavar melum
    theva aavi uurrappata ventum
    saththanin rajjiyam azhinthu
    jivap paralokam nirampita ventum


  • ரோட்டுபுற வீட்டுல Rottupura vittula

    ரோட்டுபுற வீட்டுல
    ஒதுக்குப்புற திண்னையிலே
    ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி
    செல்லம்மா அந்த பாட்டை கேட்டு
    திகைச்சுப்புட்டேன் சின்னம்மா

    என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா
    நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா
    நம்மை காக்கும் தெய்வம் நம்மை
    நடத்தும் தெய்வம் இயேசுதான்னு
    சொல்றாங்க சின்னம்மா

    வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா பல
    துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா
    என்னால தாங்க முடியல இதில்
    மீள முடியல
    இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா

    காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
    இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா
    தீய சக்திகளை அழிக்கும் தெய்வம்
    இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
    செல்லம்மா இனி அவரையே
    நம்பி வாழ்வோம் சின்னம்மா


    Rottupura vittula
    othukkuppura thinnaiyile
    oru pattu onnu kekkuthati
    sellamma antha pattai kettu
    thikaissupputten sinnamma

    ennamma paturangka sellamma
    ninna kalu pinni possu sinnamma
    nammai kakkum theyvam nammai
    nataththum theyvam iyesuthannu
    solrangka sinnamma rottu

    vazhkkaiyila nimmathiyilla sinnamma pala
    thunpangkal anupavikkiren sellamma
    ennala thangka mutiyala ithil
    mila mutiyala
    iyesuvitam ooti vanthen sellamma

    kaththu karuppu maya manthiram sinnamma
    iraththiriyile thukkam varal sellamma
    thiya sakthikalai azhikkum theyvam
    iyesuthannu therinysukkitten
    sellamma ini avaraiye
    nampi vazhvom sinnamma rottu


  • ரோஜாப்பூ வாசமலர்கள் Rojappu vasamalarkal

    ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
    நேச மணாளன் மேல் தூவிடுவோம்

    மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
    மெல்லிய சேர்ந்து அள்ளியே வீசி
    நல் மணவாளன் நேசிக்க
    எல்லா மலரையும் தூவிடுவோம்

    மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள
    பெண்ணுடன் அன்பிலும் பேர்பெற்று
    ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க
    வேண்டுதலோடு தூவிடுவோம்

    புத்திர பாக்கியம் புகழுடன் வாழ்வும்
    சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
    நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்
    பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

    கறை திரையற்ற மணவாட்டி சபையை
    இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
    மங்கள நாளை எண்ணியே
    இந்த மணாளன் மேல் தூவிடுவோம்


    Rojappu vasamalarkal nam ippo
    nesa manalan mel thuvituvom

    mallikai mullai sivanthi pissi
    melliya sernthu alliye visi
    nal manavalan nesikka
    ella malaraiyum thuvituvom

    mannanam mappillai panpulla
    pennutan anpilum perperru
    onriththuvazha aantavar aasirvathikka
    ventuthalotu thuvituvom

    puththira pakkiyam pukazhutan vazhvum
    saththiyam santham suththa nal ithayam
    niththiya jivanum perrivarenrum
    pakthiyay vazhnthita thuvituvom

    karai thiraiyarra manavatti sapaiyai
    iraivanam iyesu thannutan serkkum
    mangkala nalai enniye
    intha manalan mel thuvituvom


  • யாருண்டு நாதா Yaruntu natha

    யாருண்டு நாதா என்னை விசாரிக்க
    உறவுகள் இல்லையே
    நீரின்றி யாருண்டு நாதா
    நீரே என் தஞ்சமல்லோ
    நீரே என் தஞ்சமல்லோ

    தனிமையில் கதறிய
    ஆகாரின் குரலைக் கேட்டீர்
    மனம் கசந்து கலங்கி நின்ற
    அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
    நீரே நல்ல மேய்ப்பன்
    வேண்டுதல் கேட்பவரே
    வேண்டுதல் கேட்பவரே

    கண்ணீரின் பாதையிலே
    நடந்திடும் வேளையிலே
    கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
    தேற்றுதே உம் கரமே
    நீரே நல்ல சமாரியனே
    என்னைத் தேற்றிடுவீர்
    என்னைத் தேற்றிடுவீர்

    அடைக்கலம் தேடி வந்தேன்
    உம் சிறகால் என்னை மூடும்
    கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
    விலக்கி காருமையா
    பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன்
    நீரே ஆதரித்தீர்
    நீரே ஆதரித்தீர்


    Yaruntu natha ennai visarikka
    uravukal illaiye
    nirinri yaruntu natha
    nire en thanysamallo
    nire en thanysamallo

    thanimaiyil kathariya
    aakarin kuralaik kettir
    manam kasanthu kalangki ninra
    annalin jepaththai kettir
    nire nalla meyppan
    ventuthal ketpavare
    ventuthal ketpavare

    kannirin pathaiyile
    natanthitum velaiyile
    karam pitiththir enai anaiththir
    therruthe um karame
    nire nalla samariyane
    ennaith therrituvir
    ennaith therrituvir

    ataikkalam theti vanthen
    um sirakal ennai mutum
    kollai noykkum pollappukkum
    vilakki karumaiya
    paraththai um mel vaiththu vitten
    nire aathariththir
    nire aathariththi


  • நான் சிறுமையும் Nan sirumaiyum

    நான் சிறுமையும் எளிமையுமானவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வனைந்ததே
    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே
    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே

    நன்றி நன்றி நன்றி ராஜா

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்
    நன்றி நன்றி நன்றி ராஜா


    Nan sirumaiyum elimaiyumanavan
    nir ennai kannokki parththire
    onrukkum uthavatha kaliman nan
    ennaiyum um karam vanainthathe
    nanri solven en vazhnalellam
    aarathippen ummaiye
    nanri solven en vazhnalellam
    aarathippen ummaiye

    nanri nanri nanri raja

    nir seytha upakarangkal-avai
    enni mutiyathavai
    eppati nanri solven
    ennilla nanmai seythir
    nanri nanri nanri raja


  • மங்களம் செழிக்க Mangkalam sezhikka

    மங்களம் செழிக்க கிருபையருளும்
    மங்கள நாதனே
    மங்கள நித்திய மங்கள நீ
    மங்கள முத்தியும் நாதனும் நீ
    எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
    உத்தம சத்திய நித்திய தத்துவ
    மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்
    ஆபிரகாம் தேவன் நீ

    மணமகன் அவர்களுக்கும்
    மணமகள் அவர்களுக்கும்
    மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
    பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும்
    நித்தியனே உனை துத்தியம் செய்திடும்
    சத்திய வேதர்க்கும்


    Mangkalam sezhikka kirupaiyarulum
    mangkala nathane
    mangkala niththiya mangkala ni
    mangkala muththiyum nathanum ni
    engkal pungkava ni engkal thungkava ni
    uththama saththiya niththiya thaththuva
    meththa makaththuva aththanukkaththanam
    aapirakam thevan ni

    manamakan avarkalukkum
    manamakal avarkalukkum
    manuvelarkkum makanupavarkkum
    pakthiyutan puththi mukthiyaliththitum
    niththiyane unai thuththiyam seythitum
    saththiya vetharkkum


  • ஒலி முக வாசலில் Oli muka vasalil

    ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்
    வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார்
    என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரே
    அவரின் மார்பில் சாய்ந்தவுடன்
    ஆறுதல் வந்ததே
    என் துக்கங்கள் மறைந்ததே

    தாயைப் போல தேற்றினார்
    தந்தையைப் போல அணைத்திட்டார்
    சிநேகிதனைப் போல என்னோடு பேசினார்
    அவர் பேசும் பொழுதே
    என் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியது
    அவர் பாதம் பணிந்தேன்

    போதகரைப் போல போதித்து நடத்தி
    நான் நடக்க வேண்டிய
    பாதையை கண்டித்துணர்த்தி
    என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரே
    அவரின் பாதைகள் எவ்வளவு அருமை


    Oli muka vasalil oliyay iruppavar
    vanaththilirunthu oliyay ennaik kana vanthar
    ennaik kantathum kattiyanaiththare
    avarin marpil saynthavutan
    aaruthal vanthathe
    en thukkangkal marainthathe

    thayaip pola therrinar
    thanthaiyaip pola anaiththittar
    sinekithanaip pola ennotu pesinar
    avar pesum pozhuthe
    en ithayam eekkamellam niraiveriyathu
    avar patham paninthen

    pothakaraip pola pothiththu nataththi
    nan natakka ventiya
    pathaiyai kantiththunarththi
    en kaiyaip pitiththu azhaiththus senrire
    avarin pathaikal evvalavu arumai


  • நளதத் தைலம் நம்ம Nalathath thailam namma

    நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க
    வெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்க
    லீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜா
    லீப்பேனானின் கேதுரு மரம் இயேசுதான்

    இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும்
    இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும்
    அவரின் வாசனை உன் அருகில் இருந்தால்
    சாத்தான் என்றுமே அணுக முடியாது

    இயேசுவின் வாசனை ஆறுதல் தரும்
    இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும்
    அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால்
    எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது


    Nalathath thailam namma iyesuthanungka
    vellaippolam namma iyesu thanungka
    lilippushpam avar mutkalil roja
    lippenanin kethuru maram iyesuthan

    iyesuvin vasanai sukaththaith tharum
    iyesuvin narumanam pelaththaith tharum
    avarin vasanai un arukil irunthal
    saththan enrume anuka mutiyathu

    iyesuvin vasanai aaruthal tharum
    iyesuvin narumanam anpaith tharum
    avarin vasanai un pakkam irunthal
    entha pelavinamum unnai nerungka mutiyathu


  • இந்த மட்டும் காத்த எபெனேசரே Intha mattum kaththa

    இந்த மட்டும் காத்த எபெனேசரே
    இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
    எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
    இந்த வருடத்தின் நாட்களிலே புது

    ஸ்தோத்தரிப்போம் நாமே
    துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
    அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

    யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
    எழும்பி வந்த போதிலும் காத்தவர்
    சாபப் பிசாசின் சோதனை போதிலும்
    இயேசு நாமத்தில் அகற்றியவர்

    சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
    இந்த மாயலோகில் என்னைக் காக்கும்
    தேவனே மகத்தான கிருபை என்மேலே
    மகிபா நீர் ஊற்றிடுமே

    பழமையெல்லாம் ஒழிந்து போனதே
    எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
    உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
    நாங்கள் மறுரூபம் அடைந்திடவே


    intha mattum kaththa epenesare
    inimelum kakkum yekovayire
    enthan vazhkkaiyin immanuvelare
    intha varutaththin natkalile puthu

    sthoththarippom name
    thuthikalutane aarpparippom
    anpar iyesuvai alleluya
    yorthanum sengkatalum nam ethiril
    ezhumpi vantha pothilum kaththavar
    sapap pisasin sothanai pothilum
    iyesu namaththil akarriyavar

    seyaik kakkum oru thayaip polave
    intha mayalokil ennaik kakkum
    thevane makaththana kirupai enmele
    makipa nir uurritume

    pazhamaiyellam ozhinthu ponathe
    ellam puthithaka thevane aanathe
    unthan makimaiyil irangkiye varume
    nangkal marurupam atainthitave